Thursday, May 30, 2013

சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்..........

சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜெப மாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடா மகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் கொண்டுள்ளனர்.

கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.

இறைவனுக்கு அணிவிக்க வேண்டிய வஸ்திரங்கள்..........

ஆடையை நாம் இறைவனுக்குச் சூட்டி வழிபடும்போது, அவனது திருவருள் கிடைக்கப் பெற்று பாவங்கள் நீங்கி மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம்.சிவன், திருமாலுக்குத் தூய வெண்மை நிறமுடைய பட்டாடை, அம்பாளுக்கு சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறப் புடவைகளைச் சூட்டி வழிபட்டால் சிறக்கலாம். நாட்டில் தவறாமல் மழை பெய்து, செழிப்பு ஏற்படவும் இறைவனுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்.

பூவும் நீரும் போதும்..........

ஏழை மக்களால் இறைவனுக்கு காணிக்கை ஏதும் படைக்க முடிய வில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். இந்த ஆதங்கத்தை மனதைவிட்டு முதலில் ஒழிக்க வேண்டும். இதை ஒழித்தாலே செல்வ வளம் பெருகி விடும் என்பது நம்பிக்கை. ஆண்டவனை வணங்க உதிரிப்பூவும், தண்ணீரும் போதும்.

இதைக் கோயிலில் கொண்டு கொடுத்தாலே இறைவனின் அருள் கிடைத்துவிடும். வீட்டில் சுவாமியை வணங்கும் போதும் மிகப்பெரிய படையலைப் படைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படங்களில் பெரிய மாலைகளை மாட்ட வேண்டும் என எண்ண வேண்டாம்.

சிறிது பூவைத் தூவி, தண்ணீரை படத்தின் கீழே லேசாக தெளித்தாலே போதும். இறைவன் அன்பை மட்டுமே விரும்புகிறான். நமது பொருட்கள் அவனுக்குத் தேவைப்படுவதில்லை. பூவைக் கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்து,எமனையே வென்றவன் மார்க்கண்டேயன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment