Thursday, November 29, 2012

கணவன் மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்கவேண்டும்?

* கணவன் மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்கவேண்டும்?
சோமவார(திங்கள்கிழமை) விரதம் இருந்து வாருங்கள். பார்வதியை சிவன் திருமணம் செய்து கொண்டது சோமவாரத்தில் தான். விரதம் இருப்பது மட்டும் முக்கியமில்லை. நீங்கள் எதற்காக விரதம் இருக்கிறீர்கள் என்று மனைவி புரிந்து கொள்ளவேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டையிடாமல் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் அன்பு அகலாமல் வாழ்வதே ஒரு விரதம் தான்.

*பார்வைக் குறைபாடு நீங்க எந்த தெய்வத்தை வழிபடவேண்டும்?
எல்லாத் தெய்வங்களையும் வழிபடலாம். விடியற்காலையில் சூரிய உதயத்தின் போது சூரியனைப் பார்த்தவாறு 12முறை நமஸ்காரம் செய்து வாருங்கள். ஆதித்ய ஹ்ருதயம் நூல் தமிழில் கிடைக்கிறது. அதையும் பாராயணம் செய்யுங்கள்

No comments:

Post a Comment