Sunday, May 26, 2013

பில்லி, சூன்யம், மாயமந்திரம் உண்மைதானா?

பில்லி, சூன்யம், மாயமந்திரம் இருப்பது உண்மைதானா?

தீய சக்திகளை அழிப்பதற்காக இவை ஏற்படுத்தப்பட்டன. சில மந்திரங்களை முறையாக ஜபித்து அதனை நல்வழியில் பிரயோகித்து எல்லோருக்கும் நன்மை செய்து வந்தனர். ஆனால், இப்போதோ வேண்டாதவர்களை எல்லாம் துன்புறுத்த கையாளுகிறார்கள். இந்த எண்ணத்துடன் செயல்பட்டால் கண்டிப்பாக இவை பலிக்காது. இதற்குரிய முறையான பயிற்சி பெற்றவர்கள் இது போல செயல்பட மாட்டார்கள். அவர்களை அடையாளம் காண்பதே அரிது. அரை குறையாகத் தெரிந்த, வியாபாரரீதியாக செயல்படும் சிலரை நம்பி மக்கள் மகிழ்ச்சியான குடும்ப ஒற்றுமையைக் கெடுத்துக் கொள்கிறார்கள். பகுத்தறிவு வளர வேண்டிய சூழலில், இவற்றில் ஈடுபடாமல் இருந்தாலே போதும்.

No comments:

Post a Comment