Monday, May 27, 2013

கண் திருஷ்டி தோஷம்

சிலரது கண்கள் கொள்ளிக் கண்களாக இருக்கும் இப்படிப்பட்டவர்கள் எதனைப் பார்த்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே கண் திருஷ்டி பட்டு விடும். இந்த திருஷ்டியினால் உடல்நலன் பாதிப்பு வியாபாரப் பாதிப்பு மற்றும் பொருள் விரயங்கள் எல்லாம் ஏற்பட்டு விடும்.

அதற்கு கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நிவர்த்தி காணலாம். மிளகாய்-5, படிகம் (சீனிக்காரம்-10) கிராம், உப்பு-ஒரு கைப்பிடி, சூடம்-9.மேலுள்ளவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு துணியில் கட்டி வியாபார தலமாக இருந்தால் கல்லா முதற்கொண்டு எல்லா அறைகளையும் மூன்று சுற்று சுற்றி வாசலில் கொளுத்த வேண்டும்.

வீடாக இருந்தால் வீட்டில் உள்ள அனைவரையும் இருக்கச் செய்து மூன்று சுற்று சுற்றி வாசலில் போட்டுக் கொளுத்த வேண்டும்.ஒவ்வொரு வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில் இரவு 8.30 மணி முதல் 9 மணிக்குள் இந்த பரிகாரம் செய்தால் கண் திருஷ்டி பாதிக்காது.

No comments:

Post a Comment