Thursday, October 31, 2013

இருகடன் பெற்ற பெரும் கடன்காரன்

இருகடன் பெற்ற பெரும் கடன்காரன்" !
மறைந்த கவியரசு கண்ணதாசன் கடனில் தத்தளித்தது அனைவரும் அறிந்ததே. தினமும் காலையில் அவர் வீட்டு வாசலில் நான்கைந்து கடன்காரர்கள் காத்துக்கிடப்பது வழக்கம்.
இப்படித்தான் ஒரு நாள் கண்ணதாசனை அவரது உதவியாளர் காலையில் எழுப்பி " வாசலில் ஒரு கடன்காரர் காத்திருக்கிறார்" என்றார். அந்த கஷ்டத்திலும் அவர் இதை கவிதையாகப் பாடினார்.
" உயிர் கடன் கொடுத்தவன் உச்சியில் உள்ளான்
பொருட்கடன் கொடுத்தவன் வாசலில் உள்ளான்...
நான் - இருகடன் பெற்ற பெரும் கடன் காரன்" !
உண்மைதானே. இந்த உயிரே நமக்கு கடனாக
வந்ததுதானே! உயிரை கொடுத்த கடவுள் அதை ஒரு நாள் திரும்பி எடுக்கத்தானே போகிறார்!.

No comments:

Post a Comment