Monday, April 22, 2013

சிவபெருமானுக்கு 5 வகை செயல்

சிவபெருமானுக்கு ஐந்து செயல்கள் உண்டு.
1. ஆக்கல் : உற்பத்தி, உலகம், பிரபஞ்சம் எல்லாமே அவனிடத்திலிருந்து தான் உற்பத்தியானது. இதைத்தான் படைக்கும் தொழிலுக்கு அதிகாரி சிவன் என்றார்கள்.
2. காத்தல்: இதை வடமொழியில் ஸ்திரி என்பார்கள். படைத்து விட்டால் போதுமா? அதைக் காத்து நிற்க வேண்டுமே அத்தொழிலும் சிவனுடையதே.
3. அழித்தல் : படைத்தல், காத்தல் என்ற இரு வினைகளுக்கு அதிகாரியாக விளங்குபவனுக்கு அழித்தல் தொழில் தானே வந்தடைகிறது.
4. மறைத்தல் : (திரோபவம்) 5. அருளல் : சிவன் கருணாமூர்த்தி என்பதைக் குறிக்கிறது. இந்த ஐந்து மாபெரும் சக்திகளால் தான் உலகமே இயங்குகிறது. இந்த இயக்கத்தை ஆடல் என்றார்கள். ஆடுபவன், ஆட்டுவிப்பவன் சிவபெருமான்.
ஐந்து நந்திகள்......
பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருப்பார்கள். இந்திர நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மால்விடை நந்தி, தரும நந்தி ஆகியவை தான் அவை. இவைகளில், இந்திர நந்தியை கோவிலுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கி அமைக்கின்றனர்.
வேத நந்தி அல்லது பிரதம நந்தியை சுதையாலும், சுண்ணாம்பாலும் மிகப் பெரிய அளவில் பெரிய மண்டபத்தினுள் அமைப்பார்கள். ஆத்ம நந்தி கொடி மரத்தின் அடியில் அமைகிறது. இதற்கே பிரதோஷ கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
மால்விடை நந்தி சக்தி பதமான இரண்டாவது பிரகாரத்தில் அமைகிறது. தரும நந்தி இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்

No comments:

Post a Comment