Thursday, July 12, 2012

கங்கையை விட புனித நதி காவிரி


கங்காதேவியும், காவிரிக்கும் யார் புனிதமானவர் என்பது பற்றி வாக்குவாதம் எழுந்தது. உலகளந்த திருமாலின் திருவடி ஸ்பரிசம் பட்டதால் தானே உயர்ந்தவள் என்று கங்கை பெருமைப்பட்டுக் கொண்டாள். இதையடுத்து, அவளுக்குச் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்க, காவிரியும் தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் காட்சியளித்து, காவிரி நதியின் நடுவில் உள்ள அரங்கத்தில் எழுந்தருளி அருள்புரிந்தார். எங்கேயோ, எப்போதோ கங்கை, திருமாலின் திருவடியை வணங்கினாள் என்பதை விட, எப்போதும் ரங்கநாதரின் முடி முதல் அடி வரை மாலை போலச் சுற்றி வந்து வழிபடும் பாக்கியத்தைப் பெற்றாள். ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய "திருமாலை' என்று பாசுரத்தில், "கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுபட்டு' என்று இதன்சிறப்பை போற்றுகிறார்.

No comments:

Post a Comment