Wednesday, July 11, 2012

* நாம் உபயோகிக்கும் தங்கநகைகளை தெய்வச் சிலைகளுக்கு அணிவித்து பூஜை செய்யலாமா?

* நாம் உபயோகிக்கும் தங்கநகைகளை தெய்வச் சிலைகளுக்கு அணிவித்து பூஜை செய்யலாமா?
.
மற்ற உலோகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தங்கத்திற்கு உண்டு. எப்படி என்றால் பலமுறை நெருப்பில் இட்டு மாற்று அடிக்கப்படுவதால் எக்காலத்தும் தோஷம் ஏற்படாத பரிசுத்தமானதாகிறது. எனவே, நம் உபயோகித்திருந்தாலும் சுத்த நீரினால் தூய்மைப்படுத்தி தெய்வச்சிலைகளுக்கு அணிவிக்கலாம்.


** பிறந்த நட்சத்திரத்தையே குழந்தைக்குப் பெயராக வைக்கலாமா?

நட்சத்திரங்களின் பெயர்களை நிறைய பேர் வைத்திருக்கிறார்களே! ரேவதி, கிருத்திகா, ஆதிரை என்று நட்சத்திரப்பெயர்களை வைக்கலாம். ஆனால், கூப்பிடுவதற்குப் பொருந்தாத பூரட்டாதி, மிருகசீரிடம் போன்ற பெயர்களை எப்படி வைப்பீர்கள்?

* பூஜையறையில் சுவாமி படங்களை எத்திசையில் வைத்து வழிபடுவது நல்லது?

நடுக்கூடத்தில் மேற்குத் திசையில் கிழக்கு நோக்கி இருக்குமாறு பூஜையறை அமைத்து அதில் கிழக்குமுகமாக சுவாமி படங்களை வைத்து வழிபடுங்கள். வடக்கு அல்லது வடகிழக்கு ஆகிய திசைகளும் ஏற்புடையவை தான்.



* கலியுகத்தில் எந்த தானம் செய்தால் பலன் கிடைக்கும்?

என்ன பட்ஜட் என்று கூறியிருந்தால் சொல்வதற்கு வசதியாக இருக்கும். ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். எல்லா யுகங்களுக்கும் ஏற்ற தானம் இது. வளமான இந்தியா உருவாக உதவியாக இருக்கும்.

* நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பதன் தாத்பர்யத்தை தெரிவியுங்கள்.

பெண்களின் உச்சிவகிட்டிற்கு "ஸீமந்தம்' என்று பெயர். திருமணமான பெண்கள் இங்கு அவசியம் குங்குமம் வைக்கவேண்டும். இதற்கு ஸீமந்த திலகம் என்று பெயர். இதனால் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்றுதேவியரும் மகிழ்கிறார்கள். பார்வதி தீர்க்க சுமங்கலிபாக்கியத்தையும், லட்சுமி அழகு, இளமையையும், வம்சவிருத்தியையும், சரஸ்வதி நல்லறிவையும் தருகின்றனர். உச்சிவகிட்டில் இருந்து கீழே செல்லும் நரம்பு கருப்பையைச் சென்றடைகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எட்டாம் மாதத்தில் வளைகாப்பின் போது முள்ளம்பன்றி ரோமத்தால் கீறி விடுவதுண்டு. இந்த ரோமத்துக்கு "ஸீமந்தம்' என்று பெயர். அபிராமிப்பட்டர் அம்பாள் பற்றி,"உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகமும்' என்று பாடியுள்ளார்.

* எந்த வழிபாட்டை மேற்கொண்டால் ஜாதகத்தில் உள்ள பித்ருசாபம் நீங்கும்?

காகத்திற்கு எள்அன்னம் வைப்பது பித்ருசாபம் போக்க உதவும். முடிந்தால் தினமுமோ அல்லது சனிக்கிழமையோ இதனைச் செய்யுங்கள். அனாதைக் குழந்தைக்கு இயன்ற வரை உதவி செய்யுங்கள். பித்ரு சாபத்தில் இருந்து விடுபட்டு மகிழ்வீர்கள்.

No comments:

Post a Comment