Thursday, April 21, 2011

மனக் கவலை தீர-

மனக் கவலை தீர-
தினமும் இரவு உணவிற்குப் பிறகு,ஒரு கரண்டி ரோஜா குல்கந்து சாப்பிட்டுவிட்டு,250 மி.லி.காய்ச்சிய பசும்பாலை சாப்பிட்டு வந்தால் மனக்கவலைகள் தீரும்.
எக்காரணம் கொண்டும் சூரிய அஸ்தமானம் ஆன பின்பு
தயிர் சேர்த்த உணவுகள் சேர்க்கக் கூடாது.அப்படிச் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய்விடும்.
வீட்டில் துளசி செடியும்,மல்லிகைச் செடியும் வளர்ப்பது பணவரவை அதிகரிக்கும்.

உணவில் புளி சேர்த்தால் பொறாமை உணர்ச்சி அதிகரிக்கும்.பட்டை சோம்பு பிரிஞ்சா இலை சேர்த்தால் கட்டுக்கடங்காத காமம் கொந்தளிக்கும்.

உப்பு,வெங்காயம்,சிறுகீரையால் செய்த உணவுகள் காமத்தை கூட்டும்.
சிறுகீரைத்தண்டு, பெருங்கீரைத்தண்டு காமத்தைக் குறைக்கும்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்தைப் போக்குவதற்கு சக்திவாய்ந்த பரிகாரம் மகாலட்சுமி பூஜை செயவதே!

ஒரு கோடி பெண் பிறப்புகளில் ஒரு பெண்ணுக்கு
10 வயதிலேயே மாதத்தில் 20 நாட்கள் தீட்டு வரும்.அதை சரிசெய்யும் மூலிகை 24 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும். அதுவும் கொல்லிமலைக் காடுகளில் மட்டுமே விளையும்.
கருதோஷ நிவாரண மூலிகை என்று ஒரு மூலிகை உண்டு.இந்த மூலிகை 240 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே முளைக்கும்.இதன் இலையை உற்று நோக்கினால் அதன் நடுப் பகுதியில் ஒரு குழந்தை பெண்கருப்பையில் படுத்திருப்பது போல தோற்றமளிக்கும்.
இதை ஒரு பெண் பாலில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் அவள் மலட்டுத்தன்மை நீங்கும்.
ஆரோக்கியமான குழந்தைகள் 100 வரை பெறும் வலிமையடைவாள்.50 வருடங்களாக கருத்தரிக்காத பெண் கூட கருத்தரிக்கும் பாக்யம் பெறுவாள்.
ஆண் குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையிலும், பெண் குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் பவுர்ணமி அன்றும் இம்மூலிகையை பால்/தேனில் கலந்து உண்டு உறவு கொண்டால் போதும்.
ஆண்மை இழந்தவர்கள் மீண்டும் ஆண்மை பெறவும்,அரவாணிகள் தாங்கள் விரும்பும் வகையில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற குறிப்பிட்ட திதி,நட்சத்திரம் உள்ள நாளில் இந்த் மூலிகையை சாப்பிடவேண்டும்.


1 comment: