Monday, May 13, 2013

பாஞ்சாலியின் மானம் காத்த தினம்

அட்சய திருதியை தினத்தை பெண் மானம் காத்த தினம் என்பார்கள். அதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்தார். என்றாலும் சூதாட்ட மோகம் குறையவில்லை. தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து சூதாடி இழந்தார். துர்க்குணம் கொண்ட துரியோதனன் பாஞ்சாலியின் சேலையை உரிய உத்தரவிட்டான்.
மானம் காக்க பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் உள்பட யாரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் தெய்வமே துணை என ``சங்கு சக்கர கதாபாணி ஸ்ரீமத் துவாரகா நிலையச்சு ஹே கோவிந்தா புண்டரீகாதக்ஷ ரக்ஷமாம் சரணாகதம் என கதறினாள். இந்த சமயத்தில், துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணன் தன் தேவி ருக்மணி சத்யபாமாவுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார்.
பாஞ்சாலியின் கூக்குரல் அவரது காதில் கேட்டது. ஒரு கணம் தாமதித்தால் கூட அந்த அபலைப் பெண்ணின் மானம் பறிபோகும், என்பதால் ஊஞ்சலில் இருந்தபடியே கையை உயர்த்தி அட்சய என்றார். அட்சய என்றால் வளர்தல் என்று பொருள்.
அவரது கையிலிருந்து புறப்பட்ட ஆடை, பாஞ்சாலியின் உடலை சுற்றியது. சுத்தாதனன் இழுத்து, இழுத்து கை சோர்ந்து மயங்கி விட்டான். இப்படியாக கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திருதியை ஆகும். இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தை சொல்லி கிருஷ்ணனின் அருள் பெறலாம்

No comments:

Post a Comment