Wednesday, May 18, 2011

புத்த சமயம்

சித்தார்த்த கெளதமரால் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் வடஇ-ந்தியாவில் ஆரம்பித்த சமயம். அவர் 'அறிவொளி' பெற்றதால் புத்தர் என்ற பெயரும் பெற்றார்.



சித்தார்த்த கெளதம புத்தர் (கி.மு. 563-480) வட-ந்தியாவில் சாக்கிய அரச வம்சத்தைச் சேர்ந்தவர். மக்களின் மரணம், நோய், முதுமை நீங்க வழிதேடி மனைவி, குழந்தையை விட்டு வெளியேறி துறவு மேற்கொண்டார்.



பிராமணரின் வேதம், உபநிடதம், உயிர்க்கொலையை புத்தர் எதிர்த்தார். ஆயினும் கர்மம், பிறப்பு, மரணம், மறுபிறவித் துன்பம் என -இந்து சமயக் கருத்தை புத்தரும் ஏற்றுக் கொண்டார். உண்மை, ஒழுக்கம், மனஉறுதி, வழிபாடு, பிறவித்துன்பம் நீங்க வழிவகுக்கும்; நிர்வாணம் என்ற முக்திநிலை அடையும் வரை மறுபிறவி தொடரும் என புத்த சமயம் போதிக்கும்.



பேராசை, ஆதிக்க உணர்வு துன்பத்திற்கு வழிவகுக்கும். உயிர்க்கொலை, பொய்பேசுதல், மதுவுண்ணல், கூடா ஒழுக்கத்தை புத்த சமயம் எதிர்க்கும். உலகில் முதன்முதலில் அகிம்சையைப் போதித்தவர். சமண சமய மகாவீரர், கெளதம புத்தரே, 24 நூற்றாண்டுகளின் பின்னர் மகாத்மா காந்தியும் அதே அகிம்சைக் கொள்கையைக் கடைப்பிடித்து வெற்றி கண்டார்.



புத்த சமயம் சாதி, வர்ண, பால் பேதங்களை எதிர்த்தது, புத்த மதகுருமாரான பிக்குகளுடன் பிக்குணிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மதகுருமாருக்கு (மஞ்சள்) சீருடை, குருகுல கல்வி முறைக்கு மாறாக பள்ளி (கூடம்)களை அமைத்ததும் புத்தசமயமே.



மதகுருமாருக்கு ஒறுத்த வாழ்வும் தனிக் கட்டளைகளும் வகுக்கப்பட்டன. அதீத உணவு, நறுமணம், பஞ்சணைப் படுக்கை, ஆபரணங்கள், நடனம், நாடகம் தவிர்க்கப்பட்டன.



-இந்து சமய வேத, உபநிடதங்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளன. மாற்றாக புத்த, சமண நூல்கள் பாளிமொழியில் எழுதப்பட்டன.



கடவுளைப்பற்றி புத்த சமயம் எதுவும் கூறவில்லை. ஆயினும் புத்த சமயத்தவர் மிகப்பெரிய உருவங்களாக சிலைகள் அமைத்து புத்தரை தெய்வமாக வழிபடுவதைக் காணலாம். புத்த கோவில்களை விகாரை என்பர்.



புத்த சமயத்தில் -இருபிரிவுகள் உள. தேரவட (சிறிது சக்கரம் எனவும் கூறுவர்) புத்தம் -இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் நாடுகளில் நிலைபெற்றுள்ளது. -வர்கள் பழைய கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறுவர். -இரண்டாவது மகாஜன புத்தம் (பெரிய சக்கரம் எனவும் கூறப்படுது) சீனா, தீபெத், ஜப்பான், கொரியா நாடுகளில் பரவியுள்ளது. தேரவட பத்த மதகுருமார் திருமணம் செய்யார். (சீனா உட்பட) 170 கோடி மக்கள் புத்த சமயத்தைச் சார்ந்தவர் எனவும் உலகின் முதற்சமயமாகவும் புத்த சமயம் விளங்குகிறது.



புத்தசமயம் தோன்றிய -ந்தியாவில் -ன்று 35 இலட்சம் புத்த சமயம் சார்ந்தவரே வாழ்கின்றனர். -து வியப்பான செய்தியே. கி.மு. 3 ம் நூற்றாண்டின் பெருமன்னாக விளங்கிய அசோக சக்கரவர்த்தியே புத்தசமயத்தவராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புத்தசமயத்தைப் பரப்புவதில் முன் நின்றார்.



வேத, உபநிடதம் சார்ந்த -ந்துமதம், புத்த - சமணம் எழுச்சிபெற வீழ்ச்சியுற்றது. பின்னர் புத்த, சமண சமயங்களின் சிறந்த அம்சங்களை ஏற்று பக்தி காலகட்டத்தில் மீண்டும் -இந்து சமயம் உயர்வு பெற்றது.



சித்தார்த்த கெளதம புத்தர் நிர்வாணம் (முக்தி) பெற்ற நாளான வைகாசி விசாகப்பூரணை நாளை புத்த சமயத்தவர் பெருநாளாகக் கொண்டாடுவர். பிற பூரணை நாட்களெல்லாம் வழிபாட்டு நாட்களாகும். -இலங்கையில் எல்லாப் பூரணை நாட்களும் அரசு விடுமுறையுடன் கூடிய வழிபாட்டு நாட்களாகும். எவ்வித கேளிக்கைகளும் (சினிமா உட்பட) அந்நாட்களில் அனுமதிக்கப்படுவதில்லை.



புத்த சமய குருமாரும் சமயத்தவரும் மந்திரமாக ஓதப்படும் மூன்று சுலோகங்கள் உள.



புத்தசமயம், சங்கம், தர்மம் ஆகியவற்றிற்கு வணக்கமும் அடைக்கலமும் கூறப்படுவதாகும்.



புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

No comments:

Post a Comment