Sunday, January 30, 2011

தோப்புக்கரணத்துக்கு கதையிருக்கு தெரியுமா?

தோப்புக்கரணத்துக்கு கதையிருக்கு தெரியுமா?

விநாயகர் வழிபாட்டில் கைகளால் குட்டிதோப்புக்கரணம் இடுவர். "தோர்பி கர்ணம்' என்னும் வடசொல்லே தோப்புக் கரணம் எனப்படுகிறது. இந்தச்சொல்லுக்கு "கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது' என்று பொருள். விநாயகர், தன் மாமா திருமாலின் சக்கரத்தை வாயில் போட்டுக் கொண்டு கொடுக்க மறுத்து அடம் பிடித்தார்.

அவரைச் சிரிக்க வைத்தால் வாயில் இருந்து சக்கரம் வெளியே வந்துவிடும் என்று எண்ணிய பெருமாள், தன் நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு கரணம் போட்டு வேடிக்கை செய்தார். விநாயகரும் அதைப் பார்த்து சிரிக்க, சக்கரம் கீழே விழுந்துவிட்டது. அதுமுதல் விநாயகரை மகிழ்விப்பதற்காக இவ்வழக்கம் உண்டானது. இவ்வழிபாட்டிற்கு வேறொரு புராணக்காரணமும் உண்டு. தேவர்களைக் கைது செய்த கஜமுகன் என்ற அசுரன் தனக்கு தோப்புக்கரணம் இடும்படி ஆணையிட்டான். விநாயகப்பெருமானை அவனை அழித்து தேவர்களைக் காத்தார். அவருக்கு நன்றிக்கடனாக தேவர்கள் தோப்புக்கரணம் இட்டனர். அதுமுதல் இவ்வழிபாடு உண்டானதாகவும் கூறுவர்

No comments:

Post a Comment