Tuesday, September 11, 2012

பெண்களுக்கு உண்டாகும் தோஷம்

<பெண்களுக்கு தொடு தோஷம், காழ்ப்பு தோஷம், தீட்டு தோஷம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தோஷங்கள் நீங்க பெண்கள் கண்ணாடி வளையல்கள் 21 வாங்கி அவற்றை சுடு நீரில் போட்டு எடுத்து பின்னர் மஞ்சள் கலந்த நீரில் நனைத்து ஆடிப் பூரத்தன்று அம்மன் சன்னதியில் கட்டி தொங்க விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பெண்களுக்கு உண்டாகும் முன்று விதமான தோஷங்கள் நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதும் கூட ஒரு வகை தோஷம்தான் இந்த தோஷம் நீங்க 3 பரிகாரம் உள்ளது. கணவனைப்பிரிந்து வாழும் மனைவி,தன் கணவன் பயன்படுத்திய ஒரு துணியை எடுத்துக் கொண்டு, அதில் 27 கொண்டைக் கடலையை வைத்து முடிந்து அதனை தான் பயன்படுத்தும் தலையணைக்குள் கீழ் வைத்து உறங்க வேண்டும். 27 நாட்களுக்கு பிறகு காலை அதனை உள்ளகையில் வைத்துக் கொண்டு பிரிந்து சென்ற என் கணவரை கொண்டு வந்து சேர் குருபகவானே! என்று 108 முறை சொல்ல வேண்டும். பின்பு அதனைத் தண்ணீரில் போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்தால் பிரிந்து சென்ற கணவர் திரும்பி வந்து விடுவார். மனைவியைப் பிரிந்து வாழும் கணவன் தங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இரண்டு பாம்புகள் இணைந்த நிலையில் உள்ள சிலையை வணங்கி வர, பிரிந்து சென்ற மனைவி உங்களுடன் மீண்டும் வந்து சேர்ந்து வாழ்வார்.

No comments:

Post a Comment