Wednesday, July 11, 2012

அவ்வையாரின் அருமை மொழி


 உறவு, நட்பு, மனைவி, குழந்தைகள், பெற்றோர், குரு, நாடு, உலகம் ஆகியவற்றில் அன்பு செலுத்துபவர்களாக வாழ வேண்டும்.
* உயர்ந்த எண்ணம், மேன்மையான செயல், சிறந்த குணம் நிறைந்திருப்பதே நல்ல நெறியாகும். தானும் உயர்ந்து பிறரையும் உயர்த்துவதால் வீடும், நாடும், உலகமும் உயரும்.
* பயனுள்ளவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். எங்கு நல்லது இருந்தாலும் அதைப் பாதுகாக்க வேண்டும்.
* பிறருடன் நட்பு கொள்ளும் போது, நம் தகுதிக்கு ஏற்றவர்களா என்பதை அறிந்து அதன்பின்பே நட்பு கொள்ள வேண்டும்.
* நூல்களையும், இலக்கியங்களையும் அவமரியாதை செய்யக்கூடாது. புகழாவிட்டாலும் இகழாதிருப்பதே உயர்ந்த பண்பு.
* உயர்ந்த உணர்வை ஊட்டுவதில் உணவுக்கு அதிக பங்கு இருக்கிறது. நல்ல உ<ணர்வுகளுக்கு உரியன அல்லாத உணவுகளை சாப்பிடக்கூடாது.
* குற்றமானவற்றையும், பொறாமையான சொற்களையும் பேசக்கூடாது.. நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்து பேச வேண்டும்.
* எந்த நேரமாக இருந்தாலும், நமது பணிகளை தயக்கமின்றி, தாமதமின்றி, சோம்பல் இன்றி சுறுசுறுப்பாக செய்து முடிக்க வேண்டும்.
* பணம் படைத்தவர்கள் தங்கள் செல்வத்தைப் பிறருக்காகப் பயன்படச் செய்வதே பெருமை அளிப்பதாகும்.
* கடுமையான பேச்சு வெறுப்பைத் தரும். பேச்சில் பணிவு இருக்க வேண்டும். இனிமையான பேச்சால் வாழ்க்கையில் எப்போதும் பயம் இல்லை.
* கற்க வேண்டிய காலம் இளமையே. படிப்பவை இளமையில் தான் மனதில் படியும். சாதிக்கும் ஆற்றலும் இளமைக்கே உண்டு.
* தர்மம் செய்வதால் கிடைக்கும் பலன் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும்.
* பயஉணர்வு மனிதனை கெடுத்துவிடும் என்பதால், அதனைக் கைவிட வேண்டும். பிறரைப் பயப்படுத்துவதையும் விட்டுவிட வேண்டும்.
* படிப்பறிவோடு, கேள்வி அறிவும் இணைந்தால் தான் பேரறிவு கிடைக்கும். தெரியாதவற்றை ஏன் எப்படி எதற்கு என பெரியோர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அனுபவத்தால் பெறும் அறிவை விட, பெரியவர்கள் தரும் ஆலோசனை அறிவே உயர்ந்தது.
* வாழ்க்கையில் எப்போதும் ஒழுங்கான செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். சிறப்பான நிகழ்வுகளை, கருத்துக்களை, நடத்தையை, ஒழுக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
* பேச்சில் இனிமை, கனிவு, மரியாதை, அன்பு, நேயம், ஆறுதல் இருக்க வேண்டும். அதனால் நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படும்.
* ஒரு செயலை உரிய காலத்திற்குள் நெஞ்சுறுதியுடனும், விருப்பத்துடனும் செய்துவிட்டால் போதும். வெற்றி தேவதை தேடி வருவாள்.
* ஊராருடன் ஒத்துப் போவது பல வகைகளில் நல்லது. வீண் வாக்குவாதம், பொறாமை, வழக்கு, கெட்ட பெயர், பகைவர், வறுமை ஏற்படாமல் இருக்க இதுவே சிறந்த வழி.
* அன்பான தன்மை வேண்டும். இனிய சொற்கள் ஏற்றம் தரும். அன்பு கலந்த சொற்களால் கேள்வி கேட்க வேண்டும். பிறர் நம்மைத் தவறாக பேசும் அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது.
* வாழ்க்கையில் முன்னேறிவிட்டோம் என்றாலும், முந்தைய நிலை தான் முன்னேற்றத்தின் படிக்கல்லாக விளங்கியது என்பதை மறக்கக் கூடாது.

No comments:

Post a Comment