Sunday, March 4, 2012

தமிழ் மாதங்கள் பிறந்தது எப்படி?


தமிழ் மாதம் என்றால் சித்திரை, வைகாசி என ஆரம்பித்து மாசி, பங்குனி என முடிவது நம் அனைவருக்கும் தெரியும். இந்த மாதங்களுக்கு எப்படி பெயர் வந்தது, யார் பெயர் வைத்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளதா, இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால் மாதங்களுக்கு பெயர்கள் வந்தது எப்படி என்பது உங்களுக்கு சுலபமாகப் புரிந்து விடும். சம்ஸ்கிருத வார்த்தைகளே நாளடைவில் மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன. பெரும்பாலும் ஒரு மாதத்தில் அமாவாசையும், பவுர்ணமியும் மாறி மாறி வரும். இதில் பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரமோ அதுவே அந்த மாதத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.
சித்ரா நட்சத்திரத்தன்று தான் சித்திரை மாசத்தில் பவுர்ணமி வரும் .அதனால் சித்திரை மாதம் என்றானது.
விசாக சம்மந்தமானது வைசாகம். விசாக நட்சத்திரத்தில் பெரும்பாலும் பவுர்ணமி ஏற்படுகிற மாதம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.
அனுஷ நட்சத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்படுகிற மாதம் ஆனுஷீமாசம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.
ஆஷாட நட்சத்திரத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு உண்டு. இதில் பூர்வம் என்றால் முன், உத்தரம் என்றால் பின். பூர்வ/ உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும், ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் ஆயிற்று. இந்த இரு நட்சத்திரங்களில் ஒன்றில் பவுர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா என்ற எழுத்து உதிர்ந்து ஆடி ஆயிற்று.
ச்ராவணம் என்பது ச்ரவண நட்சத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் மறைந்து, மீதமுள்ள வண த்தை ஓணம் என்கிறோம். அது மஹாவிஷ்ணுவின் நட்சத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பவுர்ணமி ச்ராவண நட்சத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச், ர என்ற கூட்டெழுத்து மறைந்து ஆவணி மாதமாயிற்று.
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நட்சத்தில் பவுர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது எப்படியோ திரிந்து புரட்டாசி ஆயிற்று.
ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பவுர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.
க்ருத்திகை நட்சத்திரம் தான் கார்திகை. இந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.
மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பவுர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று. அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.
புஷ்யம் தான் தமிழில் பூசம். புஷ்ய சம்மந்தமானது பவுஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர். பவுர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம். அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.
மக நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.
பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதால் பல்குனி எனப்படும. அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.
சமஸ்கிருதம் தமிழ்
சைத்ர சித்திரை
வைஸாயுகயு வைகாசி
ஆநுஷி / ஜ்யேஷ்ட ஆனி
ஆஷாட ஆடி
ஸ்யுராவண​: ஆவணி
ப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ புரட்டாசி
ஆஸ்யுவிந​: ஐப்பசி
கார்திக:​ கார்த்திகை
மார்கயூஸீயுர்ஷ​: மார்கழி
தைஷ்யம்/ பவுஷ​: தை
மாக மாசி
பாயுல்குயூந​: பங்குனி.

No comments:

Post a Comment