Friday, June 21, 2013

செல்வம் சேராத தோஷம்

உங்கள் ஜாதகத்தில் லக்னத் துக்கு 2-ஆம் இடமான தன ஸ்தானமும் 4-ஆம் இடமான வீடு அமைப்பு ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருந்தால். செல்வம் சேராத தோஷம் ஏற்பட்டு விடும். செல்வம் சேர்வதற்காக சேமிப்பை உயர்த்த வேண்டுமானால் சில பரிகாரம் செய்ய வேண்டும்.

வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆலயத்துக்கு செவ்வாய் கிழமையன்று காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்குச் சென்று பசும் நெய்யைக் கொண்ட நெய் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஒரு மணி நேரம் தொடர்ந்து எரிய வேண்டும்.

அந்த அளவிற்கு நெய் எடுத்துச் செல்ல வேண்டும். தீபம் ஏற்றப்பட்டவுடன் சந்நி தானத்தின் முன் அமர்ந்து ஓம் சரவணபவ என்று தொடர்ந்து ஒரு மணிநேரம் பாராயணம் செய்ய வேண்டும். கண்களை மூடிக்கொள்ளாமல் விளக்கின் ஒளியை உற்று நோக்க வேண்டும்.

இதே போல ஒன்பது செவ்வாய்க்கிழமைக்கு செய்ய வேண்டும். இதனால் கஷ்டம் விலகும். இத்தகைய பரிகாரம் செய்ய முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே வள்ளி- தெய் வானையுடன் கூடிய முருகன் படத்தை வைத்து வணங்கலாம்

No comments:

Post a Comment