Thursday, September 20, 2012

திருமுறைகளில் வேதங்கள் பற்றி

தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு குமரகுருபரர் இதழ் - தலையங்கம் சைவ சமயம் புராதனமான சமயம். சைவத் திருக்கோயில்கள் பாரம்பரியப் பெருமை உடையவை. நம் திருக்கோயில்களில் உள்ள இறை திருமேனிகள் வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டவை. கும்ப தீர்த்தத்தில் சான்னித்தியங்களை, பிம்பத்தில் அபிஷேகித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கச் செய்யும் அதி சூட்சம முறையையே கும்பாபிஷேகம் என்கிறோம். வேத வேள்விகள் இறைவனையும் தேவதைகளையும் அவிர்ப் பாகத்தால் திருப்திப்படுத்தும் நுணுக்கமான தேவகன்மங்கள் ஆகும். இச்செயல்களால் திருக்கோயில் இறை திருமேனிகளில் சான்னித்தியம் பிரகாசிக்கிறது. அப்படிப்பட்ட திருமேனிகளின் முன் சென்று பயபக்தியுடன் வேண்டும் அடியார்களின் வேண்டுதல்கள் யாவும், வேண்டியாங்கு நிறைவேற்றப்படுகின்றன. இறை திருமேனிகளின் சான்னித்தியத்தை மந்திரங்களாலும், நித்திய நைமித்திக வழிபாடுகளாலும் காப்பதும், மேம்படுத்துவதும் சமயச் சான்றோர்களின் கடமையாகும். இது, வரங்கள் வேண்டி ஏங்கிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி பக்தர்களின் நலன் சம்பந்தப்பட்டது. இது விஷயத்தில் கவனக்குறைவோ, மரபு மீறலே ஏற்படுத்திப் பக்தர்களுக்குப் பலன் கிடைக்காதபடிக்கு ஆக்கி, அவர்களின் தெய்வ நம்பிக்கையைப் பாழ்படுத்திவிடக் கூடாது. வேதம் பொதுவானது. தனியொரு பிரிவினருக்கு என்றில்லாமல், தெய்வத்திற்கே உரிய மொழியில் வேதங்கள் உள்ளன. “வேதங்கள் இறைவனே அருளியவை” என்பதே நம் சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறைவன் அருளிய வேதங்களில் இறைவனே போற்றப்படுகிறான். “தன்னை ஒப்பார் பிறர் இல்லாமையால் தாமியற்றிய வேதங்களில் இறைவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டா” என்று, 300 ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைவரை சென்று, காசியில் சைவமும் தமிழும் பரப்பிய அருட்கவிஞர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அதற்குக் காரணம் சொல்கிறார். தமிழர்கள், ஆதியிலிருந்தே வேதங்களைப் போற்றி வந்துள்ளனர். மறை (வேத) வழக்கம் இல்லாதாரை “மாபாவிகள்” என்றே நம் சைவம் கடிந்து பேசுகிறது. “வேதத்தில் உள்ளது நீறு”, “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என வேதத்தை ஏற்றுப் போற்றும் சைவத்தின் முதல் ஆச்சார்யர் திருஞானசம்பந்தப் பெருமான், “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமனொடு தேரரை”, “ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்த சங்கதபங்கமா........ ஆகதர்” என்றெல்லாம் வேதாகமங்களை வெறுத்த சமண சாக்கியர்களைப் பதிகந்தோறும் பத்தாவது பாடலில் சாடிப் பாடியுள்ளமையும், “மாசுமெய்யர் மண்டைத்தேரர், குண்டர், குணமிலிகள், பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்” என்று நமக்கு அறிவுறுத்தி யுள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சமயங்கள் யாதாயினும் அதன் மரபுகளைக் கடைப்பிடிப்பதே அச்சமயிகளின் கடமை. அதில் மாறுபடுபவர்கள் அச்சமயத்திலிருந்து நீங்கியவராவர். “அனுச யப்பட் டதுஇது வென்னாதே கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் புனித னைப்பூவனு னூரனைப் போற்றுவார் மனித ரில்தலை யான மனிதரே.” - திருநாவுக்கரசர். கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகிய தொல்காப்பியத்தைக் கேட்டு அங்கீகரித்தவர் என்று அதன் பாயிரத்தில் “அதங்கோட்டாசான்” என்பவரை, பாயிரம் பாடிய தொல்காப்பியரின் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரர் குறிப்பிடுகிறார். அதில் அவர் அதங்கோட்டாசானை “நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” எனக் குறிப்பிடுகிறார். சதுர்வேத பண்டிதராகக் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சேரநாட்டுத் தமிழர் ஒருவர் விளங்கியிருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியமும் வேதத்தை “அந்தணர் மறை” என்றே குறிப்பிடுகிறது. இடைச்சங்க காலத்துப் பாண்டிய மன்னனாகிய முதுகுடுமிப் பெருவழுதி, வேத வேள்விகள் பல செய்வித்தமையால் “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்ற சிறப்புப் பெயர் பெற்றான். தமிழின் மிகப் பழம்பெரும் அறநூலாகிய திருக்குறளும் “அந்தணர் நூ”, “ஓத்து” என்று வேதத்தைச் சொல்கிறது; “அவிஉணவு” என்று அவிர்ப்பாகத்தை - வேள்வி உணவைச் சொல்கிறது. திருக்குறள் “அறுதொழிலோர்” என்று குறிப்பிடுவதில் உள்ள ஆறு தொழில்களில், “வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேத வேள்வி செய்தல், வேத வேள்வி செய்வித்தல்” என்பன அடங்கும். திருக்குறளைத் “தமிழ் மறை” என்கிறோம். “மறை என்ற சொல் வடமொழி வேதத்தையே குறிக்கும். ஆகையினால் “தமிழ்” என்கிற முன் ஒட்டுச் சேர்த்துச் சொல்கிறோம். சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் அக்காலத்தில் வேத வேள்விகள் பரவலாக நடந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன. காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் திருமணம் வேத முறைப்படி, “மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட நடந்தது” என்று வருகிறது. கண்ணகி கோட்டத்திற்குச் சேரன் செங்குட்டுவன் வேத விதிப்படி குடமுழுக்குச் செய்வித்தான்; அத்திருவிழாவில் வேள்விச் சாலைக்கு மாடல மறயோனும் செங்குட்டுவனும் சென்ற காட்சி இளங்கோவடிகளால் விவரித்துச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளில், தமிழ் நிலத்தில் - தமிழரின் வாழ்வில் வேதங்கள் - வேள்விகள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய ஆவணக் குறிப்புகள். தமிழில் வேதங்கள் என்றோ, தமிழில் வேள்விகள் என்றோ கூறுவதற்குச் சான்றே இல்லை. தேவாரங்கள் வேதசாரங்கள். அவை கைகாட்டுவது வேதங்களி - ஆகமங்களை - வேத வேள்விகளை. திருமுறைகளில் வேத வேள்விகள் பற்றிய நூற்றுக்கணக்கான புகழுரைகள் உள்ளன. வேத வேள்விகளை நிந்தனை செய்வதை பெரும் குற்றமாகவே நம் திருமுறைகள் அறிவிக்கின்றன. அப்படிச் செய்பவர்களைப் புறச்சமயத்தார்களாகவே அவை புறந்தள்ளுகின்றன. திருமுறைகளில் மிகப் பழமையானது எனப்படும் திருமந்திரம், “வேதத்தைவிட்ட அறம் இல்லை” என்றதுடன், வேதம் பற்றித் தர்க்கவாதம் செய்தல் கூடாது எனவும் எச்சரிக்கிறது. வேதம், ஆகமம் பற்றித் தனித் தலைப்பிட்டே திருமூலர் கொண்டாடுகிறார். தன்னை நன்றாகப் படைத்தது, சிவனை நன்றாகத் தமிழ் செய்வதற்காக என்று குறிப்பிட்ட அவர், வேதங்களைப் புகழ்ந்ததை மட்டும் கண்டும் காணாமற்போவது எப்படி முறையாகும்? தமிழருக்கென்று தனியொரு வேள்வி இருந்ததாக எவ்விதச் சான்றும் இல்லை. சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள் போன்ற அருளாளர்கள் வாழ்ந்த காலங்களில் தமிழில் வேள்வி, தமிழில் கும்பாபிஷேகம் என்றெல்லாம் மரபை மாற்றி யாரும் பேசவுமில்லை, செய்யமுற்படவும் இல்லை. எனவே அவை “மரபு மீறல்” எனச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை, அவர்களுக்கு எழவில்லை. நாம் பேசுவது தமிழ். திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருமுறைப் பாடல்கள், “திருநெறிய தமிழ்” என்றும், அது இறைவன் தனது வாக்கென்றும் குறித்துள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாடுவார்க்கும் கேட்பார்க்கும்; அவர்க்கும் தமர்க்கும், இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் உண்டென்றும்; எல்லியும் பகலும் இடர் இல்லை என்றும், எல்லாப் பேறுகளும் கிட்டுமென்றும் அருளியுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருமுறையைக் கொண்டு வேள்வி செய்ய யாண்டும் அருளியதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் அனல்வாதப் புனல்வாதங்களால் திருநெறியத் தமிழ்த் திருமுறைகள் “வெந்தழலில் வேகாது, வெள்ளத்தால், போகாது” என்று மெய்ப்பித்துக் காட்டிய பின்னும், திருமுறைகளை குண்டத்திலும் குடத்திலும் செலுத்துவது நெறியல்லா நெறி என்று உணர வேண்டும். இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயனும் அளிக்கும் தமிழை - திருமுறைகளை ஊடகங்கள் வழி செலுத்துவதுதான் தமிழுக்கும் திருமுறைக்கும் பெருமையா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறெல்லாம் சொல்வது இடையாயினார்க்கு, மறைகள் நிந்தனை சைவ நிந்தனைபொறா மனத்தினார்க்கு. ஆங்கிலக் கல்வியை உயர்த்திப் பேசினால் அப்படிச் சொல்டவரை, யாரும் “தமிழ்த் துரோகி” என்று சொல்வது இல்லை. “தமிழும் வடமொழியும் சைவத்தின் இரு கண்கள்; திருமுறைகளும் வேதங்களும் நம் கண்மணிகள்” என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் மரபைச் சொன்னால், சிலர் தமிழ்ப் பற்றில்லாதவர்கள் என்ற ஆதாரவிரோத வார்த்தைகளை அள்ளிவிடுகிறார்கள். திருமுறைகள் ஓதுவதற்கு உரியன. அப்படித்தான் திருமுறை ஆசிரியர்களே நமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். திருமுறை ஓதினால் நிச்சயம் பயன் உண்டு. வேதங்களில் வேள்விச் சடங்குகள் உள்ளன. அந்தத் தேவை உள்ள இடங்களில் அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் தெரிந்துவைத்துக் கொண்டும் தமிழ்ப் பற்று என்னும் போர்வையில் புகுந்து கொண்டு, வசதிக்காக - புகழுக்காக - பொருளுக்காக - கூட்டம் சேர்ப்பதற்காக – மரபுகளை மறைத்துப் பேசலாமா? செயற்படலாமா? எதற்கு எது உரியதோ, அதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். அறிவாற்றல்களால், ஞானத்தால் பழுத்த நம்முன்னோர்கள் எப்படிச் சொன்னார்களே அப்படி நடக்க வேண்டும்; அவர்களுக்கு இல்லாத தமிழ் பற்று நம்மில் யாருக்கு இல்லை. வேதங்களை உடன்படுபவர்களுக்குத்தான் “வேள்வி” என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி வரும். மழையை வரவழைக்க வேள்விகள் உள்ளன. அவை வேத வேள்விகள். ஆனால், சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் திருப்புன்கூர் தலத்தைத் தரிசனம் செய்தபோழ்து, “வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீரில்லாத காலத்தில் மழை பெய்ய” பன்னிருவேலி நிலம் இறைவர்க்குக் கொடுத்ததும், பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன்பொருட்டு ஏயர்கோன் கலிக்காமரிடம் மீண்டும் ஒரு பன்னிரு வேலி நிலத்தை இறைவன் பெற்றருளினான் என்ற வரலாற்றைத் திருப்புன்கூர்த் தேவாரத்தில் பதிவு செய்துள்ளார். பெருமழையைத் தருவித்ததும், நிருத்தியதும் பக்தியே ஆகும். எனவே திருப்பதிகங்கள், ஓதிப் பயன்பெற உரியன என உணர வேண்டும். திருமுறைகளை ஓதினாலே பயனுண்டு என்ற சைவத்தின் அரிச்சுவடித் தத்துவத்திலே நம்பிக்கை வேண்டும். “பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு” (ஏயர்கோன் கலிக்காமர் வரலாறு) மழையை நிறுத்தினார் - திருமுறையைக் கொண்டு வேள்வி செய்து மழை பெய்யவில்லை. வேள்வி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால் வேத வழிப்பட்டதாக ஆகிவிடும். வேதத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் வேள்வியில் நம்பிக்கை உண்டு! அதையும் திருமுறைகளைக் கொண்டு செய்வது என்பது செய்யத்தக்க செயல் அல்ல என்பதை உணர வேண்டும். இத்தகு செயல்களை, கடந்த 50 ஆண்டுகட்கு முன்னர்வரை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். இத்தகைய “மரபு மீறும் செயல்கட்கு மறைகளோ, திருமுறைகளோ எந்த வழியும் வைக்கவில்லை” என்று தெரிந்தே அவ்வாறு செய்வது, திருமுறைகளில் ஆழங்காற்பட்ட பயிற்சி இல்லாத, தமிழ் ஆர்வம் என்ற மாயைக்கு உட்பட்ட, எளிய மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அதன்மூலம் புகழ், பொருள் சேர்க்கும் நோக்கமாகவே கருதப்படும். தமிழ்ப் பற்று - திருமுறைப் பற்று என்று கொள்ளப்பட்டாது. சிந்தித்து தெளிந்தார்க்கு பாராயணம் செய்யவேண்டிய திருமுறைகளைத் தொடர்ந்து தந்துள்ளோம். நாள்தோறும் அதனைப் பாராயாணம் செய்யுங்கள். ஒல்லும் வகையில் பிறரையும் அந்நெறியில் ஆற்றுப்படுத்துங்கள். வேண்டுவோர்க்கு இம்மையே நன்மைதரும் திருமுறைத் திருப்பதிகங்கள் அனுப்பப்பெறும். பண் - பழம்பஞ்சுரம் திருச்சிற்றம்பலம் 1156 வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.1 1157. வைதி கத்தின் வழியொழு காதவக் கைத வமுடைக் காரமண் தேரரை எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே மைதி கழ்தரு மாமணி கண்டனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.2 1158. மறைவ ழக்கமி லாதமா பாவிகள் பறித லைக்கையர் பாயுடுப் பார்களை முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே மறியு லாங்கையில் மாமழு வாளனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.3 1159. அறுத்த வங்கமா றாயின நீர்மையைக் கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ் செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.4 1160. அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே வெந்த நீற தணியும் விகிர்தனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.5 1161. வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே காட்டி லானை உரித்தஎங் கள்வனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.6 1162. அழல தோம்பும் அருமறை யோர்திறம் விழல தென்னும் அருகர் திறத்திறங் கழல வாதுசெ யத்திரு வுள்ளமே தழல்இ லங்கு திருவுருச் சைவனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.7 1163. நீற்று மேனிய ராயினர் மேலுற்ற காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய் ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.8 1164. நீல மேனி அமணர் திறத்துநின் சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே மாலும் நான்முக னுங்காண் பரியதோர் கோல மேனிய தாகிய குன்றமே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.9 1165. அன்று முப்புரஞ் செற்ற அழகநின் துன்று பொற்கழல் பேணா அருகரைத் தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே கன்று சாக்கியர் காணாத் தலைவனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3.108.10 1166. கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப் பாடல் வல்லவர் பாக்கிய வாளரே. வேத நெறி தழைத்தோங்க! மிகு சைவத் துறை விளங்க!! சிவபெருமான் நாம் உய்ய அருள் செய்த வேதங்களானவை இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கும். இவை காலங்காலமாகப் பேணப்பட்டு பேணுவரை நன்னெறிக்கு உய்த்து வருகின்றன. இவற்றை நம் திருமுறை அருளாசிரியர்கள் போற்றியுள்ள விதங்கள் தான் என்னே! திருமுறை முழுமையிலும் வேதங்களின் பெருமையையும் அவ்வேதங்களை ஓதி இவ்வுலகம் பெறும் நன்மையையும் தங்கள் கண்களால் கண்டு போற்றியுள்ளனர் நம் பெருமக்கள். அவற்றைத் தொகுக்கும் வண்ணமாக திருமுறை போற்றும் திருமறையாக இங்கு அமைந்துள்ளது. சுருங்கா மறை நான்கினையும் அருளிச் செய்த வேதியன் வேதகீதனாகிய சிவபெருமான் நம் வழிவழியாக திருமறைகள் திருமுறைகளின் மூலம் அப்பெருமானைப் போற்ற அருளட்டும். சில முக்கியக் குறிப்புகள்: விண்ணவர் அறிகிலா வேத வேதாந்தனூர் (வேதங்களைக் குறித்த திருஞானசம்பந்த நாயனார் வேதாந்தங்களையும் குறிப்பிட்டுள்ளார்.) சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் (சாம வேதத்திற்கு ஆயிரம் சாகைகள்) ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு, ஆறங்கம், வேதம் தெரித்தானை (அறம், பொருள், இன்பம், வீடு என்பவை புருஷார்த்தங்கள். நான்கு வேதங்களின் சூக்குமப் பொருள் என்ன என்று கேட்ட சனகாதி முனிவர்களுக்கு அவற்றில் விரவி இருப்பன இப்புருஷார்த்தங்கள் என்று ஆல் நிழற் கடவுளாக அமர்ந்து அருள் செய்தார்.) பூலோக புவலோக சுவலோகமாய் .. எம்மடிகள் நின்றவாறே (பூ: புவ: சுவ: என்பன வ்யாஹ்ருதிகள். காயத்திரி மந்திரத்தோடு பிரியாது சொல்லப்படுவன.) சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை மீண்டனன் மீண்டனன் வேத வித்தல்லாதவர்கட்கே (வேதங்களின் அடிப்படை இல்லாதவர்களை விட்டு விலகுதலே பொருந்தும்) வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின் ஓதத் தகும்அறம் எல்லாம் உள; தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே சீவ துரியத்துத் "தொம்" பதம் சீவனார் தாவு பர துரியத்தின்ல் "தத்" பதம் மேவு சிவ துரியது "அசி" மெய்ப்பதமோவி விடும் "தத்துவமசி" உண்மையே (சந்தோக உபநிஷதத்தில் வரும் மஹாவாக்கியம் "தத் த்வம் அஸி". அதனுடைய தெளிவான பொருளை விளக்கும் திருமந்திரம் இது.) முதல் திருமுறை : "மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலராகி ........." - (திருப்பிரமபுரம் - 4) "அருநெறிய மறை வல்ல" - (திருப்பிரமபுரம் - 11) "பண்ணிலாவும் மறைபாடலினான் ....." - (திருப்புகலூர் - 3) "பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே ....... மெய்ம்மொழி நான்மறை யோர் மிழலை" - (திருப்புகலியும் திருவீழிமிழலையும் - 1) தளராத வாய்மைப் புந்தியி னான்மறை யோர்களேத்தும் புகலி நிலாவிய புண்ணியனே 1.4.5 "நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன்" - (திருப்புகலியும் திருவீழிமிழலையும் - 11) மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.2 "மறையுடை யான் கனலாடு கண்ணால்" - (கீழைத்திருக்காட்டுப்பள்ளி - 8) "அண்ட மறையவன் (பிரமன்)" - (கீழைத்திருக்காட்டுப்பள்ளி - 10) "அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ........" - (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் - 1) நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த 1.6.2 தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி 1.6.3 நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடுசெய்ய 1.6.4 பாடல் முழவும் விழவும்ஓவாப் பன்மறை யோரவர் தாம்பரவ 1.6.5 புனையழ லோம்புகை அந்தணாளர் பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப 1.6.6 மாண்டங்கு நூன்மறை யோர்பரவ 1.6.8 "அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணை யானும் அறிவரிய மந்திர வேதங்கள் ஓதுநாவர்" - (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் - 9) தக்கன்றன் வேள்விசாடும் அத்திய ரென்றென் றடியரேத்தும் ஐயன் 1.8.2 "கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம் விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே." - (திருவேணுபுரம் - 8) "வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்" - (திருவேணுபுரம் - 11) வேதக் கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும் 1.10.9 வேதம்பயின் றேத்திப் புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை 1.16.8 "மாறா மறை நான்காய்" - (திருவீழிமிழலை - 2) "மறைமுத்தீ ஆனவன்" - (திருவீழிமிழலை - 5) "அயன் மறை பூட்டி நின்று" - (திருவீழிமிழலை - 6) மறையாயின பலசொல்லி 1.12.5 மறையோனுறை கோயில் 1.12.7 மறைஞானசம் பந்தன் 1.12.11 "பண்ணார்தரு மறையாய் ........ கடவுள்" - (திருவியலூர் - 5) மறையும்மவை யுடையானென 1.14.9 கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த 1.16.2 பொருளார்தரு மறையோர்புகழ் 1.17.9 திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே. 1.20.1 "அறநெறி மறையொடும் அருளிய பரன்" - (திருவீழிமிழலை - 5) "நலமலிதரு மறை மொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல் மலரவை கொடுவழி படுதிறன் மறையவ" - (திருவீழிமிழலை - 7) மலர் வளர்மறை யவன் 1.20.8 " ................ உரைமறை ................." - (திருச்சிவபுரம் - 1) " ................ புவியிடை மறைதரு வழி மலி மனிதர்கள்" - (திருச்சிவபுரம் - 2) "சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடு" - (திருச்சிவபுரம் - 6) "................. நினைவொடுமலர் மறையவன் மறைவழி வழிபடு மறைவனம்" - (திருமறைக்காடு - 6) "மறைமுறை யுணர் மறைவனம்" - (திருமறைக்காடு - 8) "மானப் பாடி மறைவல் லானையே" - (திருக்கோலக்கா - 2) திருமறைக்காடு - பதிகம் முழுவதும் "இருக்கின் மலிந்த இறைவர்" - (சீர்காழி - 10) "மறையும் ஓதி ......" - (திருச்சோற்றுத்துறை - 5) சீரு லாவு மறையோர் நறையூரிற் 1.29.1 வீடு மாக மறையோர் நறையூரில் 1.29.2 நண்பு லாவு மறையோர் நறையூரிற் 1.29.5 மெய்த்து லாவு மறையோர் நறையூரிற் 1.29.11 மாமறை யோர்நிறைந் தீண்டிப் பொலியும் 1.30.3 "வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்" - (திருவிடைமருதூர் - 4) "கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை அடையார் பொழில்" - (திருஅன்பிலாலந்துறை - 2) மறையும்பல வேதிய ரோத ஒலிசென் றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.4 மறைகொண் டநல்வா னவர் 1.36.4 "உள்ளங் கலந்திசை யாலெழுந்த வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னக ராரே." - (திருவேட்களம் - 3) "வித்தகர் வேத முதல்வர்" - (திருவேட்களம் - 10) "நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்" - (திருவாழ்கொளிபுத்தூர் - 11) "விண்ணவரேத்தும், பாரணி திகழ்தரு நான்மறையாளர்" - (திருப்பாம்புரம் - 1) "மிக்க நல்வேத வேள்வியுளெங்கும் விண்ணவர்" - (திருப்பாம்புரம் - 2) "பன்னுநான் மறைகள் பாடிட வருவார்" - (திருப்பாம்புரம் - 3) "விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி யோவா" - (திருப்பாம்புரம் - 5) "நார்மலிந் தோங்கு நான்மறை ஞான சம்பந்தன்" - (திருப்பாம்புரம் - 11) "வித்தகர் வேத முதல்வர்" - (திருப்பேணுபெருந்துறை - 6) விழையா ருள்ளம் நன்கெழு நாவில் வினைகெட வேதமா றங்கம் பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல் பெரியோ ரேத்தும் பெருமான் 1.42.7 "அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும் பங்கமில் ......." - (திருக்கற்குடி - 2) "மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்" - (திருவாலங்காடு - 5) "நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்" - (திருவாலங்காடு - 7) "பாடல் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான்" - (திருவதிகை வீரட்டானம் - 3) "பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்" - (திருவதிகை வீரட்டானம் - 4) "வேத முதல்வன் நின்றாடும்" - (திருவதிகை வீரட்டானம் - 7) "சொல்லடைந்த தொன்மறை யோடங்கங் கலைக ளெல்லாம்" - (திருச்சிரபுரம் - 1) எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த் திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. 1.47.6 நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச் 1.47.9 "அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணிகொள் சம்பந்தன்" - (திருச்சிரபுரம் - 11) "ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே" - (திருசேய்ஞலூர் - 1) வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித் தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே. 1.48.5 "நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே" - (திருநள்ளாறு - 3) "தயங்கு சோதீ சாமவேதா" - (திருவலிவலம் - 2) "மறையுடையாய் தோலுடையாய்" - (திருநெடுங்களம் - 1) "விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான் குணர்ந்து" - (திருநெடுங்களம் - 6) செழுமறைசேர் நாவராயும் 1.53.1 ".................. மறைகள் முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே" - (திருமுதுகுன்றம் - 2) தைம்புலனும் அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. 1.53.5 திருஓத்தூர் (முழுப் பதிகமும்) "வேதம் ஓதும் விகிர்தரே" - (திருப்பாற்றுறை) "பூதம் பாடப் புறங்காட் டிடையாடி வேத வித்தகன் ................. " - (திருவேற்காடு - 3) "பண்ணி னார் மறை பாடலன் ஆடலன்" - (திருக்கரவீரம் - 5) "............... கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்கும்" - (திருத்தூங்கானை மாடம் - 1) வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு 1.60.2 ".................. விண்ணோடு மண்மறைகள் தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன்" - (திருத்தோணிபுரம் - 6) சொற்பதஞ்சேர் மறையாளர் 1.60.9 "வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்" - (திருச்செங்காட்டங்குடி - 3) "............. சம்பந்தன் ............ மறையிலங்கு தமிழ் வல்லார்" - (திருச்செங்காட்டங்குடி - 11) "நன்று நகு நாண் மலரால் நல்லிருக்கு மந்திரம் கொண்டு ஒன்றிவழி பாடு செயல் உற்றவன் தன் ஓங்குயிர் மேல்" - (திருக்கோளிலி - 3) "சொன்னவிலும் மாமறையான் தோத்திரம் செய்வாயினுளான்" - (திருக்கோளிலி - 7) "மந்திரத்த மறைபாட வாள் அவனுக் கீந்தானும்" - (திருக்கோளிலி - 8) நாணமுடை வேதியனும் 1.62.9 சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன் பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. 1.63.1 பொய்யாவேத நாவினானும் 1.64.9 "நன்றுதீதுஎன் ரொன்றிலாத நான்மறையான்" - (திருப்பூவணம் - 6) "சரியா நாவின் வேத கீதன் தாமரை நான் முகத்தன்" - (சீர்காழி - 1) வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடி 1.65.7 "அங்கம் ஆறு வேத நான்கும் ஓதும் அயன்" - (திருப்பல்லவனீச்சரம் - 9) ".................. விடையார் பலவேதம் அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார்" - (திருச்சண்பைநகர் - 1) "......................... மறையோதி .............." - (திருச்சண்பைநகர் - 9) "மாமறையின் மன்னிய தொன்னூலர் சாதி கீத வர்த்தமானர்" - (திருச்சண்பைநகர் - 10) மாமறையின் மன்னியதொன்னூலர் 1.66.10 வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச் சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர் 1.66.11 "வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு ....." - (திருப்பழனம் - 1) "காதார் குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே" - (திருக்கயிலாயம் - 6) "மறையின் இசையார் ........." - (திருஈங்கோய்மலை - 4) மறைகொள்கீதம் பாடச் 1.71.1 "நீரார் முடியர் கறைகொள் கண்டர் மறைகள் நிறை நாவர்" - (திருநரையூர்ச்சித்தீச்சரம் - 5) "அடியா ரவரும் அருமாமறையும் அண்டத்து அமரரும் முடியால் வணங்கி ..." - (திருநரையூர்ச்சித்தீச்சரம் - 9) "மறையார் பாடல் ஆடலோடு மால் விடைமேல் வருவார்" - (திருக்கானூர் - 3) "ஓம வேத நான்முகனும்" - (திருக்கானூர் - 10) "பூதங் கொடுகொட்டி குடமுழாக் கூடியமுழவப் பண்திகழ்வாகப் பாடியோர் வேதம் பயில்வர்" - (திருவெங்குரு - 4) புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள் புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.6 ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து 1.75.10 "நான்மறை நாவன் ............ ஞானசம்பந்தன்" - (திருவெங்குரு - 11) நால்மறை நாவன் நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன் 1.76.11 "பண்ணுலாம் மறைகள் பாடினர் எனவும்" - (திருஅச்சிறுபாக்கம் - 5) வேதமும் வேத நெறிகளு மாகி 1.77.10 "வேதமும் வேத நெறிகளு மாகி விமல வேடத்தொடு ........" - (திருஅச்சிறுபாக்கம் - 10) எரியிடை மூன்றினர் நான்மறை யாளர் மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம் 1.79.3 மறைசேர் வருங்கலை ஞானசம் பந்தன 1.79.11 பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச் 1.80.3 நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ் சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த 1.81.1 வேதத் தொலியோவா வீழி மிழலையே. 1.82.2 பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு 1.82.3 மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும் விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே. 1.82.5 படித்தார் மறைவேள்வி பயின்றார் 1.82.8 தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே. 1.82.10 மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய 1.83.9 திருமா மறைஞான சம்பந் தன 1.83.11 மொழிசூழ் மறைபாடி 1.84.4 தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத் துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக் 1.85.2 நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய 1.85.11 மறையும் பலபாடி 1.87.8 மறையான் நெடுமால்காண் பரியான் 1.89.9 மறைகொள் மிழலையீர் 1.92.2 பாடு மறையினன் 1.95.1 மறையார் மருதரை 1.95.7 மறையு ளான்கழற்கு 1.96.5 பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும் 1.97.5 புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே. 1.97.7 சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால் 1.98.8 அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத் 1.100.2 தொன்மறை பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை 1.100.5 மொய்யொளி உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும் 1.100.9 மறைநால்வர்க் குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார் 1.101.4 முக்கண் மறையோனே 1.102.2 அருமாமறை தான்விரித்தான் 1.104.1 அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும் புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே. 1.104.6 வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப் போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள் 1.104.11 பாடலன் நான்மறையன் 1.105.1 மறையான் 1.105.6 கொடிமாடச் செங்குன்றூர் நின்ற வேதியனைத் 1.107.10 வேதம் பாடலி னாலினியான் 1.108.2 அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல் மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில் 1.108.4 உரைவேதம் நான்குமவை பண்டிசை பாடலினான் 1.108.7 அங்கமொ டருமறை யருள்புரிந்தான் 1.109.2 மறையவன் 1.109.6 வண்ணநன் மலருறை மறையவனுங் 1.109.9 அருமறை ஞானசம் பந்தன 1.109.11 மறையவன் 1.110.6 அந்தணர் ஓத்தினொ டரவமோவா எந்தைதன் வளநகர் இடைமருதே. 1.110.10 மையணி மிடறுடை மறையவனூர் 1.111.4 மறையவன் 1.111.5 வேதங்கள் வேறுவேறு தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.1 அருமறை யங்கமானான் 1.113.4 விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே. 1.113.6 மறையவன் வளநகர் மாற்பேறே. 1.114.3 நீதியால் வேதகீ தங்கள்பாட 1.114.8 நான்மறைக்கும் இடமவன் இராமன தீச்சுரமே. 1.115.8 வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே 1.116.4 வேணு புரத்தெங்கள் வேதியரே. 1.117.2 செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல் விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே. 1.117.4 மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச் 1.118.5 பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி 1.119.3 தொன்மறை ஆறங்கம் ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.4 யேதமில் வேதியர் தாந்தொழும் அன்பன வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.6 மறையவன் 1.121.8 நிறைமறை மொழியினர் 1.122.3 நெடுமறை தொடர்வகை யுருவினன் 1.123.10 யெழில்மறை தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை 1.123.11 புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர் முகமது சிதைதர முனிவுசெய் தவன் 1.124.5 வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி நிரம்பினர் மிழலையை நினையவ லவரே. 1.124.7 வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி 1.124.11 மறையவன் 1.125.5 புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம் பந்தன 1.125.11 கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 1.126.4 கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 1.126.7 யொருங்கிய மனத்தோ டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து நான்மறை யோதி ஐவகை வேள்வி அமைத்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை 1.128 மறை முதல் நான்கும் 1.128 இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் மறுவிலா மறையோர் 1.128 மண்மேல்தேவர் கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க மேல்படுக்குங் கழுமலமே. 1.129.10 மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் 1.130.11 தக்கனது பெருவேள்வி சந்திரனிந் திரனெச்சன் அருக்கன்அங்கி மிக்கவிதா தாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர்கோயில் 1.131.3 அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ் இருந்தருளி 1.131.7 மறை பாட 1.131.8 ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியும் முதுகுன்றமே. 1.131.10 ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோன் நின்றகோயில் பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருள்சொல்லும் மிழலையாமே. 1.132.1 புந்தியினான் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற்கொண்டு வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர் சேருமூர் மிழலையாமே. 1.132.9 செழுமறைகள் பயிலும்நாவன் பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் 1.132.11 பாடல்நான் மறையாகப் 1.133.5 திருந்து மறையோர் திருப்பறி யலூரில் 1.134.2 தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் 1.134.3 தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் 1.134.5 வேதர்வேதமெல் லாமுறையால்விரித் தோதநின்ற ஒருவனார் 1.135.3 பரவினாரவர் வேதம்பராய்த்துறை அரவமார்த்த அடிகளே. 1.135.5 மறையுமோதுவர் 1.135.6 வேதமொ டேழிசை பாடுவ 1.136.1 இரண்டாம் திருமுறை : சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர் 2.1.9 மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர் செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர் 2.3.10 தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச் 2.4.6 பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே. 2.4.7 சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர் 2.4.9 மறை யின்முறை யாலொர் சுலாவழல் ஆடல் மேவுமவர் 2.5.1 பேசுவர் மாமறை 2.7.4 மறை ஞானசம் பந்தன 2.7.11 திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள் 2.8.2 மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள் 2.8.5 மாமறை வல்ல முனிவனுங் 2.8.9 செழு மாமறைப் பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே. 2.8.10 விடை யேறிய வேதியன் 2.9.4 இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட 2.10.2 மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக் 2.10.4 நல்லானை நான்மறை யோடிய லாறங்கம் வல்லானை 2.11.1 வேதிய ரோதி மிடைகாழி இருந்தானை 2.11.3 மறையானை 2.12.1 தூயவா யம்மறை யோதிய வாயானை 2.12.8 மறை பாடுவர் 2.12.9 இமை யோர்தொழும் வேதனை 2.13.3 வேதமும் வேள்வியு மாயநன் குடையானைக் 2.13.4 வேதமும் வேள்வியு மானானைக் 2.13.7 ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில் 2.14.2 விதியுடை வேதியர் தாந்தொழும் நெதியானே 2.15.2 மறையானே 2.15.9 முன்னொரு நான்மறை யாறங்கம் பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை 2.16.6 பெரிய மறையார் மருகல் 2.18.3 மறைதான் 2.19.7 அழுந்தை மறையோர் 2.20 (பதிகம் முழுவதும்) பெரியம் மறையார் தருவாய் மையினாய் 2.21.6 பழியா மறைஞா னசம்பந் தன 2.21.11 மறையான் 2.22.3 மறைபா டநடங் குறையா அழகன் 2.22.7 மறையி னான் 2.25.6 "............. மறையினார் மழுவாளினார் மல்கு" - (திருநெல்வாயில் - 4) "..................மறை ஓதியார் எமதுச்சி யாரே" - (திருநெல்வாயில் - 7) "நம்பன் நான்மறை பாடு நாவினான்" - (திருஇந்திரநீலபருப்பதம் - 3) ".................. நான்மறை ஓதியா ரொடும் கூடலார் குழை" - (திருக்கருவூர் ஆனிலை - 2) "விண்ணுலா மதி சூடி வேதமே பண்ணுளார்......." - (திருக்கருவூர் ஆனிலை - 3) செல்வமறை யோருறை திருப்புகலி யாமே. 2.29.07 "வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாக" - (திருக்கருப்பறியலூர் - 3) மறை யோனைத் தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால் 2.31.4 "விருத்தனவன் வேதமென அங்கமவை யோதும்" - (திருக்கருப்பறியலூ - 5) "நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன் றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவர்" - (திருவையாறு - 4) "கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர் நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே." - (திருநள்ளாறு - 6) "வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும் ஓதி யரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே." - (திருநள்ளாறு - 7) "நயந்தரும வேதவொலியார் திருநள்ளாறே" - (திருநள்ளாறு - 9) "............... வேதச் சந்தம்விர விப்பொழில் முழங்கிய" - (திருநள்ளாறு - 10) "வேதமொலி சொல்லி மறை யாளரிறை வன்றன் பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே" - (திருப்பழுவூர் - 4) "ஒன்றுமிரு மூன்றும்ஒரு நாலும் உணர்வார்கள்" - (திருப்பழுவூர் - 9) "மறையின் ஒலி வானவர் ..........." - (திருத்தென்குரங்காடுதுறை - 3) "சதுரம்மறை தான்துதி செய்து ........" - (திருமறைக்காடு - 1) "பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி மலரால்வழி பாடுசெய்........" - (திருமறைக்காடு - 6) "வேதம்பல ஓமம் வியந்தடி போற்ற" - (திருமறைக்காடு - 10) திருமறைக்காடு (பதிகம் முழுவதும்) வேதியன் கோயில் 2.38.2 "வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்" - (திருச்சாய்க்காடு - 7) "ஓம் என்று மறைபயில்வார் .........." - திருப்பிரமபுரம் - 2) "அங்கமா றோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார்" - (திருஆக்கூர்த்தான்தோன்றிமாடம் - 4) "பண்ணொலிசேர் நான்மறையான் பாடலினோடு" - (திருஆக்கூர்த்தான்தோன்றிமாடம் - 6) "பாங்கினார் நான்மறையோடு ஆறங்கம்" - (திருஆக்கூர்த்தான்தோன்றிமாடம் - 7) "வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான்" - (திருப்புள்ளிருக்குவேளூர் - 5) திருப்புள்ளிருக்குவேளூர் பதிகம் முழுவதும் "மையுலா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான்" - (திருக்கைச்சினம் - 1) "நடம்மல்கும் ஆடலினான் மறையோர் பாடலினான்" - (திருக்கைச்சினம் - 2) "பாடலார் நான்மறையான் பைங்கொன்றை" - (திருக்கைச்சினம் - 3) "மங்கையோர் கூறுடையான் மன்னுமறை பயின்றான்" - (திருக்கைச்சினம் - 6) "பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி" - (திருநாலூர் மயானம் - 6) ".......................... வேதங்கள் நாலோடும் ஆறங்கம் நாலூர் ......." - (திருநாலூர் மயானம் - 9) "...........ஞானசம் பந்தன்றான் நாலுமறையோதும்" - (திருநாலூர் மயானம் - 11) மறையவன்றன் மேலடர்வெங் காலனுயிர் விண்ட 2.48.5 வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென் 2.48.10 தான லம்புரை வேதி யரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில் 2.49.7 "வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே" - (திருஆமாத்தூர் - 1) "ஓதி ஆரண மாயநுண்பொருள்........" - (திருஆமாத்தூர் - 6) "வாக்கினான் மறை யோதினாய்........" - (திருக்களர் - 10) "ஆய்ந்த நான்மறை பாடிஆடும் அடிகள்" - (திருப்புறவார் பனங்காட்டூர் - 4) "............ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன்" - (திருப்புறவார் பனங்காட்டூர் - 11) "மொழிமல்கு மாமறையீர்........." - (திருப்புகலி - 3) பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி 2.54.4 புகலிமறையோர் புரிந்தேத்த 2.54.10 "............. நால்வேதம் சொலச் சங்கையில்லாதீர்" - (திருத்தலைச்சங்காடு - 1) தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச் 2.55.9 "தலையான நால்வேதம் தரித்தார்" - (திருத்தலைச்சங்காடு - 10) "தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்" - (திருவிடைமருதூர் - 1) எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த 2.56.3 திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில் 2.56.5 இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில் 2.56.6 இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில் 2.56.7 மறைமல்கு நான்முகனும் 2.56.9 நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன் 2.56.11 பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர் 2.57.1 மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 2.57.03 குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற் 2.58.2 ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத் 2.58.10 சுருதி மறைநான் கான செம்மை தருவானைக் 2.59.5 வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே. 2.61.02 வேதத்தி லுள்ளது நீறு 2.66.2 வேத முடைய விமலர் 2.67.1 அருமறை தாங்கியா றங்கம் பாட லிலையம் உடையார் 2.67.4 மறையுடை யார் 2.67.7 ஞானசம் பந்தன் மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் 2.67.11 வேதபு ராணர் 2.67.6 மறையொலி கூடிய பாடல் 2.68.4 நம் வேதமு தல்வன் 2.68.10 மறைவளர் பாடலி னோடு 2.69.4 நான்மறையான் ஞானசம் பந்தன் 2.70.12 நான்மறையான் ஞானசம் பந்தன் 2.71.11 பொய்யா மறையானும் 2.72.9 வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் 2.73.3 கழுமலமந் தணர்வேத மறாத வூரே. 2.73.09 கருத்துடைய மறையவர்சேர் கழுமலம் 2.74.2 தரித்தமறை யாளர் 2.74.4 செழு மறைக ளெல்லாம் விரித்தபுகழ்ப் புறவம் 2.74.4 மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே. 2.75.01 கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள் 2.75.2 நாந யங்கொள்மறை யோதி 2.75.5 தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே. 2.75.08 மருவு நான்மறை யோனு 2.75.9 பண்ணி னான்மறை ஆய்ந்ததுவும் 2.76.4 மறை பாடினார் 2.77.1 மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ 2.77.8 விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன் 2.77.4 வீரமாகிய வேதியர் 2.77.7 பழியிலாமறை ஞானசம் பந்தன் 2.77.11 பன்னினார்மறை பாடினார் 2.78.5 சொற்றரும்மறை பாடினார் 2.78.7 வேத கீதர் 2.79.9 வரிய மறையார் 2.80.1 மறைநின் றிலங்கு மொழியார் 2.80.4 வேதத்தின் இசைபாடி 2.81.1 மறையோர்கள் நிறைந்தேத்தப் 2.81.3 பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச 2.81.6 தீயோம்பு மறைவாணர் 2.81.9 மறைக ளான்மிக வழிபடு மாணி 2.82.3 வேத வொலியின் சாலநல் வேலையோசை தருமாட வீதி கொடியாடு கொச்சை வயமே. 2.83.01 கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் வளர்கின்ற கொச்சை வயமே. 2.83.02 கனகக் குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல மறையோது கொச்சை வயமே. 2.83.03 முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் வளர்தூம மோடி யணவிக் குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சை வயமே. 2.83.05 அறவுரு வேதநாவன் 2.84.9 வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் விடையா னுகந்த நகர்தான் 2.84.10 மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் 2.85.4 மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல 2.85.9 நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் 2.85.11 விதியான வேத விகிர்தன் 2.86.2 குறைதீர்க்கு நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும் மறைவளர் நாவன் 2.86.6 மறைஞான பந்தன் 2.86.11 நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்ப னவனே. 2.87.04 அணுகிய வேதவோசை யகலங்க மாறின் பொருளான ஆதி யருளான் 2.87.6 வேதம் எழிலார வென்றி யருளும் 2.87.7 மறையாளர் பேண 2.87.10 மறைநாவன் 2.88.5 விரிநூலன் வேத முதல்வன் 2.88.9 மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. 2.89.01 கீத மாமறை பாடுதல் மகிழ்வர் 2.89.3 அருமறை ஞானசம் பந்தன் 2.89.11 மறைக்காடு பதிகம் முழுவதும் சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும் 2.92.8 "வானஞ் சும்பெரு விடத்தை உண்டவன் மாமறையோதி" - (திருஅரசிலி - 5) சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் 2.94.1 பங்க மில்பல மறைகள் வல்லவர் 2.96.1 சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே. 2.96.05 இடம தாமறை பயில்வார் 2.96.7 வேதியன் 2.99.9 "வேதம் ஓதுநெறியினான் வீரட்டானம்" - (திருக்கோவலூர் வீரட்டம் - 8) வேதந்தாம் பன்னு நன்பொருள் பயந்தவர் 2.102.1 ஒண் சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர் தகுசிர புரத்தார் 2.102.7 குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு தெழவினை குறுகாவே. 2.102.08 "பன்னுலாவிய மறையொலி நாவினர்" - (கீழ்வேளூர் - 1) மறைநி லாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக் கோயில் 2.105.7 திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் கோயிலெம் பெருமானை 2.105.11 "மறைகள் ஓதுவர் வருபுனல் சூழ்வலஞ்சுழி" - (திருவலஞ்சுழி - 4) வேதியன் ஞானசம் பந்தன் 2.106.11 "வேதம் ஓதிய நாவுடையான் இடம் விற்குடி" - (திருவிற்குடி வீரட்டம் - 4) கவுணியன் செழுமறை நிறைநாவன் 2.110.11 சொல்லிய அருமறை யிசைபாடி 2.111.6 அங்கமோ டருமறை யொலிபாடல் 2.111.11 மறைவல் லாரொடு வான வர்தொழு 2.112.9 புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே 2.113.2 மறை கலையெலாங் கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே. 2.113.04 பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற் கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே. 2.113.05 வேதர் 2.113.6 "சிரபுரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்" - (திருமாந்துறை - 11) "சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர்" - (திருவாய்மூர் - 6) "அங்கமொடு அருமறை ஒலிபாடல் அழல்நிறவண்ணர்" - (திருவாய்மூர் - 11) "வேதம்நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கிடம்" - (திருக்கேதாரம் - 2) "ஊழியூழி உணர்வார்கள் வேதத்தின் ஒண்பொருள்களால்" - (திருக்கேதாரம் - 5) மறையோதி 2.114.7 "மடந்தை பாகத் தடக்கும் மறையோதி ......." - (திருக்கேதாரம் - 7) "வேத வித்தாய் வெள்ளை நீறுபூசி" - (திருஇரும்பைமாகாளம் - 2) மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே. 2.117.02 மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே. 2.117.06 மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. 2.117.10 வேதம் விரித்தோத வல்லார் 2.118.6 பைந்தாமரை யின்மிசை இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற 2.118.9 மறை ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே. 2.121.04 மறையோர்கள்தாம் புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே. 2.122.01 "...... அடிகள்மறை ஓதி நாளும் இடும்பிச்சை" - (திருப்பாதிரிப்புலியூர் - 4) சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச் சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே. 2.122.02 மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் 2.122.10 - (இரண்டாம் திருமுறையில் - முற்றும்) - மூன்றாம் திருமுறை : "பாடினாய்மறை யோடு பல்கீதமும்" - (கோயில் - 1) "மறை யோர்தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்" - (கோயில் - 2) வேதியா 3.1.7 "சங்கவார் குழை யாய் திகழப்படும் வேதியர்" - (கோயில் - 7) ".............நான்மறை வல்ல ஞானசம்பந்தன்" - (கோயில் - 11) "பொய்யிலா மறை யோர்பயில் பூந்தராய்" - (பூந்தராய் - 3) ".......... முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன்" - (திருப்பூந்தராய் - 11) "புண்ணிய நான்மறை யோர்கள் ஏத்தும் புகலி" - (திருப்புகலி - 1) "பாடினை அருமறை வரன்முறையால்" - (திருப்புகலி - 3) வேதியனே 3.3.6 "வேள்விப் புகை போர்ப்பது செய்தணி மாடம் ஓங்கும் புகலி" - (திருப்புகலி - 7) வேதியனே 3.4.1 "மையணி மிடறுடை மறையவனே" - (திருவாவடுதுறை - 5) "சாமநல் வேதனும் ........" - (திருப்புகலி - 5) "வேதம தோதியும் வீரட்டானத்து அரன் அல்லனே" - (திருக்கடவூர் வீரட்டம் - 3) "பண்பொலி நான்மறை பாடியாடி" - (திருக்கடவூர் வீரட்டம் - 6) "முவ்வழல் நான்மறை ஐந்துமா யமுனிகேள்வனும்" - (திருக்கடவூர் வீரட்டம் - 7) "......... மறை ஞானசம் பந்தனசெந்தமிழ்" - (திருக்கடவூர் வீரட்டம் - 11) "............. ஓதும் நல்வேதத்தர் கேடிலா வேள்வி செய் அந்தணர் வேதியர்" - (திருவீழிமிழலை - 1) "நல்லினத் தார்செய்த வேள்வி செகுத்து ......" - (திருவீழிமிழலை - 2) "வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழிமிழலையார்" - (திருவீழிமிழலை - 7) "வேதியர் கைதொழு வீழிமிழலை" - திருவீழிமிழலை 11) "பன்னிய நான்மறை பாடியாடிப் பல....." - (திருப்புனவாயில் - 1) ".......... தண்புன வாயயிலில், வேதனை நாடொறும்" - (திருப்புனவாயில் - 10) "வேதியர் விண்ணவ ரேத்த நின்றான் விளங்கும் மறை ஓதிய ஒண்பொரு ளாகி நின்றான்" - (திருக்கோட்டாறு - 1) "வானம ரும்மதி சென்னி வைத்த மறை யோதியும்" - (திருக்கோட்டாறு - 4) "கோட்டாற்றுள், அந்தணனை ...." - (திருக்கோட்டாறு - 6) "நண்புணர் அருமறை ஞானசம்பந்தன்" - (திருப்பைஞ்ஞீலி - 11) "மந்திர மறையவை வானவ ரொடும்" - (திருவெண்காடு - 1) "வேதங்கள் முதல்வர்வெண் காடு மேவிய" - (திருவெண்காடு - 5) "வேதியர் பரவு வெண்காடு" - (திருவெண்காடு - 10) "சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்" - (திருக்கொள்ளிக்காடு - 2) "பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் கூடுவர்" - (திருக்கொள்ளிக்காடு - 10) "............ .......... நான்மறை வேதியர் தொழுதெழு விசய மங்கையே" - (திருவிசயமங்கை - 2) "மெய்யக மிளிரும்வெண் னூலர் வேதியர்" - (திருவைகல் மாடக்கோயில் - 2) "விடம்அடை மிடற்றினர் வேத நாவினர்" - (திருவைகல் மாடக்கோயில் - 5) "........... ........... இலங்கு மூவெரி மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்" - (திருவைகல் மாடக்கோயில் - 6) "மாலைகொ டணிமறை வாணர் வைகலில்" - (திருவைகல் மாடக்கோயில் - 9) "மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்" - (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 3) "பரவமல் கருமறை பாடி யாடுவர்" - (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 4) "சங்கணி குழையினர் சாமம் பாடுவர்" - (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 5) "அழல்வளர் மறையின் .......... அம்பர்" - (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 6) வேதன் 3.20.1 "ஆனநல் லருமறை யங்கம்ஓதிய ஞானனை" - (திருப்பூவணம் - 2) "மறைமல்கு பாடலன் மாதொர் கூறினன்" - (திருப்பூவணம் - 7) வேதியன் 3.21.1 மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. 3.22.02 தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம் வகுத்தவன் 3.23.6 மறைபல கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் 3.24.6 வேதியர் 3.27.5 வேதியன் 3.28.1 வேதியன் 3.28.5 வேதனார் 3.29.6 நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய் 3.33.4 வேதவே தாந்தனூர் 3.35.4 பிர மாபுரத்துறை வேதியன் 3.37.6 பல வாயவேதியன் பான்மை 3.38.4 ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத 3.39.2 வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன் 3.45.1 வெந்த நீறுமெய் பூசிய வேதியன் 3.47.7 வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. 3.49.01 பொய்யரும் வேதநெறியை யறிகிலார் 3.53.10 வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 3.54.1 வேதம் பாடும் மெனவும் 3.54.6 வேத முதல்வன் முதலாக விளங்கி வையம் ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப் பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே. 3.54.08 "மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே" - (திருவான்மியூர் - 4) "ஓதி நான்மறைகள்..." - (திருவான்மியூர் - 6) "மறை மொழி வாய்மையினான்" - (திருப்பிரமபுரம் - 1) "சடையினன் சாமவேதன்" - (திருப்பிரமபுரம் - 2) "வேத மலிந்தவொலி விழவின்ஒலி" - (திருப்பிரமபுரம் - 7) "சடையவன் சாமவேதன்" - (திருவொற்றியூர் - 1) "ஆகமச் செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக" - (திருவொற்றியூர் - 10) சந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை 3.56.5 "வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேத கீதன்" - (திருச்சாத்தமங்கை - 5) "வேதமாய் வேள்வியாகி விளங்கும் பொருள் வீடதாகி" - (திருச்சாத்தமங்க - 6) "சமய மா றங்கம் வேதந் தரித் தார்தொழும்" - (திருச்சாத்தமங்கை - 7) "ஓத்தர வங்களோடும் ஒலி காவிரி ஆர்த்தயலே" - (திருக்குடமூக்கு 2) "சாமவெண் டாமரைமேல் அயனும்" - (திருவக்கரை - 9) "பாடிய நான்மறையன் பலிக்கென்று பல்" - (திருவக்கரை - 10) வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே. 3.61.1 "விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர்" - (திருப்பனந்தாள் - 2) வேதியனூர் 3.62.1 "............ கிளர்கீதமொர் நான்மறையான்" - (திருப்பனந்தாள் - 3) "விரித்தார்நான் மறைப்பொருளை" - (திருப்பெருவேளூர் - 6) "........... நவில்கின்ற மறைஞான சம்பந்தன் தமிழ்" - (திருப்பெருவேளூர் - 11) "மறைநவின்ற பாடலோடு ஆடலராய்" - (திருக்கச்சிநெறிக்காரைக்காடு - 4) "அங்கநான் மறை நால்வர்க் கறம்பொருளின்" - (திருவேட்டக்குடி - 5) வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற் பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே. 3.67.1 "மறையினொலி முறை முரல்செய் பிறைஎயிறள்" - (திருப்பிரமபுரம் - 8) வேதவிகிர்தன் 3.68.6 ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார் வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே. 3.70.1 "ஏதமிலர் அரியமறை மலையர்" - (திருமயிலாடுதுறை - 4) வேதியர் 3.70.6 "விதிவழி மறைய வர்மிழலையுள்" - (திருவீழிமிழலை - 2) "வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம் ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்" - (திருவைகாவூர் - 5) "பாடல்மறை சூடல்மதி பல்வளையோர்" - (திருப்பட்டீச்சரம் - 1) "மறையினொலி கீதமொடு பாடுவன" - (திருப்பட்டீச்சரம் - 6) "விளங் குநான்மறை வல்ல வேதியர்மல்கு" - (திருவீழிமிழலை - ஈரடி - 2) வேதியர் 3.74.1 "ஈசன்மறை யோதியெரி யாடி மிகுபாசுபதன்" - (திருத்தேவூர் - 4) "சொற்பிரி விலாதமறை பாடிநடமாடுவர்" - (திருவேதிகுடி - 2) திருவேதவனம் (பதிகம் முழுவதும்) திருவேதிகுடி (பதிகம் முழுவதும்) "மறைத்திற மறத்தொகுதி கண்டு சமயங்களை" - (திருக்கோகரணம் - 3) வேதமுதலோன் 3.79.9 "ஆறுசம யங்களும்வி ரும்பியடி பேணிஅரன் ஆகமமிகக் கூறுமனம்" - (திருக்கோகரணம் - 6) ".... பன்மறைக ளோது பணிநல்" - (திருவீழிமிழலை - 2) வேதியர்கள் வீழிநகரே. 3.80.2 "செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்கலை" - (திருவீழிமிழலை - 4) "மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்வி" - (திருவீழிமிழலை - 4) வேதியர் விரும்புபதி வீழிநகரே. 3.80.4 வெங்குருவில் வேதியன் 3.80.11 "வேதம் ஓதிய நாவுடையானிடம்" - (திருவிற்குடி வீரட்டம் - 4) "கற்றமறை உற்றுணர்வர் பற்றலர்கள்" - (திருஅவளிவணல்லூர் - 6) "நாலுமறை அங்கம்முதல் ஆறும் எரிமூன்று" - (திருஅவளிவணல்லூர் - 9) சுருதிகள் கருதிய தொழிலினர் 3.84.6 வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன் 3.84.11 வேதமோ டுறுதொழில் மதியவர் பதிவிழி மிழலையே. 3.85.8 வேதியர் தொழுதெழு வெங்குரு 3.94.2 சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே. 3.102.8 "மறையொலி பாடி வெண்ணீறு பூசி" - (திருப்பரிதிநியமம் - 7) "மறைவளரும் பொருள் ஆயினானை" - (திருக்கலிக்காமூர் - 6) "பிறையான் மறையோதி நாடொரு காலமும் சேரநின்ற திருநாரையூரானை" - (திருநாரையூர் - 3) "சாமம் உரைக்கநின்று ஆடுவானும்" - (திருநாரையூர் - 8) "வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே." - (திருஆலவாய் - 1) "வைதி கத்தின் வழியொழு காதவக் கைத வமுடைக் காரமண் தேரரை எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே மைதி கழ்தரு மாமணி கண்டனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே" - (திருஆலவாய் - 2) "மறைவ ழக்கமி லாதமா பாவிகள் பறித லைக்கையர் பாயுடுப் பார்களை முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே மறியு லாங்கையில் மாமழு வாளனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே" - (திருஆலவாய் - 3) "அறுத்த வங்கமா றாயின நீர்மையைக் கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ் செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே" - (திருஆலவாய் - 4) "அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே வெந்த நீற தணியும் விகிர்தனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே" - (திருஆலவாய் - 5) "வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே காட்டி லானை உரித்தஎங் கள்வனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. " - (திருஆலவாய் - 6) "அழல தோம்பும் அருமறை யோர்திறம் விழல தென்னும் அருகர் திறத்திறங் கழல வாதுசெ யத்திரு வுள்ளமே தழல்இ லங்கு திருவுருச் சைவனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே" - (திருஆலவாய் - 7) "வேதங்கள் துதி செயும் மயேந்திரரும்" - (திருக்கயிலாயமும் திருஆனைக்காவும் - 9) "புகலும் நான்மறைக்கு இகலியோர்கள்வாழ்" - (திருப்பிரமபுரம் - 3) "விளங்கு நான்மறை வல்ல வேதியர்" - (திருவீழிமிழலை - 2) "பாதம் கைதொழ வேதம் ஓதுவர்" - (திருப்பல்லனீச்சரம் - 8) "வேதமது ஓதுவர் மேன்மதியே..." - (திருக்கழுமலம் - 4) "திடம்பட மாமறை கண்டனனே" - (திருக்கழுமலம் - 5) "தூய வானவர் வேதத் துவனியே" - (திருகச்சியேகம்பம் - 1) வேதநூல்பயில் கின்றது வாயிலே 3.115.2 வீதி வாய்மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா. 3.116.2 வேதா 3.117.7 சுருதியான் றலையும் 3.118.5 வேதியர் வேதத் தொலியறா வீழி மிழலையா னெனவினை கெடுமே. 3.119.6 வேதியர் வீழி மிழலையுள் 3.119.11 பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி 3.120.1 சொல்லு நால்வேதப் பாட்டினார் போலும் 3.121.2 அம்பர மாகி அழலுமிழ் புகையின் ஆகுதி யான்மழை பொழியும் உம்பர்க ளேத்தும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.2 ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த அங்கையால் ஆகுதி வேட்கும் ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.3 கற்றநால் வேதம் அங்கமோ ராறுங் கருத்தினார் அருத்தியாற் றெரியும் உற்றபல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.4 மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியுமா றங்கம் ஐவேள்வி இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணருங் குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் மற்றவை யுற்றது மெல்லாம் உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.6 நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும் ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. 3.122.10 வேதன தாள்தொழ வீடெளி தாமே. 3.125.10 வேதத் தொலியும் பயிலும் விடைவாயே நான்காம் திருமுறை : "நாறு கரந்தையி னானும் நான்மறைக் கண்டத்தி னானும்" - (திருவாரூர் - 3) "அண்டமா யாதியாய் அருமறையொடு ஐம்பூதப் பிண்டமாய்" - (திருக்கச்சியேகம்பம் - 4) "நல்லானை நல்லான நான்மறையோடு ஆறங்கம் வல்லானை" - (திருக்கச்சியேகம்பம் - 7) "வித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்" - (திருக்கச்சியேகம்பம் - 8) "மாகம்ப மறையோதும் இறையானை" - (திருக்கச்சியேகம்பம் - 9) "விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத விதியல்லர்" - (பொது - 2) "மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல கறைகொள் மணிசெய் மிடறர்" - (பொது - 7) "அணிகிள ரன்னதொல்லை அவள்பாக மாக எழில்வேதம் ஓது மவரே" - (பொது - 8) "விதிவிதி வேதகீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால்" - (பொது - 10) மறைக்காட் டுறையும் மணாளனை 4.15.8 "கூறினர் கூறினர் வேதம் அங்கமும்" - (திருவதிகை வீரட்டானம் - 2) சொற்றுணை வேதியன் 4.11.1 "அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்" - (பொது - 5) மாதீர்த்த வேதியர்க்கும் 4.12.5 புரமெரித்த வேதியனே 4.13.7 வேதத்தின் பொருளானாய் 4.13.8 வேள்விக் குடியெம் வேதியனைப் 4.15.10 "மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்" - (திருவையாறு - 8) "நாலுகொ லாமறை பாடின தாமே" - (பொது - 4) "ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தமை" - (பொது - 6) "ஓதினார் வேதம் வாயால்" - (கோயில் - நேரிசை - 5) செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே 4.23.4 "மறையனார் மழுஒன்று ஏந்தி" - (கோயில் - நேரிசை - 8) தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே" - (கோயில் - நேரிசை - 8) "மறையும்கொப் பளித்த நாவர்" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 4) "நாகங்கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடி" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 8) "பாடினார் மறைகள் நான்கும்" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 2) "பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே ஆடினார்" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 2) "கூறிட்ட மெய்ய ராகிக் கூறினார் ஆறும் நான்கும்" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 7) மந்திர முள்ள தாக மறிகட லெழுநெய் யாக இந்திரன் வேள்வித் தீயில் எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ் சிந்திர மாக நோக்கித் 4.28.5 "நொய்யவர் விழுமி யாரும் நூலினுள் நெறியைக் காட்டும்" - (திருச்செம்பொன்பள்ளி - நேரிசை - 2) முறைமுறை இருக்குச் சொல்லி எந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச் சிந்தையுட் சிவம தானார் 4.29.4 "ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன்" - (திருச்செம்பொன்பள்ளி - நேரிசை - 9) "அங்கங்க ளாறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்செய்து"- (திருச்செம்பொன்பள்ளி - நேரிசை - 10) வேள்வியை வேட்க வைத்தார் 4.30.2 விட்டங்கு வேள்வி வைத்தார் 4.30.6 "அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்" - (திருக்கழிப்பாலை - நேரிசை - 4) "அங்கமும் வேதமும் வைத்தார்" - (திருக்கழிப்பாலை - நேரிசை - 8) "வேலினான் வெகுண் டெடுக்கக் காண்டலும் வேத நாவன்" - (திருக்கழிப்பாலை - நேரிசை -10) "நங்களுக் கருளதென்று நான்மறை ஓதுவார்கள் தங்களுக்கருளும் எங்கள் தத்துவன்" - (திருப்பயற்றூர் - நேரிசை - 3) "சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம் கூத்தொடும் பாடவைத்தார்" - (திருப்பயற்றூர் - நேரிசை - 4) "நாவகை நாவர் போலும் நான்மறை ஞானமெல்லாம் ஆவகை ஆவர் போலும்" - (திருப்பயற்றூர் - நேரிசை - 5) ".......... வேதங்கள் விரும்பி ஓதப் பண்ணினார்" - (திருமறைக்காடு - நேரிசை - 5) "வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார்" - (திருமறைக்காடு - நேரிசை - 7) முழுப் ப்திகம் வேதங்கள் விரும்பி யோதப் ண்ணினார் 4.33.5 வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார் 4.33.7 முன்னிருக் கிசைகள் பாட அங்கைவாள் அருளி னானூர் 4.33.10 முழுப் பதிகம் வேதங்கள் நான்கும் அங்கம் பண்ணினார் 4.34.4 ".......... வேதங்கள் நான்கும் அங்கம் பண்ணினார்" - (திருவிடைமருதூர் - நேரிசை - 4) "வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி யேத்த" - (திருவிடைமருதூர் - நேரிசை - 5) "......... தூயநன் மறைகள் நான்கும், பாடினா ரொருவர் போலும்" - (திருப்பழனம் - நேரிசை - 1) "விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர்" - (திருப்பழனம் - நேரிசை - 3) "அங்கம தோத வைத்தார் ஐயனை யாறனாரே" - (திருவையாறு - நேரிசை - 6) ".......... அருந்தவ முனிவர்க் கன்று, நூலலால் நொடிவ தில்லை" - (திருவையாறு - நேரிசை - 2) "பண்டைநான் மறைகள் காணாப் பரிசினன் என்று என்று ஏத்தி" - (திருவையாறு - நேரிசை - 4) "மெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவா..." - (திருச்சோற்றுத்துறை - நேரிசை - 1) வேதியன் 4.42.7 "மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து" - (திருக்கச்சிமேற்றளி - நேரிசை - 1) "........... மணிமுடி நெரிய வாயால் கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்" - (திருக்கச்சிமேற்றளி - நேரிசை - 10) "வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்தன் பாதம்" - (திருஒற்றியூர் - நேரிசை - 1) "சாமத்து வேத மாகிநின்றதோர் சயம்பு தன்னை" - (திருஒற்றியூர் - நேரிசை - 4) "மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றுஏற்றி" - (திருஒற்றியூர் - நேரிசை - 8) வேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்பும்ஆப் பாடி யாரே. 4.48.2 "எண்ணுடை யிருக்கு மாகி இருக்கினுட் பொருளுமாகி" - (திருவாப்பாடி - நேரிசை - 3) "ஓதிய வேத நாவர் உணருமா றுணரலுற்றார்" - (திருக்குறுக்கை வீரட்டம் - நேரிசை - 1) நிறைமறைக் காடு 4.49.8 "விடுத்தனன் கைந்ந ரம்பால் வேதகீ தங்கள் பாட" - (திருக்குறுக்கை வீரட்டம் - நேரிசை - 10) "ஆறுமோர் நான்கு வேதம் அறம்உரைத் தருளி னானே" - (திருக்கோடிகா - நேரிசை - 3) நான்மறை யோர்கள் 4.53.9 அருமறை யாதி யானும் 4.54.10 "கற்றமா மறைகள் பாடிக் கடைதொறும் பலியும் தேர்வார்" - (திருப்பருப்பதம் - நேரிசை - 2) "மறையணி நாவினானை மறப்பிலார்" - (திருப்பெருவேளூர் - நேரிசை - 1) "வீடதே காட்டு வானை வேதநான் காயினானை" - (திருப்பெருவேளூர் - நேரிசை - 1) "வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்று என்று" - (திருஆலவாய் - நேரிசை - 1) "மறிகடல் வண்ணன் பாகா மாமறை அங்கம் ஆறும் அறிவனே" - (திருஆலவாய் - நேரிசை - 1) "மறைவலா இறைவா வண்டார் கொன்றையாய்" - (திருவண்ணாமலை - நேரிசை - 5) "வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்தனாரே" - (திருவீழிமிழலை - நேரிசை - 1 "மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத் தேனார்" - (திருவீழிமிழலை - நேரிசை - 5) "சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர்" - (திருவீழிமிழலை - நேரிசை - 7) "மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்த" - (திருச்சாய்க்காடு - நேரிசை - 5) "மறையுறு மொழியர் போலும் மால்மறை யவன்ற னோடு" - (திருநாகேச்சரம் - நேரிசை - 6) "பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார்" - (திருவாலங்காடு - நேரிசை - 8) வேதநான் காயி னானை 4.60.5 வேதியா வேத கீதா 4.62.1 வேள்வி யாளர் வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. 4.64.1 வேத வித்தை 4.71.3 மறையொலி பாடி யாடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் 4.71.5 பன்னிய மறையர் போலும் 4.72.2 வேத வேள்விக் கேள்வியை 4.74.1 தூயகா விரியின் நன்னீர் கொண்டிருக் கோதி யாட்டிக் 4.75.1 திருமறைக் காடு மேய ஈசனே 4.76.8 "விருத்தனை வேத வித்தை விளைபொருள் மூலமான கருத்தனை" - (திருநாகைக்காரோணம் - நேரிசை - 5) சாம வேதி 4.77.4 மறைநவில் நாவி னானை 4.79.5 வேதியன் 4.82.2 வேதங்க ளோதும் 4.82.4 வேதியனே. 4.86.8 மிக்கநல் வேத விகிர்தனை நானடி போற்றுவதே. 4.88.10 பதிகம் முழுவதும் மறைவிரி நாவன் 4.90.9 தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென் றழித்தன ஆறங்க மானஐ யாறன் அடித்தலமே. 4.92.2 ஒலிசிறந்த வேதியர் வேதமும் வேள்வியு மாவன 4.93.7 ஊனமில் வேத முடையானை நாமடி யுள்குவதே. 4.94.2 குற்றமில் வேத முடையானை யாமண்டர் கூறுவதே. 4.94.5 ஆய்ந்தது வேதமா றங்கம 4.94.7 அங்க மாறினையும் ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே. 4.94.9 மறை யோதவல்லீர் 4.96.9 மறை யோர்மகிழ்ந் தேத்த 4.98.9 மறை யோர்கள்நல்லூர் 4.98.10 மாமறைகள் சொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின தூக்கமலத் தன்ன வடிவின 4.101.1 சீர்மறையோன் உய்தற் பொருட்டுவெங் கூற்றை யுதைத்தன 4.101.2 மன்னு மறைகள்தம்மிற் பிணங்கிநின் றின்னன வென்றறி யாதன 4.101.3 கூடவொண்ணாச் சயம்புவென் றேதகு தாணுவென் றேசதுர் வேதங்கள்நின் றியம்புங் கழலின இன்னம்ப ரான்றன் இணையடியே. 4.101.8 இருக்கியல் பாயின இன்னம்ப ரான்றன் இணையடியே. 4.101.10 வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே. 4.113.1 மிக்க வேதத் துளான் 4.113.6 வேதியனே. 4.113.10 மறை தேடுமெந்தாய் 4.114.7 ஐந்தாம் திருமுறை : "நீதியை நிறை வைமறை நான்குடன் ஓதியை..." - (கோயில் - குறுந். - 6) "மறையி னானொடு மாலவன் காண்கிலா" - (திருவண்ணாமலை - குறுந். - 10) "ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே" - (திருவாரூர் - குறுந். - 8) வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன் 5.7.10 "வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்" - (திருஅன்னியூர் - குறுந். - 4) "நட்ட மாடியும் நான்மறை பாடியும்" - (திருமறைக்காடு - குறுந். - 4) "அரிய நான்மறை ஓதிய நாவரோ" - (திருமறைக்காடு - குறுந். - 4) "பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்" - (திருமீயச்சூர் - குறுந். - 3) "வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்" - (திருமீயச்சூர் - குறுந். - 9) வேதி யா 5.13.7 "மறையின் நாள்மலர் கொண்டடி வானவர் முறையி னால்" - (திருவிடைமருதூர் - குறுந். - 2) "வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்" - (திருவிடைமருதூர் - குறுந். - 9) "பறையி னோசையும் பாடலி னோசையும் மறையி னோசையும் மயக்கும்" - (திருவிடைமருதூர் - குறுந். - 1) "இணையி லாவிடை மாமருதில் எழு பணையில் ஆகமம் சொல்லும்தன் பாங்கிக்கே" - (திருவிடைமருதூர் - குறுந். - 4) "மறையும் ஓதுவர் மான்மறிக் கையர்" - (திருப்பேரெயில் - குறுந். - 1) "திருக்கு வார்குழல் செல்வன சேவடி இருக்கு வாய்மொழி யால்தனை ஏத்துவார் சுருக்கு வார்துயர்" - (திருப்பேரெயில் - குறுந். - 6) "நல்ல னைத்திகழ் நான்மறை ஓதியை" - (திருவெண்ணி - குறுந். - 4) நல்ல நான்மறை யோதியை வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.17.6 "நாதனை நல்ல நான்மறை ஓதியை வேதனை" - (திருவெண்ணி - குறுந். - 6) "அரிய நான்மறை ஆறங்க மாயைந்து புரியன்..." - (திருக்கடம்பந்துறை - குறுந். - 7) "வெலவ லான்புல னைந்தொடு வேதமும் சொலவ லான்..." - (திருக்கடம்பூர் - குறுந். - 2) "பண்ணி னார்மறை பல்பல பூசனை மண்ணி னார்..." - (திருக்கடம்பூர் - குறுந். - 7) "மன்ன வன்மதியம் மறை ஓதியான்" - (திருக்கடம்பூர் - குறுந். - 2) "வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க் காதில் வெண்குழை..." - (திருநின்றியூர் - 2) "பறையி னோசையும் பாடலி னோசையும் மறையி னோசையும் மல்கி" - (திருநின்றியூர் - 4) ஓது வேதிய னார் 5.24.6 "படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்" - (திருஒற்றியூர் - 9) வேதிய ராவர் 5.25.4 "வேத மோதிவந் தில்புகுந் தாரவர்" - (திருப்பாசூர் -8) "மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே" - (திருவன்னியூர் - 5) "விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமு" - (திருவையாறு - 7) "பாதிப் பெண்ணொரு பாகத்தன் பன்மறை ஓதி..." - திருவாவடுதுறை - 3) "பாடி னார்மறை நான்கினோ டாறங்கம்" - (திருப்பராய்த்துறை - 2) "நல்ல நான்மறை ஓதிய நம்பனை" - (திருப்பராய்த்துறை - 6) "வேதமாகிய வெஞ்சுட ரானையார்" - (திருக்கடவூர் வீரட்டம் - 9) "அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை கணங்கள் சேர்கடவூரின்" - (திருக்கடவூர் மயானம் - 7) "மறைவ லான்மயி லாடு துறையுறை இறைவன் நீள்கழல்" - (மயிலாடுதுறை - 5) வேட்க ளத்துறை வேதியன் 5.42.3 "மாலும் மாமல ரானொடு மாமறை நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே" - (திருநல்லம் - 9) "பண்டு நான்மறை ஓதிய பாடலன்" - (திருப்புகலூர் - 6) "மறைகொள் நாவினன் வானவர்க்கு ஆதியான்" - (திருவேகம்பம் - 3) "எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம் விரித்த வன்உறை..." - (திருவெண்காடு - 7) "பாலை யாடுவர் பன்மறை ஓதுவர்" - (திருவெண்காடு - 10) "மன்னி நான்மறை யோடுபல் கீதமும் பன்னி னாரவர்" - (திருப்பாலைத்துறை - 3) "ஆடி னாரழ காகிய நான்மறை பாடி னாரவர்" - (திருப்பாலைத்துறை - 4) "பித்தர் நான்மறை வேதியர் பேணிய அத்தனே..." - (திருப்பாலைத்துறை - 5) "பண்ணி னால்மறை பாடலோ டாடலும்" - (திருநாரையூர் - 7) "வேத மாயவிண் ணோர்கள் தலைவனை" - (திருக்கோளிலி - 7) "வேத நாயகன் பாதம் விரும்புமே" - (திருக்கோளிலி - 7) "வேத நாயகன் பாதம் விரும்புமே" - (திருக்கோளிலி - 8) "மாத்தன் தான்மறை யார்முறை யான்முறை ஓத்தன்" - (திருத்தென்குரங்காடுதுறை - 7) "நாத ராவர் நமர்க்கும் பிறர்க்கும்தாம் வேத நாவர்" - (திருக்கோழம்பம் - 6) "ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன் வேத நாவன்" - (திருப்பூவனூர் - 7) "மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய இறைவனை" - (திருவலஞ்சுழி - 4) "அங்க மாறும் மருமறை நான்குடன் தங்கு வேள்வியர்" - (திருவாஞ்சியம் - 4) "ஆர ணப்பொரு ளாம் அருளாளனார்" - (திருநள்ளாறு - 2) "சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான்" - (திருநள்ளாறு - 8) "வேத நாதன் விசயமங் கையுளான்" - (விசயமங்கை - 2) "மின்னு வார்சடை வேத விழுப்பொருள்" - (திருச்சேறை - 2) "அரும றையனை ஆணொடு பெண்ணனை" - (திருப்புள்ளிருக்கு வேளூர் - 3) "ஆரணப்பொரு ளன்பிலா லந்துறை" - (திருஅன்பிலாலந்துறை - 2) நான்மறை வேதியர் 5.51.5 வேத மாயவிண் ணோர்கள் தலைவனை 5.57.7 வேத நாயகன் பாதம் விரும்புமே. 5.57.8 வேதன் 5.61.4 இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே. 5.62.10 "நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்" - (திருப்பாண்டிக்கொடுமுடி - 5) வேத நாவர் 5.64.6 வேத நாவன் 5.65.7 வேதியன் 5.71.1 வேத நாதன் 5.71.2 நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல் ஆலன் 5.72.4 வேத நாயகன் வேதியர் நாயகன் 5.73.7 மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள் 5.77.2 வேதியர் 5.87.7 "நாலு வேதம் சரித்தது நன்னெறி" - (பொது - 89 - 4) "சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே" - (பொது - 94 - 5) "மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்கு" - (பொது - 96 - 4) வேதியன் 4.97.2 வெந்த நீறுமெய் பூசிய வேதியன் 4.97.8 வேத மோதிலென் வேள்விகள் செய்கிலென் நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் ஓதி யங்கமோ ராறும் உணரிலென் ஈச னையுள்கு வார்க்கன்றி இல்லையே. 5.99.4 "வேத நாயகன் வேதியர் நாயகன்" - (பொது - 100 - 1) "இருக்கு நான்மறை ஈசனை யேதொழும் கருத்தினை" - (பொது - 100 - 8) ஆறாம் திருமுறை : "அருமறையின் அகத்தானை" - (கோயில் - பெரிய. திருத். - 1) "அருமறையோ டாறங்க மாயி னானை" - (கோயில் - பெரிய. திருத். - 6) "வேதமும் வேள்விப் புகையும் ஓவா விரிநீர் மிழலை" - (கோயில் - புக்க. திருத். - 2) "வேதங்கள் ஓதி யோர்வீணை யேந்தி விடையொன்று தாமேறி வேத கீதர்" - (கோயில் - புக்க. திருத். - 10) "ஓதுவதும் வேதமே வீணை யுண்டே" - (கோயில் - புக்க. திருத். - 2) "மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை" - (திருவதிகை - 4) "மறையானை மாசொன் றிலாதான் தன்னை" - (ஏழைத்திருத். - 9) "மறையானை மாசொன் றிலாதான் தன்னை" - (திருவதிகை - ஏழைத்திருத். - 9) "......... சாம வேத கந்தருவம் விரும்புமே கபால மேந்து" - (திருவதிகை - அடையாளத்திருத். - 1) "பாடுமே ஒழியாமே நால்வேதம்" - (திருவதிகை - அடையாளத்திருத். - 5) "நம்பனே நான்மறைகள் தொழநின் றானே" - (திருவதிகை - அடையாளத்திருத். - 9) "நான்மறையோ டாறங்க மானாய் போற்றி" - (திருப்பந்தணைநல்லூர் - திருத். - 6) "முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் படித்தான்" - (திருக்காளத்தி - திருத். - 2) "நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்" - (திருக்காளத்தி - திருத். - 3) "மறையுடைய வானோர் பெருமான் தான்கான்" - (திருக்காளத்தி - திருத். - 10) "பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்" - (திருக்காளத்தி - திருத். - 11) "நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்" - (திருப்பந்தணைநல்லூர் - திருத். - 6) "நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்" - (திருப்பந்தணைநல்லூர் - திருத். - 10) "மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை" - (திருக்கழிப்பாலை - திருத். - 2) "தூய மறைமொழியர் தீயா லொட்டி" - (திருவிடைமருதூர் - திருத். - 5) "நான்மறையி னொலி தோன்றும் ..... நயனம் தோன்றும்" - (திருப்பூவணம் - திருத். - 4) "அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்" - (திருஆலவாய் - திருத். -5) "நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை" - (திருநள்ளாறு - திருத். - 7) "வேதத்தோ டாறங்கம் சொன்னார் போலும்" - (திருஆக்கூர் - திருத். - 2) "மறை யான்ற வாய்மூரும் கீழ்வே ளூரும்" - (திருநாகை - திருத். - 3) "வல்லெருதொன் றேறும் மறைவல் லாணை" - (திருநாகை - திருத். - 7) "வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி" - (திருநாகை - திருத். - 9) "முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்" - (திருமறைக்காடு - திருத். - 9) "மறையோதி காண்எறிநீர் நஞ்சுண்டான்காண்" - (திருவாரூர் - திருத். - 10) "ஓதாதே வேதம் உணர்ந்தான் தன்னை" - (திருவாரூர் - திருத். - 2) "நாமனையும் வேதத்தார் தாமே போலும்" - (திருவாரூர் - திருத். - 6) "மந்திரமும் மறைப்பொருளும் ஆனான் தன்னை" - (திருவாரூர் - திருத். - 4) "நான்மறையோ டாறங்க மாயி னான்காண்" - (திருவாரூர் - திருத். - 6) "மன்னியசீர் மறை நான்கும் ஆனாய் போற்றி" - (திருவாரூர் - திருத். - 4) "நால் வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி" - (திருவாரூர் - திருத். - 7) "பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும் வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ?" - (திருவாரூர் - திருத். - 8) "வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்" - (திருவெண்காடு - திருத். - 2) "விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்" - (திருவெண்காடு - திருத். - 6) சுருதங்க ளாற்றுதித்து 6.35.8 "நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே" - (திருவையாறு - திருத். - 3) "பண்ணார் மறைபாடி என்றேன் நான்" - (திருவையாறு - திருத். - 7) "நால் வேதம் ஆறங்கம் ஆனான் கண்டாய்" - (திருமழபாடி - திருத். - 5) "மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் ............. மறைகலந்த மழபாடி வயிரத் தூணே" - (திருமழபாடி - திருத். - 2) சுருதிமுடிக் கணியாய் வாய்த்த 6.40.7 "நம்பியையே மறைநான்கும் ஓலமிட்டு வரமேற்கும் மழபாடி .............." - (திருமழபாடி - திருத். - 5) "மறையோடு மாகீதம் கேட்டான்தான் காண்" - (திருவையாறு - திருமழபாடி - 7, 8, 9, 10) "நக்கானை நான்மறைகள் பாடி னானை" - (திருப்பூந்துருத்தி - திருத். - 5) "நம்பனே நான்மறக ளாயினானே......" - (திருச்சோற்றுத்துறை - திருத். - 5) "ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா" - (திருஒற்றியூர் - திருத். - 2) "நம்பனை நால்வேதம் கரைகண் டானை" - (திருவாவடுதுறை - திருத். - 1) "நல்லான்காண் நான்மறைக ளாயினான்காண்" - (திருவலிவலம் - திருத். - 1) "வேத வேள்விச் சொல்லான் காண்" - (திருவலிவலம் - திருத். - 1) "பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண் மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண்" - (திருக்கோகரணம் - திருத். - 1) "மன்னுருவாய் மாமறைக ளோதி னான்கான்" - (திருக்கோகரணம் - திருத். - 3) "வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும்" - (திருக்கழிப்பாலை - திருத். - 5) "வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்" - (திருவிடைமருதூர் - திருத். - 3) "மறையோடு மாகீதம் கேட்டான் தான்காண்" - (திருக்கோகரணம் - திருத். - 6) "சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை" - (திருவீழிமிழலை - திருத். - 4) "............ நினைவோர்க் கெல்லாம் மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்" - (திருவீழிமிழலை - திருத். - 9) "ஐவேள்வி ஆறங்க மானார் போலும்" - (திருவீழிமிழலை - திருத். - 4) "நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்" - (திருவீழிமிழலை - திருத். - 6) "ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற பொருளானை" - (திருப்புள்ளிருக்குவேளூர் - திருத். - 4) "நான்மறையின் நற்பொருளை நளிர்வெண்திங்கள்" - (திருப்புள்ளிருக்குவேளூர் - திருத். - 9) "ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி" - (திருக்கயிலாயம் - திருத். - 1) ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி" - (திருக்கயிலாயம் - திருத். - 11) "மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி" - (திருக்கயிலாயம் - திருத். - 1) "வாக்கால் மறை விரித்து மாயம் பேசி" - (திருவலம்புரம் - திருத். - 3) "ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்" - (திருவெண்ணியூர் - திருத். - 8) "மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா" - (திருக்கன்றாப்பூர் - திருத். - 1) "........... தெய்வநான் மறைகள் பூண்ட தேரானை...." - (திருஆனைக்கா - திருத். - 4) "சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னை" - (திருஆனைக்கா - திருத். - 7) "நசையானை நால்வேதத் தப்பா லானை " - (திருஆனைக்கா - திருத். - 9) "வேதத்தின் பொருளான்காண் என்று இயம்பி" - (திருக்கச்சியேகம்பம் - திருத். - 10) "விரித்தநால் வேதத் தான்காண்" - (திருக்கச்சியேகம்பம் - திருத். - 1) "................... புண்டரிகப் போதின் மறையவன்காண் மறையவனை...................." - (திருக்கச்சியேகம்பம் - திருத். - 3) "ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்கம் ஆறும்" - (திருக்கச்சியேகம்பம் - திருத். - 6) "மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனை" - (திருநாகேச்சரம் - திருத். - 1) "அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க் கறம் பொருள்வீ டின்ப மாறங்கம் வேதம் தெரித்தானை" - (திருநாகேச்சரம் - திருத். - 2) "மறையானை மால்விடை யொன்று ஊர்தி யானை....." - (திருநாகேச்சரம் - திருத். - 7) "நால்வேதத்து ஆறங்கம் நணுக மாட்டாச் சொல்லானை" - (திருக்கீழ்வேளூர் - திருத். - 5) "நற்றவனை நான்மறைக ளாயி னானை" - (திருப்பள்ளியின்முக்கூடல் - திருத். - 8) "இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் இளங்கோயில்" - (அடைவுத் திருத்தாண்டகம் - 5) "விந்தமா மலைவேதம் சையம் மிக்க..." - (அடைவுத் திருத்தாண்டகம் - 9) சுருதி யானைச் 6.74.1 "அருமறைக ளாறங்க மானான் கண்டாய்" - (திருக்கொட்டையூர் - திருத். - 5) "வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்" - (திருக்கொட்டையூர் - திருத். - 8) "மாதேவன் கண்டாய் மறயோ டங்கம் கொண்டாடு வேதியர் வாழ்" - (திருக்கொட்டையூர் - திருத். -10) "சொல்லானைப் பொருளானைச் சுருதி யானை" - (திருநாரையூர் - திருத். - 1) "நாலாய மறைக்கிறைவ னாயி னானை" - (திருநாரையூர் - திருத். - 1) "சொல் மலிந்த மறைநான்கா றங்க மாகி" - (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத். - 1) சுருதியுமாய்ப் பரந்தார் போலுங் 6.75.7 ".................... வேதம் நான்கும் தெரிந்துமுதல் படைத் தோனை......." - (திருப்புத்தூர் - திருத். - 1) "மாமறைகள் ஆயவன்காண் மண்ணும் விண்ணும்" - (திருப்புத்தூர் - திருத். - 2) "நாலு மறையங்கம் ஓதக் கண்டேன்" - (திருவாய்மூர் - திருத். - 3) "நான்மறையோ டாறங்கம் சொன்னார்" - (திருவாலங்காடு - திருத். - 4) "மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை" - (திருத்தலையாலங்காடு - திருத். - 3) "மருவினிய மறைப் பொருளை மறைக்காட் டானை" - (திருமாற்பேறு - 6) "விரித்தானை நான்மறையோ டங்க மாறும்" - (திருமாற்பேறு - 10) "நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்" - (திருக்கோடிகா - 8) "வேதமோர் நான்காய் ஆறங்க மாகி" - (திருப்பாசூர் - 2) ".......... நீதியாலேசீராரும் மறையோதி உலகம் உய்ய" - (திருப்பாசூர் - 4) "அருமறையோ டாறங்கம்ஆய்ந்து கொண்டு பாடினார் நால்வேதம்" - (திருப்பாசூர் - 5) "திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானை" - (திருச்செங்காட்டங்குடி - 1) "பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப் பேணியஅந் தணர்க்கு மறைப் பொருளை" - (திருச்செங்காட்டங்குடி - 3) "பண்ணியநான் மறைவிரிக்கும் பண்பன்" - (திருச்செங்காட்டங்குடி - 6) "மானவன்காண் மறைநான்கு மாயினான்காண்" - (திருமுண்டீச்சரம் - 5) "வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்" - (திருச்சிவபுரம் - 1) "உயர்புகழ்நான் மறை ஓமாம் புலியூர்" - (திருஓமாம்புலியூர் - 4) "மறையானை மறையாலும் அறிய வொண்ணாக் கலையானை" - (திருஓமாம்புலியூர் - 7) "............. தகைநால்வேத்ஹம் ஓர்ந்தோதிப் பயில்வார்" - (திருஓமாம்புலியூர் - 8) "சொல்லின் அருமறைகள் தாமே போலும்" - (திருஇன்னம்பர் - 1) "வேதப் பொருளாய் விளைவார் போலும்" - (திருஇன்னம்பர் - 6) "நால்வேதம் ஆறங்கம் ஆயினானை" - (திருக்கஞ்சனூர் - 1) "நால்வேதத் துருவானை நம்பிதன்னை" - (திருக்கஞ்சனூர் - 7) "............ ............... .....மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை ............... .................... தீதிலா மறையோனை" - (திருக்கஞ்சனூர் - 8) "அருமறையோ டாறங்கம்ஆனார் கோயில்" - (பொது - 6) "அங்கமா யாதியாய் வேத மாகி அருமறையோ டைம்பூதம் தானே யாகி" - (பொது - 6) "நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகி" - (பொது - 8) பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப் 6.94.10 "......... நால்வேதத் தப்பால் நின்ற சொற்பதத்தார்" - (பொது - 8) "அருமறையைத் தேர்க்குதிரை ஆக்கிக்கொண்டார்" - (பொது - 5) "சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்" - (பொது - 10) "அருளாகி ஆதியாகி வேதமாகி" - (திருப்புகலூர் - 4) "விரிசடையார் வேதியனே வேத கீதா" - (திருப்புகலூர் - 6) "நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி" - (திருப்புகலூர் - 7) "நிறைவுடையாய் மறைவல்லாய் நீதியானே" - (திருப்புகலூர் - 8) ஏழாம் திருமுறை : "மழுவாள்வலன் ஏந்திமறை யோதீ மங்கை பங்கா" - (திருவெண்ணெய்நல்லூர் - 9) "பன்னாள்மறை பாடுதிர் பாசூருளீர்" - (திருப்பரங்குன்றம் - 8) "நித்த ராகிச் சித்தர்சூழ, வேதமோதித் திரிவதென்னே" - (திருவெண்காடு - 7) "விரித்த வேதம் ஓதவல்லார்" - (திருவெண்காடு - 10) "சுருதி யார்க்கும் சொல்ல வொண்ணாச் சோதி" - (திருஎதிர்கொள்பாடி - 10) "நெய்மகிழ்ந் தாடுமறையோ தீ மங்கை பங்கா ...." - (திருநாட்டியத்தான்குடி - 6) "பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்" - (திருக்கலயநல்லூர் - 2) "மறை ஒலியும் விழவொலியும் மறுகு நிறை வெய்தி" - (திருக்கலயநல்லூர் - 3) "சொற்பால பொருட்பால சுருதி ஒருநான்கும் தோத்திரமு ......" - (திருக்கலயநல்லூர் - 3) "வாயாடி மாமறை ஓதிஓர் வேதியனாகி வந்து - (திருநாவலூர் - 8) "தூயநெய்யால் வட்டக் குண்டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார்" - (மூப்பதும் இல்லை - 2) "மந்திரம் ஓதுவர் மாமறை பாடுவர் மான்மறியர்" - (மூப்பதும் இல்லை - 9) "ஆறுகந் தார்அங்கம் நான்மறை யார்எங்கு மாகி" - (திருநின்றியூர் - 4) "மன்னிய எங்கள்பிரான் மறைநான்கும் கல்லால் நிழல்கீழ்" - (திருப்பழமண்ணிப்படிக்கரை -1) "அரக்கன் முடி பத்தலற விடுத்தவன்கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற" - (திருப்பழமண்ணிப்படிக்கரை - 7) "மங்கையொர் கூறமர்ந்தீர் மறை நான்கும் விரித்துகந்தீர்" - (திருமுதுகுன்றம் - 4) "மறையார் வானவனேமறை யின்பொருள் ஆனவனே" - (திருக்கடவூர் வீரட்டம் - 2) "கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தம் கருப்பறிய லூர்" - (திருக்கருப்பறியலூர் - 6) "குறையாத மறைநாவர் குற்றேவல் ஒழியாத" - (திருக்கருப்பறியலூர் - 8) "வீணை தான்அவர் கருவியோ விடையேறு வேத முதல்வரோ" - (நமக்கடிகளாகிய அடிகள் - 5) "மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும்" - (திருப்பைஞ்ஞீலி - 10) "மறையவனை வாய்மொழியை வானவர்தங்கோனை" - (திருக்கானாட்டுமுள்ளூர் - 1) "இறையவனை மறையவனை எண்குணத்தி னானை" - (திருக்கானாட்டுமுள்ளூர் - 3) "இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்" - (திருக்கானாட்டுமுள்ளூர் - 5) "நமக்கு மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானை" - (திருக்கானாட்டுமுள்ளூர் -10) "துறையொன்றித் தூமலர்இட்டு அடியிணை போற்றுவார் மறையன்றிப் பாடுவதில்லை" - (முடிப்பது கங்க - 6) "மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே" - (திருவாமாத்தூர் - 1) ".......... வேதத்தின் உட்பொருளாகிய அன்னவன்" - (திருவாமாத்தூர் - 8) "தயங்கு தோலை உடுத்தச் சங்கரா சாம வேதம் ஓதி" - (திருமுருகன்பூண்டி - 5) "வேதம் ஓதிவெண் ணீறுபூசிவெண் கோவணம்" - (திருமுருகன்பூண்டி -7) "விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேத நெறியானே" - (திருவாலங்காடு - 7) "விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர்" - (திருக்கடவூர்மயானம் - 2) "முகத்தில் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன் முக்க ணாமுறை யோமறை யோதீ!" - (திருஒற்றியூர் - 9) "பன்னு நான்மறை பாடவல் லானைப் பார்த்தனுக் கருள்செய்த பிரானை" - (திருநீடூர் - 2) "பாடு மாமறை பாடவல் லானைப் பைம்பொ ழில்குயில் கூவிடமாடே" - (திருநீடூர் - 4) "வேத மால்விடை ஏறவல் லானை" - (திருவாழ்கொளிபுத்தூர் - 3) "திருந்த நான்மறை பாடவல் லானைத் தேவர்க்கும் தெரிதற் கரியானை" - (திருவாழ்கொளிபுத்தூர் - 10) "மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளை" - (திருக்கழுமலம் - 8) "மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப வஞ்சனை செய்தவர்" - (திருக்கழுமலம் - 9) "மறையா னைக்குறை மாமதி சூடற் குரியானை" - (திருவாரூர் - 7) "அரும றையனை அங்கம்வல் லானை" - (திருக்கச்சியேகம்பம் - 5) "சாம வேதம் பெரிதுகப் பானை" - (திருக்கச்சியேகம்பம் - 6) "வேதந் தான்விரித் தோதவல் லானை" - (திருக்கச்சியேகம்பம் - 7) "அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும் ஆய நம்பனை" - (திருக்கோலக்கா - 2) "வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி" - (நம்பி என்ற திருப்பதிகம் - 1) ".......... தெரி யம்மறை அங்கம் கூறுநம்பி......." - (நம்பி என்ற திருப்பதிகம் - 4) ".........கோல ஆல்நீழல் கீழ்அறம்பகர வேதம் செய்தவர் எய்திய இன்பம்" - (திருநின்றியூர் - 6) "மிக்க நின்கழ லேதொழு தரற்றி வேதியா ஆதிமூர்த்தி" - (திருவாவடுதுறை - 5) "கலிவ லங்கெட ஆரழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்" - (திருவலிவலம் - 11) "சாம வேதனைத் தன்னொப்பி லானை" - (திருநள்ளாறு - 1) "வேத கீதனை மிகச்சிறந் துருகி" - (திருநள்ளாறு - 2) "அங்கம் நான்மறை யான்நிறை கின்ற அந்தணாளார் - (திருநள்ளாறு - 5) "........... பணி வார்வினை கெடுக்கும் வேதனை வேத வேள்வியார் வணங்கும்" - (திருநள்ளாறு - 8) "ஆடிய அழகா அருமறைப் பொருளே" - (வடதிருமுல்லைவாயில் - 2) "விண்பணிந் தேத்தும் வேதியர்" - (வடதிருமுல்லைவாயில் - 3) "மாசி லாமணி யேமறைப் பொருளே" - (திருவாவடுதுறை - 9) "அங்கங்களும் மறைநான்குடன் விரித்தான் இடம் அறிந்தோம்" - (திருமறைக்காடு - 3) "அருமறை ஆறங்கம் ஓதும் எல்லை இருப்பது ஆரூர்" - (திருவாரூர் - 3) "மறைக ளாயின நான்கும் மற்றுள பொருள்களும்" - (திருவானைக்கா - 1) "அங்கம்ஓதிய ஆனைக்காவுடை ஆதியை" - (திருவானைக்கா - 2) "அங்கம்மொழி அன்னாரவர் அமரர் தொழுதேத்த..." - (திருக்கேதீச்சரம் - 3) "தூய மறைப்பொருளாம் நீதிய" - (திருக்கானப்பேர் - 8) "மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனு" - (திருக்கூடலையாற்றூர் - 8) "நான்ம மறைக்கிட மாய வேள்வியுள்" - (திருவீழிமிழலை - 1) "........... குன்றவில் ஏந்தி வேதப் புரவித்தேர்மிசை" - (திருவீழிமிழலை - 5) "வேத நீதியது ஓதுவார்விரி நீர்மிழலையுள்" - (திருவீழிமிழலை - 10) "விடையார் கொடியன் வேதநாவன்" - (திருஒற்றியூர் - 6) "அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்" - (திருவாரூர்ப் பரவையுண்மண்டளி - 6) "............ சுருங் காமறை நான்கினையும் ஓதியன் உம்பர்தங் கோன்" - (திருநனிப்பள்ளி - 1) "அங்கமொ ராறவையும் அருமாமறை வேள்விகளும் எங்கும் இருந்து........" - (திருநனிப்பள்ளி - 7) "பாடிய நான்மறையான்படு பல்பிணக் காடரங்கா" - (திருநன்னிலத்துப் பெருங்கோயில் - 4) "மந்திரம் ஒன்றறியேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்" - (திருநொடித்தான்மலை - 3) "அரவொலி ஆகமங்கள் அறிவார் அறிதோத்திரங்கள் விரவிய வேத ஒலி" - (திருநொடித்தான்மலை - 8) எட்டாம் திருமுறை : "ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க" - (சிவபுராணம் - 4) "................ வேதங்கள் ஐயாஎன ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே" - (சிவபுராணம் - 34 - 35) "மன்னு மாமலை மகேந்திர மதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்" - (கீர்த்தித்திருஅகவல் - 9, 10) "கேவேட ராகிக் கெளிறது படுத்தும் மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்" - (கீர்த்தித்திருஅகவல் - 17, 18) "நந்தம் பாடியின் நான்மறை யோனாய்" - (கீர்த்தித்திருஅகவல் - 2, 1) "அறைகூவி ஆட்கொண்டருளி மறையோர் கோலம் காட்டி யருளலும்" - (கீர்த்தித்திருஅகவல் - 149 -150) "மூவா நான்மறை முதல்வா போற்றி" - (போற்றித்திருஅகவல் - 94) "வேதி போற்றி விமலா போற்றி" - (போற்றித்திருஅகவல் - 106) "மறையோர் கோல நெறியே போற்றி" - (போற்றித்திருஅகவல் - 179) பரவுவார் இமையோர்கள் : பாடுவன நால்வேதம்" - (திருச்சதகம் - 17) ஆயநான் மறையவனும் நீயே யாதல் அறிந்து" - (திருச்சதகம் - 27) "வணங்கு நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலமிட்டு" - (திருச்சதகம் - 79) "மானோர் நோக்கி யுமையாள் பங்கா! மறையீறு அறியா மறையோனே" - (திருச்சதகம் - 89) "மறையில் ஈறும்முன் தொடரொ ணாதநீ" - (திருச்சதகம் - 99) "மிக்க, வேத மெய்ந்நூல் சொன்னவனே" - (நீத்தல் விண்ணப்பம் - 43) "விண்ணுக்கொருமருந்தை வேத விழுப்பொருளை" - (திருவெம்பாவை - 4) "வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்" - (திருவெம்பாவை - 10) "வேதப்பொருள்பாடி அப்பொருள் ஆமாபாடி" - (திருவெம்பாவை - 14) "துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்" - (திருஅம்மானை - 9) "வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு" - (திருப்பொற்சுண்ணம் - 19) "நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்" - (திருக்கோத்தும்பி - 1) "அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட" - (திருக்கோத்தும்பி - 14) "பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ" - (திருச்சாழல் - 1) "மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடா" - (திருச்சாழல் - 2) "நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உன்பொருளை" - (திருச்சாழல் - 16) "நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான்" - (திருச்சாழல் - 17) "அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி" - (திருப்பூவல்லி - 13) "மன்னிப் பொலிந் திருந்த மாமறையோன்" - (திருப்பொன்னூசல் - 7) "வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்" - (அன்னைப்பத்து - 1) "இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்" - (திருப்பள்ளியெழுச்சி - 4) "மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்" - (கோயில்திருப்பதிகம் - 5) "திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்" - (அருட்பத்து - 4) "செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில்" - (அருட்பத்து - 6) "தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்" - (அருட்பத்து - 9) "நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே" - (கண்டபத்து - 9) "வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே" - (கண்டபத்து - 10) "மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா ஓத்தானே" - (திருவேசறவு - 8) "பிடித்து முன்நின்று பெருமறை தேடிய அரும்பொருள்" - (அற்புதப்பத்து - 3) "மாதிவர் பாகன் மறைப யின்ற வாசகன்" - (திருவார்த்தை - 1) "பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனும்" - (பண்டாய நான்மறை - 1) "மாமறை யும்அறி யாமலர்ப் பாதம் வணங்குதும்" - (திருப்படையாட்சி - 4) "ஈறறி யாமறை யோன்எனைஆள எழுந்தரு ளப்பெறினே" - (திருப்படையாட்சி - 8) "................. உம்ப ரார்அறி யாமறை யோன்அடி வாழ்த்தலரிற் ................" - (திருக்கோவையார் - இயற்கை - 5) "..................................... அருமறையின் திறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றும்இச் சேணிலத்தே - (திருக்கோவையார் - 213) பொய்குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடம்" - (திருக்கோவையார் - 223) "உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே" - (திருக்கோவையார் - 236) "............... வெள்ளை நூலில் கொண்மூ அதிரேய் மறையின்இவ் வாறுசெல் வீர்" - (திருக்கோவையார் - 243) "மாலித் தனையறியா மறையோன்உறை அம்பலமே" - (திருக்கோவையார் - 318) ஒன்பதாம் திருமுறை : "அருமறையின் மறைநான் கோலமிட் டரற்றும் அப்பனே" - (திருவிசைப்பா - கோயில் - 4) "மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன்திரு மாலொடு மயங்கி" - (திருவிசைப்பா - கோயில் - 11) "பெருவளர் முத்தீ நான்மறைத் தொழிலால் எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்" - (உ. கோயில் - 2) "தேமலி விழவில் குழலொலி தெருவில் கூத்தொலி ஏத்தொலி ஓத்தின் பேரொலி பரந்து கடல்ஒலி மலிய" - (உ. கோயில் - 4) "அதுமதி இதுவென்று அலந்தலை நூல்கற்று அழைப்பொழிந்து அருமறை அறிந்து" - (உ. கோயில் - 6) "அவனிச் சிவலோக வேதவென்றி மாறாத மூவாயிர வரையும்" - (3 கோயில் - 12) "செக்கர்ஓத்து இரவி நூறா யிரத்திரள்ஒபாம் தில்லைச் சொக்கர்அம் பலவர்என்னும் சுருதியக் கருதமாட்டா" - (4 கோயில் - 8) "போந்த மதிலணி முப்புரம் பொடியாட வேதப்புரவித்தேர் சாந்தை முதல்" - (திருவாவடுதுறை - 6) "சோதி மதிலணி சாந்தைமெய்ச் சுருதி விதிவழியோர்" - (திருவாவடுதுறை - 2) "மறைநிறை சட்டறம் வளரத், தேனமர்பொழில் சூழ்திருவிடைக் கழியில்" - (திருவிடைக்கழி - ) "அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த அரும்பெறல் மறைப்பொருள் மறையோர் சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்" - (கோயில் - 4) "நாத்திரள் மறையோர்ந்து ஓம குண்டத்து நறுநெய்யால் மறையவர் வளர்த்த" - (கோயில் - 7) "நெடுநிலை மாட, மருங்கெலாம் மறையவர் முறையோத்து, அலைகடல் முழங்கும்" - (திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 1) "................ மறைகளும் தேட அரியரேஆகில்" - (திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 3) "ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம்" - (திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 10) "....................................... ஆரணம் பிதற்றும் பித்தனேன் - மொழிந்த மணிநெடுமாலை" - (திருக்கீழ்க்கோட்டூர் - மணியம்பலம் - 11) "பூரணா! ஆரணம் பொழியும் பவளவாய் மணியே!! - (திருமுகத்தலை - 1) "ஆரணத் தேன்பருகி அருந்தமிழ்மாலை கமழ வரும்" - (திரைலோக்கியசுந்தரம் - 11) "சொன்னவில் முறைநான்கு ஆரணம் உணராச்சூழல்" - (திருப்பூவணம் - 7, 8, 9) "தீவணன் தன்னைச் செழுமறை தெரியும் திகழ்கரு வூரனேன்" - (திருப்பூவணம் - 10) "சாந்தமும் திருநீறு அருமறை கீதம் சடைமுடி சாட்டியக் குடியார்" - (திருச்சாட்டியக்குடி - 2) "தொடர்வன மறைகள்நான் கெனினும்" - (திருச்சாட்டியக்குடி - 3) "பதிகநான் மறைதும் புருவும்நா ரதரும்" - (திருச்சாட்டியக்குடி - 4) "தங்கள்நான் மறைநூல் சகலமுங் கற்றோர் சாட்டியக்குடி" - (திருச்சாட்டியக்குடி - 8) "பெரும்மா மறைகள் எவையும்வா னவர்கள் ஈட்டமும்" - (தஞ்சை இராசராசேச்சரம் - 5) "ஓவா முத்தீ அஞ்சுவேள்வி ஆறங்க நான்மறையோர்" - (கண்டராதித்தர் - கோயில் - 21) "முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு ஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையை" - (கண்டராதித்தர் - கோயில் - 3) "....... இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே" - (கோயில் - பவள - 5) "ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்து..." - (கோயில் - பவள - 6) "மறைகள் நான்குங் கொண்டு அந்தணர் ஏத்த நன்மாநடம் மகிழ்வானே" - (கோயில் - பவள - 8) "வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி" - (கோயில் - பவள - 10) தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலை" - (கோயில் - அல்லாய் - 11) "என்னுள்ளே உயிர்ப் பாகிநின்ற மறைவனை" - (கோயில் - கோலமலர் - 5) பத்தாம் திருமுறை : "வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின் ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற் றார்க்களே" - (திருமந்திரம் - 51) "வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே" - (திருமந்திரம் - 52) "இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும் கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே" - (திருமந்திரம் - 53) "திருநெறி யாவது சித்தசித் தன்றிப் பெருநெறி யாய பிரானை நினைந்து குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும் ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே" - (திருமந்திரம் - 54) "ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக் கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம் பேறங்க மாகப் பெருக்குகின் றாரே" - (திருமந்திரம் - 55) "பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதமில் லாதவர் ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே" - (திருமந்திரம் - 56) "அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும் அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே" - (திருமந்திரம் - 57) "அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே" - (திருமந்திரம் - 58) "பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும் கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே" - (திருமந்திரம் - 59) "அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம் எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே" - (திருமந்திரம் - 60) "பரனாய் பராபரம் காட்டி உலகில் தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத் தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே" - (திருமந்திரம் - 61) "சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே" - (திருமந்திரம் - 62) "பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம் மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந் துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே" - (திருமந்திரம் - 63) "அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும் அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின் எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே" - (திருமந்திரம் - 64) "மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே" - (திருமந்திரம் - 65) "அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலு மாமே" - (திருமந்திரம் - 66) "பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை...." - (திருமந்திரம் - 578) "நம்பனை ஆதியை நான்மறை ஓதியை...." - (திருமந்திரம் - 626) "பன்னெழு வேதப் பகலொளி உண்டென்னும்..." - (திருமந்திரம் - 824) "அத்திசைக் குள்நின்ற அந்த மறையானை" - (திருமந்திரம் - 936) "தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்" - (திருமந்திரம் - 939) "மறையவ னாக மதித்த பிறவி மறையவ னாக மதித்திடக் காண்பர் மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற மறையவன் அஞ்செழுத் தாமது வாகுமே" - (திருமந்திரம் - 940) "மேலை நடுவுற வேதம் விளம்பிய மூலம்..." - (திருமந்திரம் - 955) "ஐம்ப தெழுத்தே அனைத்தும்வே தங்களு" - (திருமந்திரம் - 965) "பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்..." - (திருமந்திரம் - 1018) "மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்" - (திருமந்திரம் - 1027) "வேதனை வட்டம் விளையாறு பூநிலை" - (திருமந்திரம் - 1044) "வேதாதி நூலின் விளங்கும் பராபரை" - (திருமந்திரம் - 1070) "நீதியில வேத நெறிவந் துரைசெய்யும்" - (திருமந்திரம் - 1080) "ஆரண வேதநூல் அந்தமு மாமே" - (திருமந்திரம் - 1088) "சாற்றிய வேதஞ் சராசரம் ஐம்பூதம்" - (திருமந்திரம் - 1098) "ஆதியில் வேதமே யாமென் றறிகிலர்" - (திருமந்திரம் - 1121) "ஆதி அனாதி அகாரணி காரணி வேதம தாய்ந்தனள்" - (திருமந்திரம் - 1124) "நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி" - (திருமந்திரம் - 1148) "விரித்திருந் தாளவள் வேதப் பொருளை" - (திருமந்திரம் - 1156) "வேலைத் தலைவியை வேத முதல்வியை" - (திருமந்திரம் - 1161) "வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம்" - (திருமந்திரம் - 1180) "தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழும் ஆரணம்" - (திருமந்திரம் - 1285) "வழுத்திடு நாவுக் கரசிவள் தன்னைப் பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்" - (திருமந்திரம் - 1335) "பண்டை மறைகள் பரந்தெங்கும் தேடுமால்" - (திருமந்திரம் - 1416) "வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தம்" - (திருமந்திரம் - 1422) "ஏனை நிலமும் எழுதா மறையீறும்" - (திருமந்திரம் - 1426) "பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்" - (திருமந்திரம் - 1428) "ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை" - (திருமந்திரம் - 1429) "வேதாந்தம் கண்டோர் பிரமமித் தியாதரர் வேதாந்தம் அல்லாத சித்தாந்தம்" - (திருமந்திரம் - 1435) "விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்" - (திருமந்திரம் - 1449) "மினற்குறி யாளனை வேதியர் வேதத் தனற்குறி யாளனை" - (திருமந்திரம் - 1565) "பொருளாய வேதாந்த போதமும் நாதன்" - (திருமந்திரம் - 1584) "மெய்த்தேன் அறிந்தேன்அது வேதத்தின் அந்தமே" - (திருமந்திரம் - 1602) "நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்" - (திருமந்திரம் - 1665) "தொழிலறி வாளர் சுருதிகண் ணாக" - (திருமந்திரம் - 1690) "வேட்கை விடுநெறி வேதாந்தம் ஆதலால் வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே" - (திருமந்திரம் - 1702) "ஆகம அத்துவா ஆறும் சிவமே" - (திருமந்திரம் - 1714) "அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்" - (திருமந்திரம் - 1719) "ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்" - (திருமந்திரம் - 1861) "பண்டை மறையும் படைப்பளிப் பாதியும்" - (திருமந்திரம் - 1871) "ஆகத் திருவேத கேசரி சாம்பவி" - (திருமந்திரம் - 1847) "தவாவறு வேதாந்த சித்தாந்தத் தன்மை" - (திருமந்திரம் - 1899) "சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற வேதப் பொருளை விளங்கு கிலீரே..." - (திருமந்திரம் - 1981) "பன்னு மறைகள் பயிலும் பரமனை" - (திருமந்திரம் - 2005) "அணுவின்றி வேதா கமநெறி காணான்" - (திருமந்திரம் - 2044) "குருஎன் பவனே வேதாக மம்கூறும் பரஇன்ப னாகி...." - (திருமந்திரம் - 2057) "ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு" - (திருமந்திரம் - 2179) "தான்மா மறையறை தன்மை அறிகிலர்" - (திருமந்திரம் - 2306) "ஆன மறையாதி ஆமுரு நந்தியை" - (திருமந்திரம் - 2310) "பாடி எழுகின்ற வேதா கமங்களும்" - (திருமந்திரம் - 2317) "அறிவே அறிவை அறிகின்ற தென்றிட்டு அறைகின் றனமறை யீறுகள் தாமே" - (திருமந்திரம் - 2358) "வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்" - (திருமந்திரம் - 2370) "தானான வேதாந்தம் தானென்னும் சித்தாந்தம்" - (திருமந்திரம் - 2372) "ஆடும் அனாதி கலையா கமவேதம் ஆடும்அத் தந்திரம்" - (திருமந்திரம் - 2379) "ஆசார நேய மறையும் கலாந்தத்து" - (திருமந்திரம் - 2380) "வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையை" - (திருமந்திரம் - 2384) "அரனுரை செய்தருள் ஆகமம் தன்னில்.... உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே" - (திருமந்திரம் - 2385) "வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை" - (திருமந்திரம் - 2386) "வேதாந்தம் தன்னில் உபாதிமே லேழ்விட" - (திருமந்திரம் - 2387) "வேதாந்த தொம்பத மேவும் பசுஎன்ப" - (திருமந்திரம் - 2392) "சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்" - (திருமந்திரம் - 2394) "சித்தாந்த வேதாந்தம் செம்பொரு ளாதலால் சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே" - (திருமந்திரம் - 2394) "அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனான்" - (திருமந்திரம் - 2395) "வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன்நூல் ஓதும் பொதுவும் சிறப்புமென் றுள்ளன" - (திருமந்திரம் - 2397) "ஆகும் மறையா கமம்மொழிந் தானன்றே" - (திருமந்திரம் - 2399) "ஒன்றான வேதாந்த சித்தாந்த முள்ளிட்டு" - (திருமந்திரம் - 2400) "மன்னிய சோகமா மாமறை யாளர்தம் சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே" - (திருமந்திரம் - 2403) "முதலாகும் வேத முழுதா கமப் பதியான ஈசன் பகர்ந்த திரண்டு முதிதான வேத முறைமுறை யாலமர்ந் ததிகாதி வேதாந்த சித்தாந்த மாகவே" - (திருமந்திரம் - 2404) "வேதம்சொல் தொம்பதம் ஆகுதன் மெய்ம்மையே" - (திருமந்திரம் - 2438) "வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்" - (திருமந்திரம் - 2447) "பண்டை மறைகள் பரவான் உடலென்னும்" - (திருமந்திரம் - 2463) "பேசி இருக்கும் பெருமறை யம்மறை கூசி இருக்கும்" - (திருமந்திரம் - 2546) "மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்" - (திருமந்திரம் - 2548) "ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே" - (திருமந்திரம் - 2552) "வினைகெட வீடென்னும் வேதமும் ஓதார்" - (திருமந்திரம் - 2558) "தவமுறு தத்துவம் அசிவே தாந்த சிவமா மதும்" - (திருமந்திரம் - 2571) "அரிய சிவமாக அச்சிவ வேதத் திரியிலுஞ் சீராம் பராபரன்" - (திருமந்திரம் - 2578) "வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்" - (திருமந்திரம் - 2598) "மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனை" - (திருமந்திரம் - 2604) "அறிவுடை யானரு மாமறை யுள்ளே" - (திருமந்திரம் - 2636) "ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்" - (திருமந்திரம் - 2698) "சிகராதி தான்சிவ வேதமே கோண" - (திருமந்திரம் - 2700) "அங்கமும் ஆகம வேதம தோதினும்" - (திருமந்திரம் - 2720) "பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே" - (திருமந்திரம் - 2721) "வேதங்க ளாட மிகுஆ கமமாட" - (திருமந்திரம் - 2729) "வேதங்கள் ஐந்தின் மிகுமா கமந்தன்னில்" - (திருமந்திரம் - 2730) "பேறான வேதாகம மேபிறத்தலான்" - (திருமந்திரம் - 2755) "வேதத்தில் ஆடித் தழலந்த மீதாடி" - (திருமந்திரம் - 2756) "சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே" - (திருமந்திரம் - 2791) "வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமும்" - (திருமந்திரம் - 2792) "நாதத் துவங்கடந் தாதி மறை நம்பி" - (திருமந்திரம் - 2795) "பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே" - (திருமந்திரம் - 2800) "வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்" - (திருமந்திரம் - 2854) "வேதம் ஓதுஞ் சொரூபிதன் மேன்மையே" - (திருமந்திரம் - 2856) "மன்றேயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு" - (திருமந்திரம் - 2936) "பதறு படாதே பழமறை பார்த்து" - (திருமந்திரம் - 2948) "வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு" - (திருமந்திரம் - 2986) "வெள்ளப் புனல்சடை வேத முதல்வனை" - (திருமந்திரம் - 2994) - (பத்தாம் திருமுறையில் - முற்றும்) - பதினோராம் திருமுறை : "வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்கு ஆதியனை" - (திருவிரட்டைமணிமாலை - 8) "தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கனையும் தன்திருவாப் பாடியான் தாள்" - (க்ஷேத்திரத் திருவெண்பா - 19) "பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே" - (பொன்வண்ணத்தந்தாதி - 18) "வேதம் முகம்திசை தோள்மிகு பன்மொழி கீதம் என்ன" - (பொன்வண்ணத்தந்தாதி - 19) "உரிவளர் நான்மறை ஓதி உலகம் எலாம் திரியும்" - (பொன்வண்ணத்தந்தாதி - 20) "மொழிகின்ற தென்இனி நான்மறை முக்கண் முறைவனுக்கே" - (பொன்வண்ணத்தந்தாதி - 52) "முறைவனை மூப்புக்கு நான்மறைக்கு கும்முதல் ஏழ்கடலம்" - (பொன்வண்ணத்தந்தாதி - 53) "................ வரைமறையால் பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை" - (பொன்வண்ணத்தந்தாதி - 57) "பாடிய நான்மறை பாய்ந்தது கூற்றைப் படர்புரஞ்சுட்டு" - (பொன்வண்ணத்தந்தாதி - 60) "மறைக் கண்டம் பாடல்உற்றோ என்பும் நீறும் மருவலுற்றோ" - (பொன்வண்ணத்தந்தாதி - 69) "....................... நான் மறைசேர் மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே" - (பொன்வண்ணத்தந்தாதி - 98) "...................... நான்மறையான் மன்னுஞ்சேய் போல் ஒருவன் வந்து" - (திருவாரூர் மும்மணி - 11) "நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து வந்து வசுக்கள் இருக்குரைப்ப" - (திருக்கயிலாய ஞான உலா - அடி - 23, 24) "வானநீர் தாங்கி மறை ஓம்பி வான்பிறையோடு ஊனமில் சூலம்" - (திருக்கயிலாய ஞான உலா - அடி - 59, 60) "அஞ்செழுத்தும் கண்டீர் அருமறைகள் ஆவனவும்" - (கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி - 40) "..................................................... நான்கு மறைக்கீறு கண்டான் மலை........." - (திருஈங்கோய்மலை எழுபது - 19) "..................... ஆற்கீழ் நால் வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு" - (திருஈங்கோய்மலை எழுபது - 22) "............................... வேதம் விளம்பிறைசேர் வான்ககுக்கும் வெற்பு" - (திருஈங்கோய்மலை எழுபது - 30) "............................... மறைபரவு பூப்பிடிபொற் றாளான் பொருப்பு" - (திருஈங்கோய்மலை எழுபது - 69) ".............................. தீதில் மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னி" - (திருவலஞ்சுழி மும்மணிக்கோவை - 5) "மருட்டக்க மாமறையாம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார்" - (திருவலஞ்சுழி மும்மணிக்கோவை - 8) "................................... வலஞ்சுழியர் அங்கம் புலன் ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண்" - (திருவலஞ்சுழி மும்மணிக்கோவை - 9) "நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே" - (திருவெழுகூற்றிருக்கை - அடி - 23) "முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய" - திருவெழுகூற்றிருக்கை - அடி - 27) "வேத கீதனை வெண்டலை ஏந்தியை" - (பெருந்தேவபாணி - அடி - 11) "வேத விச்சையை விடையுடை அண்ணலை" - (பெருந்தேவபாணி - அடி - 17) "வேத வேள்வியை விண்ணவர் தலைவனை" - (பெருந்தேவபாணி - அடி - 22) "நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை" - (பெருந்தேவபாணி - அடி - 31) "வேதமும் நீயே வேள்வியும் நீயே..." - (பெருந்தேவபாணி - அடி - 50) "மறைபயில் மார்க்கண்டேயனுக் கருளியும்" - (கோபப்பிரசாதம் - அடி - 36) "மூவகைக் குணமும் நால்வகை வேதமும்" - (கோபப்பிரசாதம் - அடி - 51) "வாக்கும் மனமும் இறந்த மறையனை" - (கோபப்பிரசாதம் - அடி - 73) "............ ........... அக்கணமே நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம் தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய...." - (போற்றித்திருக்கலிவெண்பா - அடி 24, 25) ".................. ................... ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க் கும்மே" - (திருமுருகாற்றுப்படை - அடி - 95 97) "ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி நாவியல் மருங்கின் நவிலப்பாடி" - (திருமுருகாற்றுப்படி - அடி - 186, 187) ".................. ......................... முன்னு மறை நாவனை நான்மற வேன்இவை நான்வெல்ல" - (சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை - 22) "பால்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்" - (சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை - 26) "............... ............... ஆக்கூர் மறையோம்பு மாடத்து மாமறையோ நான்கு மறையோம்பு மாதவர்க்காய் வந்து" - (சிவபெருமான் திருவந்தாதி - 58) ".............. இனக்குவளைக் கண்டத்தான் நால்வேதன் காரோணத்து" - (சிவபெருமான் திருவந்தாதி - 66) "............... .................... எமையாளும் சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்" - (சிவபெருமான் திருவந்தாதி - 68) "..................... பாரோம்பு நான்மறையார் பாணியார் தீர்ந்தளிப்பர் பார்" - (சிவபெருமான் திருவந்தாதி - 78) "பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்ந்தான்" - (சிவபெருமான் திருவந்தாதி - 94) "................... தானக் கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோலாடைக் கரைப்படுத்தான்" - (பரணர் - சிவபெருமான் திருவந்தாதி - 23) "வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்" - (பரணர் - சிவபெருமான் திருவந்தாதி - 31) "நானுடைய குன்றமே நான்மறையாய் நானுடைய" - (பரணர் - சிவபெருமான் திருவந்தாதி - 47) "தேடரிய பராபரனைச் செழுமறையின் அகன்பொருளை" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 10) "வளமலி தமிழிசை வடகலை மறைவல முளரிநன்" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 14) "பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும் நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 10 - 20) "மறையவர்க் கொருவன் நீ" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 25) "உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர சீர்கெழு துழனி" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 39) "வகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 6) "மறையவர் பெருமானை..............." - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 10) "தங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன்" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 15) "பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 24) "அணிபுகலி நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில் வில்லை" - (ஆளுடை.பிள். திருக்கலம்பகம் - 48) "ஓமரசினை மறைகளின் முடிவுகள் ஓலிடுபரி சொடு" - (திருநாவுக்கரசு தேவர் ஏகாதசமாலை - 8) ------------------------------- பதினோராம் திருமுறை :Serial no for check "மாட்டும் பொருளை உருவை வருகாலம் வாட்டும் பொருளாய் மறையான" - (பரணர் - சிவபெருமான் திருவந்தாதி - 58) "செக்கர் நான்மறைப் புத்தேள் நாட" - (சிவபெருமான் திருமும்மணி - 28) "மொழியின் மறை முதலே முந்நயனத் தேறே" - (மூத்தபிள்ளை. திருமும்மணிக்கோவை - 8) "நாயகரே நான்மறையோர் தங்களோடும்" - (கோயில் நான்மணிமாலை - 7) "நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும் அகில சராசரம் அனைத்தும் உதவிய" - (கோயில் நான்மணிமாலை - 20) "வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும் ஆதி நின்திறம் ஆதலின்" - (கோயில் நான்மணிமாலை - 4) நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல் இரண்டொடும் அறிவினில்" - (கோயில் நான்மணிமாலை - 12) "நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கி" - (கோயில் நான்மணிமாலை - 24) "ஆரணம் நான்கிற்கும் அப்பாலவர் ............" - (திருக்கழுமல மும்மணிக்கோவை - 3) "வேத கீத விண்ணோர் தலைவ!" - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 19) "சுருதியும் இருவரும் தொடர்ந்து நின்றலமர" - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 23) "இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும் நெருக்கும்" - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 24) "நிருதியும் எமனும் சுருதிகள் நான்கும்" - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 28) "நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொ டங்கம் வலத்திமைப் போதும் பிரியா எரிவளர்த்தாலும்" - (திருயேகம்பம் - 31) "நடனம் பிரான்உகந்துய்யக் கொண்டானென்று நான்மறையோர் உடன்வந்து" - (கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - 47) "வேதம் பொலியும் பொருளாம் எனக் கொள்வர் மெய்த்தொண்டரே" - (கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - 100) "ஓங்கிய மறையோர்க் கொருமுகம் ஒழித்ததும்" - (திருஒற்றியூர் - 3) "வேத மான்மறி ஏந்துதல் மற்றதன் நாதன் நான்என நவிற்று மாறே" - (திருஒற்றியூர் ஒருபா ஒருபது - 6) "மாலோய் போற்றி மறையோய் போற்றி" - (திருஒற்றியூர் ஒருபா ஒருபது - 9) "ஆரண நுண்பொருளே என்பவர்க் கில்லை அல்லல்களே" - (திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை - 10) -------------------------------------------- பன்னிரண்டாம் திருமுறை : "நண்ணும் மூன்றுல கும்நான் மறைகளும் எண்ணில் மாதவம் செய்ய" - (திருத்தொண்டர் புராணம் - திருமலைச் சிறப்பு - 2) "மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்" - (திருத்தொண்டர் புராணம் - திருமலைச் சிறப்பு - 4) "வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம் விண்ணவர்" - (திருத்தொண்டர் புராணம் - திருமலைச் சிறப்பு - 10) "பூதம் யாவையின் உள்ளலர் போதென வேத மூலம் வெளிப்படும்" - (திருத்தொண்டர் புராணம் - திருமலைச் சிறப்பு - 33) "ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்" - (திருத்தொண்டர் புராணம் - திருநாட்டுச் சிறப்பு - 18) "மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்" - (திருத்தொண்டர் புராணம் - திருநாட்டுச் சிறப்பு - 31) "வேத ஓசையும் வீணையின் ஓசையும்" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 2) "ஆர ணங்களே அல்ல மறுகிடை வார ணங்களும் மாறி முழங்குமால்" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 10) "வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 11) "பொங்கு மாமறைப் புற்றிடங்கொண்டவர் ......................................... துங்க ஆகமம் சொன்ன முறைமையால்" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 16) "வந்தஇப் பழியை மாற்றும் வகையினை மறைநூல் வாய்மை அந்தணர்" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 26) "......................... மறை அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம்" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 34) "பொன்றுவித்தல் மரபன்று மறைமொழிந்த அறம்புரிதல்" - (திருத்தொண்டர் புராணம் - திருநகரச் சிறப்பு - 38) "அருமறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 2) "அருமறை முந்நூல் சாத்தி அளவில்தொல் கலைகள் ஆய்ந்து" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 6) "மாமறை விதிவழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றி" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 13) "பான்மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்தகையான்" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 17) "மன்னவர் திருவும் வைதிகத் திருவும் பொங்க" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 19) "நயந்துபல் லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 20) "மங்கல கீதநாத மறையவர் குழாங்களோடு" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 21) "ஆறுமறை சூழ்கயிலை யின்கண் அருள்செய்த" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 28) "மெய்த்தநெறி வைதிகம் விளைந்தமுத லேயோ" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 32) "வந்துதிரு மாமறை மணத்தொழில் தொடங்கும்" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 33) "முந்தைமறை ஆயிரம் மொழிந்ததிரு வாயான்" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 39) "மறைக ளாயின முன்போற்றி மலர்ப்பதம்பற்றி நின்ற" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 45) "அருமறை முறையிட் டின்னும் அறிவதற்கரியான் பற்றி" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 46) "வேதபா ரகரின் மிக்கார் விளங்குபேர் அவைமுன் சென்று" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 51) "அருமறை நாவல்ஆதி சைவன் ஆரூரன் செய்கை" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 59) "மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 69) "......................................................... அங்கணரும் முதுவடிவின மறையவராய் முன்னொருவர் அறியாமே" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 85) "நரம்புடையாழ் ஒலி முழ்வின் நாதஒலி வேதஒலி" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 91) "நடநவின்றருள் சிலம்பொலி போற்றும் நான்மறைப்பதியை" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 95) "மன்று ளாடுமது வின்நசை யாலே மறைச்சு ரும்பறை புறத்தின்" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 96) "பார்வி ளங்கவளர் நான்மறை நாதம் பயின்ற பண்புமிக" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 97) "அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆட ரம்பையர் அரங்கு" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 99) "அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில்" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 104) "வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப மன்றுளே மாலயன் தேட" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 105) "இருக்கோலம் இடும்பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 114) "வாழிய மாமறைப் புற்றிடங்கொள் மன்னவ னார்அருளாலோர்" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 127) "தாவில்சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 186) "நலங்கிளர் நீழல்குழ நான்மறை முடிவரோடும்" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 188) "மன்பெ ருந்திரு மாமறை பண்சூழ்ந்து" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 191) "வேதஆரணம் மேற்கொண் டிருந்தன" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 194) "அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால்" - (தடுத்தாட்கொண்ட புராணம் - 199) "அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலாம்" - (தில்லைவாழ் அந்தணர் - 2) "மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும்" - (தில்லைவாழ் அந்தணர் - 4) "அருமறை நான்கி னோடா றங்கமும் பயின்று வல்லார்" - (தில்லைவாழ் அந்தணர் - 5) "நல்லொழுக்கம் தலைநின்றார் நான்மறையின் துறைபோனார்" - (திருநீலகண்ட நாயனார் புராணம் - 31) "மனைவியார் தம்மைக் கொண்டு மறைச்சிவ யோகி யார்முன்" - (திருநீலகண்ட நாயனார் புராணம் - 37) "முன்னிலை நின்ற வேத முதல்வரைக் கண்டார்" - (திருநீலகண்ட நாயனார் புராணம் - 40) "செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர், மறைச்சிலம் படியார்" - (இயற்பகையார் புராணம் - 2) "மறைமுனி அஞ்சி னான்போல் மாதினைப் பார்க்க" - (இயற்பகையார் புராணம் - 16) "மயக்கறு மறைஓ லிட்டு மாலயன் தேட நின்றான்" - (இயற்பகையார் புராணம் - 29) "வானவர் பூவின் மாரி பொழியமா மறைகள் ஆர்ப்ப" - (இயற்பகையார் புராணம் - 35) "அருமறை முந்நூல் மார்பின் அந்தணர்கலயர் என்பார்" - (குங்குலியக்கலயர் - 5) "தொழுது போந்தன்பினோடும் தொன்மறை நெறிவ ழாமை" - (குங்குலியக்கலயர் - 25) "விண்பயில் புரங்கள்வேவ வைதிகத் தேரில் மேரு" - (குங்குலியக்கலயர் - 30) "வாங்குவார் போல்நின்ற மறைப்பொருளாம் அவர்மறைந்து" - (மானக்கஞ்சாறர் - 31) "முந்தை வேத முதல்வர் அவர்வழி" - (அரிவாட்டாயர் - 7) "முந்தை மறைநூல் மரபின் மொழிந்தமுறை எழுந்தவேய்" - (ஆனாயர் - 13) "எண்ணிலரு முனிவர்குழாம் இருக்குமொழி எடுத்தேத்த" - (ஆனாயர் - 41) "............................... வாய்மை வேத தன்மைத் திருநீற் றுயர் நன்னெறி தாங்கும்" - (மூத்தியார் - 18) "மான மறையோர் குலமரபின் வந்தார் முந்தை மறை முதல்வர்" - (முருக நாயனார் - 5) "தெள்ளு மறைகள் முதலான ஞானஞ் செம்பொன் வள்ளத்தில்" - (முருக நாயனார் - 11) "கரவி லவர்பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு பரவும் அன்பர்" - (முருக நாயனார் - 14) "வானளிப்பன மறையவர் வேள்வியின் வளர்" - (உருத்திரபசுபதியார் - 2) "அங்கண் மாநக ரதனிடை அருமறை வாய்மை" - (உருத்திரபசுபதியார் - 3) "ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி நேய நெஞ்சின ராகி" - (உருத்திரபசுபதியார் - 4) "கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்" - (உருத்திரபசுபதியார் - 6) "அருமறைப் பயனாகிய உருத்திரம்" - (உருத்திரபசுபதியார் - 7) "வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி" - (உருத்திரபசுபதியார் - 8) "நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்" - (உருத்திரபசுபதியார் - 9) "ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்" - (திருநாளைப்போவார் - 37) "ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரிய..." - (திருக்குறிப்புத் தொண்டர் - 1) "தொல்லை நான்மறை முதற்பெருங் கலையொலி துவன்றி" - (திருக்குறிப்புத் தொண்டர் - 29) "தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாந் தெரிய உள்ளவாறு கேட்டு அருளினாள்" - (திருக்குறிப்புத் தொண்டர் - 50) "எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தம் விரும்பும் உண்மை யாவது பூசனை" - (திருக்குறிப்புத் தொண்டர் - 51) "........ இங்கு நாத! நீ மொழிந்தஆ கமத்தின் இயல்பினால்உனை அர்ச்சனை புரிய" - (திருக்குறிப்புத் தொண்டர் - 52) "உம்பர்நாயகர் பூசனைக் கவர்தாம் உரைத்த ஆகமத் துண்மையே தலைநின்று" - (திருக்குறிப்புத் தொண்டர் - 59) "மெய்ப்பூசை, எய்தஆகம விதியெலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம்பிராட்டி" - (திருக்குறிப்புத் தொண்டர் - 60) "வேத காரண ராயஏ கம்பர் விரைமலர்ச் செய்ய தாமரைக்கழல்" - (திருக்குறிப்புத் தொண்டர் - 67) "மறைக ளால்துதித் தருந்தவம் புரிந்து மாறி லாநிய மந்தலை நின்று" - (திருக்குறிப்புத் தொண்டர் - 76) "திண்காஞ்சி நார்நொச்சி இஞ்சி சூழ்ந்த செழுங் கிடங்கு திருமறைகள் ஒலிக்கும்" - (திருக்குறிப்புத் தொண்டர் - 86) "கொந்தலர்பூங் குழல் இமயக் கொம்பு கம்பர் கொள்ளும்பூ சனைகுறித்த தானம் காக்க மந்திரமா மதில்அகழி அவர்தாம் தந்த வாய்மைஆ கம விதியின் வகுப்புப் போலும்" - (திருக்குறிப்புத் தொண்டர் - 87) "அருமறைஅந் தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகைஅடுத்த அம்பொன் மாடப் பெருமறுகு தொறும் வேள்விச் சாலை எங்கும்பெறும் அவிப்பா கம்கொடுக்கும் பெற்றி மேலோர் வருமுறைமை அழைக்கவிடு மந்திரம்" - (திருக்குறிப்புத் தொண்டர் - 99) "தொன்னிலத்து மன்னுபயிர் வேத வாய்மை உழவு தொழிலால் பெருக்கி" - (திருக்குறிப்புத் தொண்டர் - 102) "வேத வேதியர்வேள் வியே தீயன" - (திருக்குறிப்புத் தொண்டர் - 106) "மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார்" - (சண்டேசுரர் - 2) ".................................... புணர்மடங்கள் மீது முழங்கு முகிலொதுங்க வேத ஒலிகள் முழங்குவன" - (சண்டேசுரர் - 3) "யாகம்நிலவும் சாலைதொறும் மறையோர்ஈந்த அவியுணவின் பாகம் நுகர வருமாலும்" - (சண்டேசுரர் - 14) "தீம்பா லொழுகப் பொழுதுதொறும் ஓமதேனுச் செல்வனவும் தாம்பா டியசா மங்கணிப்போர் சமிதை இடக் கொண்டு..." - (சண்டேசுரர் - 5) "விண்ணின் பயனாம் பொழிமழையும் வேதப் பயனாம் சைவமும்போல்" - (சண்டேசுரர் - 9) "நன்றி புரியும் அவர்தம்பால் நன்மை மறையின் துறைவிளங்க" - (சண்டேசுரர் - 12) "ஐந்து வருடம் அவர்க்கணைய அங்கம் ஆறும் உடன்நிறைந்த சந்த மறைகள் உட்படமுன் தலைவர் மொழிந்த ஆகமங்கள்" - (சண்டேசுரர் - 13) "குலவு மறையும் பலகலையும் கொளுத்து வதன்முன் கொண்டமைந்த நிலவும்உணர்வின் திறம் கண்டு" - (சண்டேசுரர் - 15) "ஓதுகிடையி னுடன்போவார் ஊர்ஆன் நிரையின்" - (சண்டேசுரர் - 17) "பாவும்கலைகள் ஆகமநூல் பரப்பின் தொகுதிப் பான்மையினால் மேவும் பெருமை அருமறைகள் மூலமாக" - (சண்டேசுரர் - 18) "பூணும் தொழில்வேள் விச்சடங்கு புரிய ஓம தேனுக்கள்" - (சண்டேசுரர் - 29) மனைக்கண் கன்று பிரிந்தாலும் மருவுஞ் சிறிய மறைக் கன்று தனைக் கண்டு அருகு சார்ந்து" - (சண்டேசுரர் - 30) "வேத மொழிகள் எடுத்தேத்த விமல மூர்த்தி திருவுள்ளம்" - (சண்டேசுரர் - 53) சொல்லார் மறைகள் துதிசெய்யச் சூழ்பல் லியங்கள் எழ...." - (சண்டேசுரர் - 57) "ஞாலம் அறியப் பிழைபுரிந்து நம்பர் அருளால் நான்மறையின் சீலம்திகழுஞ் சேய்ஞலூர்" - (சண்டேசுரர் - 58) "அஞ்சொல் திருமறை அவர்முன் பகர்தலும் - (திருநாவுக்கரசர் - 161) "கல்வித் துறைபல வருமா மறைமுதல் கறை கண்டு டையவர் கழல்பேணும்" - (திருநாவுக்கரசர் - 162) "ஞாலந் திகழ்திரு மறையின்பெருகொலி நலமார் முனிவர்கள் துதியோடும்" - (திருநாவுக்கரசர் - 164) "நான்மறைநூல் பெருவாய்மை நமிநந்திஅடிகள் திருத்தொண்டின் நன்மை" - (திருநாவுக்கரசர் - 227) "அரவச் சடைஅந் தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து உரவக் கதவந் திருக்காப்புச்செய்த" - (திருநாவுக்கரசர் - 265) "தொல்லை வேதம் திருக்காப்புச் செய்த வாயில் தொடர்பகற்ற" - (திருநாவுக்கரசர் - 266) "ஓங்குவேதம் அருச்சனைசெய் உம்பர் பிரானைஉள்புக்கு... இறைஞ்ச" - (திருநாவுக்கரசர் - 267) "ஓத ஒலியின் மிக்கெழுந்த தும்பர் ஆர்ப்பும் மறை யொலியும்" - (திருநாவுக்கரசர் - 269) "எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமானை" - (திருநாவுக்கரசர் - 335) "வேதமொழி மூலத்தை விழுந்திறைஞ்சி எழுந்து பெருங் காதல்புரி" - (திருநாவுக்கரசர் - 345) "விண்ணி லேமறைந் தருள்புரி வேத நாயகனே" - (திருநாவுக்கரசர் - 368) "வேத முதல்வர்ஐ யாற்றில் விரவுஞ் சராசரம் எல்லாம்" - (திருநாவுக்கரசர் - 384)

No comments:

Post a Comment