Wednesday, July 11, 2012

மணிகர்ணிகாவில் மதியம் 12 மணிக்கு நீராடினால் பலமடங்கு புண்ணியம் பெறலாம்


கங்கைநதி கரையிலுள்ள காசியில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமானது சக்கர தீர்த்தப் பகுதியில் உள்ள மணி கர்ணிகா காட். காசி விஸ்வநாதர் அபிஷேகத்திற்கு இங்கிருந்து தான் கங்கா தீர்த்தம் எடுத்துச் செல்வர். விஷ்ணு தன்னுடைய சக்ராயுதத்தால் உருவாக்கியது என்பதால் சக்கரதீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது. சக்கரதீர்த்தத்தில் நீராட பார்வதியும் சிவபெருமானும் ஒருமுறை வந்தனர். அப்போது சிவனின் காதணி நீரில் விழுந்தது. அதனால், அந்த படித்துறைக்கு "மணிகர்ணிகா' என்ற பெயர் ஏற்பட்டது. "மணிகர்ணிகா' என்றால் "காதில் அணியும் அணிகலன்'. மணிகர்ணிகாவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உச்சிவேளையில் (மதியம்) நீராடுவதாக ஐதீகம். அதனால் மதியம் 12 மணிக்கு இங்கு நீராடினால் பலமடங்கு புண்ணியம் பெறலாம் என்பர்.

No comments:

Post a Comment