Wednesday, May 22, 2013

அன்னாபிஷேகம் செய்வது ஏன்?


அன்னாபிஷேகம் செய்வது ஏன்?

தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, "இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு' என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. "அன்னையோடு அறுசுவை உண்டிபோம்' என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். அதனால் தான் சாப்பிடும் போது, சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என்பர்.

 

No comments:

Post a Comment