Sunday, December 30, 2012

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் சொல்லலாமா?


மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் சொல்லலாமா?

பொதுவாக மந்திரங்கள் அனைத்துமே குருமுகமாக உபதேசம் பெற்றே பாராயணம்,ஜபம் செய்யவேண்டும்.இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. சரி அப்படியெனில் பல புஸ்தகங்களிலும் பல ஒலிதட்டுகளிலும் பல மந்திரங்கள் அச்சிடப்பட்டு , ஒலிக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதே அது தவறா? எனில் இல்லை. பொதுவாக ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இன்ன மந்திரத்தை இன்ன பலனுக்காக இவ்வளவு உரு ஜபிக்கப்போகிறேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு ஜபிப்பவர்கள் தான், தான் ஜபிக்கவேண்டிய மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கவேண்டும். அதை விடுத்து சாதாரணமாக ஆன்மிக ஈடுபாட்டின் காரணமாக இதை தெரிந்துகொள்வதற்கு புஸ்தகத்தை பார்த்தோ, இதுபோல் இணையத்தை பார்த்தோ தெரிந்துகொள்வது தவறில்லை

No comments:

Post a Comment