Friday, August 30, 2013

பவுர்ணமி விரத நாளில் உணவு முறை

பவுர்ணமி நாட்களில் விரதம் இருப்பவர்கள் மரக்கறி உணவையே உட்கொள்ள வேண்டும். புளிப்பு, காரம், வெங் காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அரை வயிற்றுக்குச் சாப்பாடு, கால் வயிற்றுக்கு தண்ணீர் மீதி கால் வயிற்றில் காற்று என்று எப்போதுமே இருப்பது நல்லது அதிலும் குறிப்பாக பவுர்ணமி நாட்களில் கண்டிப்பாக இப்படி இருக்க வேண்டும்.

சாந்திராயணத்தைப் பவுர்ணமியன்று பதினைந்து கவளம் உணவு சாப்பிட வேண்டும் அதற்கு மறுநாள் பிரதமையன்று பதினான்கு கவளமும் அதற்கு அடுத்த நாள் அதாவது துவிதியை அன்று பதின்மூன்று கவளமுமாக இப்படியே குறைத்துக் கொண்டே போய் அமாவாசை அன்று முழுப்பட்டினி இருக்க வேண்டும்.

பிறகு அமாவாசையின் மறுநாள் சுக்ல பட்சப் பிரதமையன்று ஒரு கவளமும் அதற்கு அடுத்த நாள் துவிதியைக்கு இரண்டு கவளம் என்றும் இப்படி ஒவ்வொரு நாள் திதிக்கும் கவளங்களைக் கூட்டிக்கொண்டு பவுர்ணமி அன்று பதினைந்து கவளம் என்று முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment