Monday, November 14, 2011

குபேரபூஜை

செல்வத்தின் அதிபதியான திருமகளின் அருள் கிடைக்க, தீபாவளியன்றோ அதற்கு மறுநாளோ குபேரபூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சத்தை அருளும் குபேரனுக்கு "ராஜாதிராஜன்' என்ற பெயர் உண்டு.
யட்ச கணங்களின் தலைவனான குபேரன் சாந்த குணம் கொண்டவர். "பஞ்சதசீ' என்னும் மந்திரத்தை ஜெபிக்கும் இவர் இருக்கும் இடத்தில் திருமகள் நித்யவாசம் செய்வதாக ஐதீகம். செல்வத்தை வழங்கும் சங்கநிதி, பதுமநிதி என்னும் பிரதிநிதிகள் குபேரனுடைய இருபுறமும் வீற்றிருப்பர். சிவபெருமானைக் குறித்து தவம் செய்து, அஷ்டதிக் பாலகர்களில் (எட்டுதிசை அதிபதிகள்) இடம்பெற்ற இவர், வடதிசைக்கு உரியவராவார். இதனால் தான் வடக்கு நோக்கிய வீடு வாழும் என்ற சுலவடை வந்தது. வீடு கட்டுபவர்கள் வடக்கு வாசலைத் தேர்ந்தெடுப்பதும் இதனால் தான். தீபாவளி மட்டுமின்றி, வெள்ளிக்கிழமைகளிலும் இவரை மல்லிகை மலர் தூவி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். நவக்கிரக மண்டபத்தில் கல்வி மற்றும் திருமணப் பார்வைக்குரிய குரு பகவான் வடக்கு நோக்கியே இருக்கிறார்

No comments:

Post a Comment