Thursday, February 7, 2013

வயதான காலத்தில் பெற்றோரைத் தவிக்க விட்டு, இறந்தபின் தகனம், தர்ப்பணம் போன்ற சம்பிரதாயங்களை மட்டும் செய்வதைப் பற்றி

 வயதான காலத்தில் பெற்றோரைத் தவிக்க விட்டு, இறந்தபின் தகனம், தர்ப்பணம் போன்ற சம்பிரதாயங்களை மட்டும் செய்வதைப் பற்றி தர்மசாஸ்திரம் என்ன கூறுகிறது?
பெற்றோரைப் பாதுகாப்பது. இறந்த பின் காரியங்கள் செய்வது இரண்டுமே ஒரு மனிதனுடைய கட்டாயக் கடமைகள். முன்னதை விட்டுவிட்டு பின்னதை மட்டும் செய்வது சரியா என்று கேட்கிறீர்கள். இரண்டும் தனித்தனி கடமையாகும். பெற்றோரை சரியாகப் பாதுகாக்காதது மிகப்பெரிய பாவம் தான். இதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். இது அவரை மட்டும் பாதிக்கும் விஷயம். இறந்த பிறகு காரியங்கள் செய்யாவிட்டால் கொடிய பாவம். இது சந்ததிகளையே பாதிக்கும். எனவே அவருக்காக இல்லாவிட்டாலும் சந்ததிகளைக் காப்பாற்றுவதற்காகவாவது பித்ரு காரியங்களைச் செய்தேயாக வேண்டும்.

No comments:

Post a Comment