Sunday, May 20, 2012

முத்துசுவாமி தீட்சிதர்


நமது மகான்களினிடம் இருந்த தெய்வசக்திக்கு ஈடு இணை இல்லை என்பதற்கு <உதாரணமாக நடந்த நிகழ்ச்சி இது. திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர் இளம் வயதிலேயே வேதம், இலக்கணம், பாட்டு, வீணை கற்றுத்தேர்ந்தார். சிதம்பர சுவாமி என்பவருடன் காசி சென்றார். அவரிடம் பல கலைகளைக் கற்றார். ஸ்ரீவித்யா மந்திர உபாசனை பெற்றார். ஐந்தாண்டு கடந்ததும், சிதம்பர சுவாமி அவரை சொந்த ஊருக்குச் செல்லும்படி உத்தரவிட்டார்.
""சுவாமி! ஊருக்குப் போகச் சொல்கிறீர்களே! நான் கற்றவித்தைகளில் தேர்ந்து விட்டேன் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?'' என்றார் தீட்சிதர். ""நீ கங்கைக்குச் செல். இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளி, மனதில் ஏதோ பொருளை நினைத்துக் கொண்டு, தண்ணீரைப் பார். அதில் நீ நினைத்தது தெரிந்தால், கலைகளில் தேர்ந்து விட்டதாக அர்த்தம்,'' என்றார் சுவாமி.
தீட்சிதரும் கங்கை நீரை கையில் அள்ளி, மனதில் வீணையை நினைத்தபடியே பார்த்தார். என்ன ஆச்சரியம்! தண்ணீரில் வீணை தெரிந்தது. அதன் குடப்பகுதியில் "ஸ்ரீராம்' என்ற மந்திரமும் தெரிந்தது. உணர்ச்சியின் விளிம்புக்கே சென்று விட்ட தீட்சிதர் சென்னை வந்தார். திருத்தணி முருகனின் அருளால் பல கீர்த்தனைகளைப் பாடினார்.

No comments:

Post a Comment