Saturday, May 28, 2011

ராகுகால ஸ்ரீ துர்க்கா ஸ்துதி

ராகுகால ஸ்ரீ துர்க்கா ஸ்துதி
ஸ்ரீ மங்கள சண்டிக ஸ்தோத்ரம்

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்

ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே


விளக்கம்: மங்களத்திற்கு ஆதாரமானவளே ! செவ்வாய்க்கிழமை தோறும் பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.


தேவீம் ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்

பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்


விளக்கம்: தேவியை என்றும் பதினாறு வயதுடைய நித்யயௌவன உருவமுடையவளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்னகையுடன் சரத் காலத்து நிலவொளியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாக தியானிக்கிறேன்.


ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்

ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்


விளக்கம்: காயாம்பு வண்ண மேனியுடன் நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் விளங்கும் அன்னை, உலகை ஈன்று சகல சௌபாக்கியங்களையும் அளிக்கின்றாள்.


ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே

தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே


விளக்கம்: பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.


மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே

ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே


விளக்கம்: மங்களத்தை தரும் மங்கள நாயகியே ! என்றென்றும் மங்கள வாழ்வை அளிப்பாயாக.


பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே

பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்


விளக்கம்: பூஜிக்க தக்க மங்கள நாயகியே ! சுபத்தை அளிக்கும் தேவியே! மனித வர்க்கத்திற்கு என்றும் நல்வாழ்வை நல்குவாயாக !


மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே

ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி


விளக்கம்: மங்களத்தைத் தரும் அருள் நோக்கு உடையவளே! மங்களமே உருவானவளே உலகின் நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே ! மாந்தருக்கு மோட்சத்தை அளிப்பவளே !


ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்

ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே


விளக்கம்: மங்களத்திற்கு ஆதாரமானவளே மங்கள வாரம் தோறும் (செவ்வாய்கிழமை தோறும்) பூஜிக்கத்தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன் தாள் பணிகின்றேன்.

No comments:

Post a Comment