Monday, February 7, 2011

ஐந்து எழுத்துக்கள்

ஐந்து எழுத்துக்கள் (அட்சரங்கள்) அமையப் பெற்றிருக்கும் மந்திரம்!


ந + ம + சி +வா + ய!
மேலோட்டமான பொருள்: நம (வணங்குகிறேன்), சிவாய (சிவனை)!

நுட்பமான பொருள்: (முன்பு அடியேன் ஓம் நம நாராயணாய என்னும்திருவெட்டெழுத்துக்குச் சொன்னது போலத் தான்...)
ந+ம =இல்லை+எனது=எனதில்லை
சிவாய = (அனைத்தும்)சிவனுடையதே!
பஞ்சாட்சரதத்துவம் மிகவும் பெரிது! திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பலவாறு விளக்குவார்!பஞ்சாட்சரமே மொத்தம் ஐந்து வகையாய் இருக்கு!
ஆமாம் மொத்தம் ஐந்து வகையானஐந்தெழுத்து! இதோ.....
நமசிவாய = ஸ்தூல பஞ்சாட்சரம்
சிவாயநம = சூட்சுமபஞ்சாட்சரம்
சிவாயசிவ = கரண பஞ்சாட்சரம்
சிவாய = மகா கரண பஞ்சாட்சரம்
சி =முக்தி பஞ்சாட்சரம்

எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும், ஆண் பெண்பேதமின்றி, சாதி மத பேதமின்றி, தீட்டு/பூட்டு என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல், யார்வேண்டுமானாலும் துதி செய்யவல்லது இந்தத் திருவைந்தெழுத்து!
குளித்தோ, குளிக்காமலோ, உடுத்தியோ உடுத்தாமலோ, உண்டோ, உண்ணாமலோ எப்போது வேண்டுமானாலும் ஜபிக்கவல்ல மந்திரம் இது!
இதன் பெருமையைப் பலரும் போற்றி உள்ளனர். திருமூலர்சிவசிவ என்று சிந்தித்து இருந்தால் தீவினை எல்லாம் தீரும் என்கிறார்

No comments:

Post a Comment