Sunday, May 20, 2012

தெய்வங்களுக்கு அதிக தலை, கைகளை கொடுத்து வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?

* வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஹோமம் நடத்துவது சரியா?
.
குடியிருக்கும் வரை அது உங்கள் வீடு தான். வாடகை வீட்டில் குடியிருக்கிறோம் என்று மற்ற விஷயங்களை ஒதுக்கி விடுவதில்லையே. ஹோமம் நடத்துவது சிறப்பானதே.

** எண்களில் எட்டு ஒதுக்கப்பட்டதா? பலரும் இந்த எண்களை விரும்புவதில்லையே ஏன்?
.
வெள்ளையர்களின் வரவால் விளைந்த விபரீதங்களில் இதுவும் ஒன்று. நம்மைப் பொறுத்தவரை எட்டு மிக உயர்ந்த எண். இதனை "அஷ்ட' என்று சொல்வார்கள். அஷ்ட லட்சுமி, அஷ்ட ஐஸ்வர்யம், அஷ்ட மூர்த்தி என்று எவ்வளவோ எட்டைப் பற்றிச் சொல்லலாம்.

* தெய்வங்களுக்கு அதிக தலை, கைகளை கொடுத்து வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?

மனிதசக்திக்கும், தெய்வசக்திக்கும் வேறுபாடு உண்டு. ஒரே நேரத்தில் தெய்வத்தால் பல செயல்களைச் செய்ய முடியும். கோடிக்கணக்கானவர்களுடன் ஒரே சமயத்தில் பேச முடியும். எந்த தீய சக்தியையும் அழிக்கும் ஆற்றலை உணர்த்தும் வகையில் கைகளில் ஆயுதங்களையும் கொண்டிருக்கும். இதை நாம் உணர்வதற்காக பல கைகளும், தலைகளும் தெய்வ வடிவங்களில்
சித்தரிக்கப்படுகின்றன.

* நெய், எண்ணெய் இரண்டில் எது விளக்கேற்ற சிறந்தது?

நெய் மிக உயர்ந்தது. ஆனால், எல்லோராலும் இயலாது. நெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதைக் கொண்டு தீபம் ஏற்றுவது தவறு. எல்லோராலும் இயன்றதும், எல்லா நன்மைகளும் அளிக்கவல்ல நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சாலச்சிறந்தது.


* தகுதிக்கு மீறிய பரிகாரங்களை ஜோதிடர்கள் சொல்லும்போது எல்லோராலும் செய்ய முடிவதில்லை. எளிய பரிகாரத்தை இறைவன் ஏற்கமாட்டாரா?

நம்மால் முடிந்ததைச் செய்தால் போதும். இறைவன் ஏற்றுக் கொள்வார்.

* ஒருவர் வேண்டிய காணிக்கையை மற்றொருவர் மூலம் செலுத்துவது ஏற்புடையது தானா?

வேண்டிக்கொண்ட காணிக்கையை காலம் தாழ்த்தாமல் எப்படியாவது இறைவனுக்கு செலுத்திவிட வேண்டும் என்ற அடிப்படையில் இது சரியானது தான்.

* தர்ப்பணம் செய்து முடித்தபின் குளித்துவிட்டுத் தான் கடவுள் பூஜை செய்ய வேண்டுமா?

கிடையாது. தர்ப்பணம் முடிந்தபின் கைகால்களைக் கழுவி விட்டு திருநீறு அல்லது திருமண் திலகமிட்டு பூஜை செய்யலாம். குளிக்கக்கூடாது.

No comments:

Post a Comment