Monday, January 21, 2013

பாவத்தைப் பெருமாளே துடைத்து, பரமபதத்திற்கே அழைத்துச் சென்றுவிடுவார்

உலகத்தைப் படைத்த இறைவன், நமக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்தார். கோடி நன்மையான விஷயங்களைக் கொடுத்தவர், ஒன்றிரண்டு தீமையான விஷயங்களையும் வைத்தார். இதன்மூலம் உலக உயிர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது. எவனொருவன் நல்லதைப் பிடித்துக்கொண்டானோ, அவன் மீண்டும் இறைவனையே அடைகிறான். கெட்டதைப் பிடிப்பவனுக்கு பல சோதனைகளையும், ஆயிரமாயிரம் பிறவிகளையும் கொடுத்து படாதபாடு படுத்தி, ஞானத்தைக் கொடுத்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். யார் நல்லது செய்கிறார்களோ, அவர்கள் பக்கம் அவன் நிற்கிறார். திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, நல்லவர்களான பாண்டவர்களுடன் நின்றார்.
கெட்டவர்களான கவுரவர்களை அழிக்க துணைசெய்தார். எனவே, இறைவன் கொடுத்த நல்லதை மட்டுமே தேர்வு செய்பவர்கள், பாவக்கணக்கு பட்டியலில் இருக்கமாட்டார்கள். அவர்கள் பெருமாள் கோயிலுக்குப் போய் சொர்க்கவாசலுக்குள் நுழைய வேண்டுமென்பதில்லை. அவர்களின் பாவத்தைப் பெருமாளே துடைத்து, பரமபதத்திற்கே அழைத்துச் சென்றுவிடுவார்

No comments:

Post a Comment