Wednesday, July 11, 2012

பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்ட ஐந்து வீடு


பாரதப் போர் நடப்பதை தருமர் ஒருபோதும் விரும்பவில்லை. போர் நடந்தால் அதன் முடிபு அழிவாகவே இருக்கும். அழிவை ஏற்படுத்திய எவரும் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால் எவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு விட்டுக் கொடுத்து போரைத் தவிர்ப்பதே தருமரின் நோக்காக இருந்தது.
எனினும் நாடு முழுவதும் தனது ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பது துரியோதனனின் நிலைப்பாடு. பாண்டவர்கள் வாழ்வதற்குக்கூட இடம் தர முடியாது என்பது துரியோதனனின் முடிபு.
யுத்தத்தை விரும்பாத தருமர் ஐந்து வீடு தந்தால் போதும், நாங்கள் வேறெதுவும் கேட்க மாட்டோம் என்ற செய்தியை துரியோதனனுக்கு தெரியப்படுத்துகின்றார். துரியோதனனோ ஐந்து வீடும் தர முடியாது என்று அறிவிக்கின்றான். துரியோதனனோடு வாழ முடியாது என்று முடிபெடுக்கின்றார் தருமர். அதன் பின்பே போருக்கான ஆயத்தம் நடக்கின்றது.
பாண்டவர்கள் போரில் வெற்றி கொள்வதற்கு காரணம் அவர்களின் வீரம் என்பதற் கப்பால், ஐந்து வீடு தந்தால் போதும் என்ற விட்டுக் கொடுப்பும், ஈ இருக்கும் இடந்தனிலும் கொடுக்க முடியாது என்ற துரியோதனனின் திமிருமே காரணம் எனலாம்

No comments:

Post a Comment