Tuesday, June 19, 2012

ஓரறிவு உயிராக இருந்தாலும் மரத்திற்கு உயிர் உண்டு

ஓரறிவு உயிராக இருந்தாலும் மரத்திற்கு உயிர் உண்டு. அவற்றுக்கு அன்போடு தண்ணீர் ஊற்றுவது நம் கடமை. காட்டில் உள்ள மரங்களை வெட்டி வீட்டிற்குத் தேவையான ஜன்னல்,கதவு எல்லாம் செய்து கொள்வது தவிர்க்க முடியாதது. ஆனால், அனுமதியின்றி இங்கு மரங்களை வெட்டினால், சிறைதண்டனை தரப்படுகிறது. அங்கோ நரகமே கிடைக்கும் என்கிறது விஷ்ணு புராணம். இவர்கள் "அசிபத்ரவனம்' என்ற காட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். அங்கு மரங்கள் மிக அடர்ந்து நெருக்கமாக இருக்கும். இலைகள் கத்திபோல கூர்மையாக இருக்கும். தேவையில்லாமல் மரத்தை வெட்டிய பாவத்திற்காக யமபடர்கள் வெட்டியவர்களை அந்தக்காட்டிற்குள் விரட்டிவிடுவர். கத்திமாதிரியான இலைகள் உடம்பைக் குத்திக் கிழிக்கும். தேவையின்றி மரம் வெட்டும் நபர்கள் இதை மனதில் கொள்ளட்டும்

No comments:

Post a Comment