Sunday, November 20, 2011

பிரதட்சிணம்...

பிரதோஷ கால வழிபாட்டில் முக்கியமாகவும், முத்தாய்ப்பாகவும் விளங்குவது ஈசன், அம்மையுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியே இதனைப் "பிரதட்சிணம்'' என்று கூறுவர். பிரதட்சிணத்தில் பல முறைகள் கூறப்பட்டிருக்கிறது. என்றாலும் அவைகளில் மிக முக்கியமான சில பிரதட்சிண முறைகள் வருமாறு:-
 
திரிதளப் பிரதட்சிணம்:
 
இந்தப் பிரதட்சிணத்தில் சுவாமி சந்திரசேகர மூர்த்தி தேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் "த்வஜஸ்தம்பம்'' அருகிலிருந்து புறப்பட்டு கோவிலை மூன்று முறை தொடர் சுற்றாக வலம் வருவார். அப்போது அவரைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வதால் ஊடலைத் தீர்த்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும். மேலும் தவறு செய்யாதவர்களைத் தண்டித்த பாவம் போகும்.
 
கர்ப்ப ஸ்ரீபிரதட்சிணம்....
 
இந்தப் பிரதட்சிணத்தில் இறைவியுடன் கூடிய இறைவனைச் கூமந்துகொண்டு அடியவர்கள் அடிமேல் அடிவைத்து நடந்து கோவில் வலம் வரும் போது, அடியார்க்கெல்லாம் முதல்வனாகிய ஈசனும் அம்மையுடன் அசைந்து அசைந்து வருவார். இவ்வலத்தின் போது யாரொருவர் ஈசனைச் சுமக்கும் பேற்றைப் பெறுகின்றார்களோ, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் வந்து தங்க மாட்டார்கள் என்பது உறுதி. அத்துடன், பிள்ளைப்பேறு உண்டாகி வம்சம் தழைத்தோங்கும்.
 
திக்காடி பிரதட்சிணம்....
 
இந்தப் பிரதட்சிணத்தில் தேவியுடன் ஈசனைச் சுமந்த அடியார்கள் முதலில் ஐந்து அடிகள் முன்னே எடுத்து வைத்து அலப்பக்கம் திரும்புவார்கள். பிறகு ஐந்து அடிகள் எடுத்து வைத்து இடப்பாக்கம் திரும்புவார்கள். இப்படியே ஐந்து ஐந்து அடிகளாக எடுத்து வைத்து முன்னேறும் போது ஈசனும் வலப்பக்கம், இடப்பக்கம் என மாறி மாறி சென்று அருள் வேண்டி வந்தவர்க்கெல்லாம் தரிசனம்  தந்து அருள் புரிவார். இவ்வலத்தில் ஈசனை மனம் குளிர திரிசிப்பதால் நாள் பட்ட நோய் தீரும், பால்பாக்கியம் பெருகும், திருமணம் கூடும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் அத்துடன் பொன்னும் பொருளும் சேரும். தெய்வ அருள் கிட்டும்.
 
குழுவி நடை பிரதட்சிணம்.....
 
இவ்வலத்தில் அடியார்கள் அன்னையுடன் சுவாமியைச் சுமந்து கொண்டு ஆடி ஆடி முன்னேறி நடக்க, ஈசனும் "ஆற்றிலே படகு அசைந்து அசைந்து வருவது போல'' வருவார் அப்போது ஈசனைத் தரிசனம் செய்வோர்க்கு மூன்று உலகங்களிலும் தொடரும் நாகதோஷம் நீங்கும்.
 
சோம சூத்ர பிரதட்சிணம்......
 
பலவிதமான பிரதட்சிண முறைகள் கூறப்பட்டிருந்தாலும் ''சோம சூதர் பிரதட்சிணம்'' என்கிற உன்னதமான பிரதட்சிணமே அனைத்திலும் மிகவும் சிறந்த பிரதட்சிண முறையாகும். அதிஉன்னதமான இந்த சோம சுத்த வலத்தில் அன்னையுடன் ஈசனை முறையாக சுமந்து கொண்டு அடியவர்கள் வரும் அழகைக் கண் குளிரக்கண்டு ஆனந்திப்பவர்கள் அனைத்து வகையான செல்வங்களையும் பெறுவதோடு, அவர்களின் பாவச்சுமையையும் குறைத்துக் கொள்கிறார்கள். அத்துடன் "அசுவ மேத யாகம்'' செய்த பலனையும் பெறுகின்றார்கள்.

No comments:

Post a Comment