Sunday, January 30, 2011

வால்மீகி

வால்மீகி

தங்களின் குழந்தை மிகப்பெரிய வரலாறை எதிர்காலத்தில் படைக்கப்போகிறான் என் பதை அப்போது அந்த பெற் றோர்கள் உணர்ந்திருக்கவில்லை. வீட்டில் ஏழ்மை இருந்தாலும் குழந்தைக்கு ரத்னாகரன்’ என்று பெயர் சூட்டியிருந்தனர் பெற்றோர்.
தெய்வத்தின் அருளால் பழைய கஞ்சியை மட்டுமே குடித்து வளர்ந்த ரத்னாகரன் பலசாலிவாலிபனான், வறுமையால் பள்ளி செல் லாத ரத்னாகரனின் செயல்பாடு நாளுக்குநாள் மோசமானது.
அதே நேரம் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந் தான்.ஒருநாள் பசி மயக்கத்தில் இருந்த பெற்றோருக்கு “உணவு வாங்கி வருகிறேன்” என சொல்லி வெளியே போனவன் மழையில் மாட் டிக்கொண்டான்.அந்த வழியாக வந்த குதிரை வீரன் “தம்பி! உனக்கு ஏதாவது வேண்டுமா? கேள்” என்றான்.உடனே ரத்னாகரன், தன் கதையை அவனிடம் கூறினான்.
குதிரை வீரன் அவனுக்கு பணம் கொடுத்தாலும் ஒரு நிபந்தனையும் விதித்தான். “உன் பெற்றோருக்கு ஏதாவது வாங்கி கொடுத்துவிட்டு உடனே நீ திரும்பிவிட வேண்டும்.உனக்கு பெரும் செல்வம் கொட்டும் அளவிற்கு ஒருவேலையை நான் தருகிறேன். அதை நீ தொடர்ந்து செய்தால் இந்த உலகிலேயே பெரும் செல்வந்தனாகி விடுவாய்” என்றான்.
ரத்னாகரனுக்கும் அவனது பெற்றோருக்கும் மகிழ்ச்சி ஏற் பட்டது. ரத்னாகரன் குதிரை வீரனை ஒரு குகையில் மீண் டும் சந்தித்தான். அப்போதுதான் அவன் பெரும் கொள் ளைக் கும்பலுடன் அங்கு வசித்தது தெரியவந்தது. படிப் பறிவில்லாத ரத்னாகரனின் மனதை குதிரைவீரன் எளிதாக மாற்றிவிட்டான்.
“கொள்ளையடிப்பது, பணம் தர மறுப்பவர்களை கொலைசெய்வது… இதில் எதை வேண்டுமானாலும் செய். அதில் கிடைப்பதில் பாதி பங்கை எடுத்துக்கொள். மீதியை என்னிடம் கொடுத்துவிடு,” என்றான். அதற்குரிய பயிற்சிகளை எடுத்துக் கொண் டான் ரத்னாகரன்.
ரத்னாகரன் கொலை, கொள்ளையில் ஈடுபட்டான். பணம் சேர்ந்ததும், திருமணமும் செய்துகொண்டான். அவனுக்கு ஒரு மகனும் பிறந்தான்.
ஒருமுறை நாரத முனிவர் ஒரு காட்டின் வழியாக வந்துகொண்டிருந்தார். அவரை வழிமறித்தான் ரத்னாகரன். அவரிடமிருந்த பொருட்களை கேட்டான். உடனே நாரத முனிவர், “நீ யாருக்காக இவற்றை கொள்ளையடிக்கிறாய்?” என்றார்.
என் பெற்றோர், மனைவி, மக்களைக் காப்பாற்ற என்றான் ரத்னாகரன்.
“சரி, உன் வருமானத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் உன் குடும் பத்தார், நீ செய்யும் கொலை, கொள்ளைகளுக்கான பாவத் தையும் ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?” என்றார்.
இதற்கு ரத்னாகரன் ஆம்’ என்றான்.
அப்படியானால் இதற்கு விடை தெரிந்து கொண்டு வா. நீ வரும் வரை நான் இங் கேயே நிற்கிறேன்,” என்றார்.
நாரதரை ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டுரத்னாகரன் வீட்டிற்கு சென்றதும், “என் வருமானத்தில் மகிழ்ச் சியை அனுபவிக்கும் நீங்கள், எனது பாவங்களையும் பங் கிட்டுக் கொள்வீர்களா?” என குடும்பத்தாரிடம் கேட்டான்.
அவனது பெற்றோர், “பெற்றவர்களை காப்பாற்றுவது மகனுடைய கடமை. அவன் செய்யும் தொழிலில் உள்ள பாவ, புண்ணியங்களுக்கு அவனே பொறுப்பாவான்” என்றனர். அவனது மனைவியும், மகனும் இதே பதிலை கூறினர். “மனைவி குழந்தைகளை காப்பாற்றுவது ஒரு ஆண்மகனின் கடமை. அவன் என்ன தொழில் செய்கிறான் என்பதோ, அதில் உள்ள பாவங்கள் பற்றியோ தங்களுக்கு கவலை இல்லை என்றனர்.
இதனால் வருத்தமடைந்த அவன் நாரதரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தனது கண் களை திறந்த அவருக்கு நன்றி யும் கூறினான்.
நாரதர் மகிழ்ந்து, நீ செய்த பாவங்கள் நீங்க வேண்டுமானால் ராம’ நாமத்தை உச்சரி,” என சொல்லி விட்டு சென்றார்.
ரத்னாகரனுக்கு படிப்பறிவு இல்லாததால், அவன் சூராம’ என்ற சொல்லை, சூமரா.. மரா..’ என்றே சொன்னான். அதை வேகமாக சொல்லும் போது, தானாகவே, சூராம ராம’ என மாறியது. அதை சொல்லிக் கொண்டே ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.பல ஆண்டுகள் கடந்தன. அவன் உடலைச் சுற்றி “வால் மீகம்” வளர ஆரம்பித்தது. சூவால்மீகம்’ என்றால் புற்று என பொருள்படும். ஒரு காலகட்டத்தில் இறைவன் அவனுக்கு அருள்பாலித்தார். அவன் புற்றிலிருந்து வெளிப் பட்டதால் “வால்மீகி” என அழைக்கப்பட்டான். அன்று முதல் வால்மீகி முனிவர் என அனைவரும் அழைக்க ஆரம் பித்தனர். இந்த மாபெரும் கொள்ளைக்காரனே பிற்காலத்தில் ராமாயணம் என்னும் மகாகாவியத்தை படைத்தான். இன்றும் இறவாப் புகழுடன் வாழ்கிறான்.





No comments:

Post a Comment