Thursday, October 31, 2013

வன்முறை தோற்றுப்போகும்

ஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி ஏற்பட்டது.
""என்னுடைய பலத்தால் பெரிய மரங்களைச் சாய்ப்பேன். பாறைகளைப் புரட்டிப் போடுவேன், கடலைப் பொங்கச் செய்வேன், கப்பல்களைக் கவிழ்ப்பேன்,'' என்றது காற்று.
சூரியன் தன் பங்கிற்கு, ""நான் இருந்தால் தான் உலகமே இருக்கும். மாலையில் நான் மறைந்ததும் மக்கள் இருளில் தடுமாறுவதைப்
பார்த்தாயா! தாவரங்கள் என்னைக் கொண்டே சாப்பிடுகிறது. அந்த தாவரங்களையே உலகிலுள்ள உயிர்கள் சாப்பிடுகின்றன. நான் இல்லாவிட்டால் அகிலமே இல்லை,'' என்று பெருமை பேசியது.
இவர்களின் சண்டையை ஒரு தேவன் கேட்டான்.
""சூரிய வாயுக்களே! உங்களில் யார் பெரியவர் என்று போட்டி வைக்கிறேன். வெல்பவரே பெரியவர்,'' என்றான். இரண்டும் ஒப்புக்கொண்டன.
"" நீங்கள் இருவரும் உங்கள் பலத்தைக் காட்டி, அதோ போகிறானே ஒருவன், அவனது சட்டையை அவிழுங்கள், பார்க்கலாம்,'' என்றான்.
காற்று சூறாவளியாகி வேகமாக வீசியது. அந்த மனிதனோ கூனிக்குறுகி ஓரிடத்தில் மறைவாக அமர்ந்து உடைகளைக் காத்து விட்டான். அடுத்து. சூரியன் தன் உக்கிரத்தைக் காட்டியது. அவனால் வெப்பம் தாங்க முடியவில்லை. வியர்த்துக் கொட்டியது. ஆனாலும், விசிறியால் தன்னைக் காத்துக் கொண்டான்.
புரிந்து கொண்டீர்களா! வன்முறை தோற்றுப்போகும் என்பதை

No comments:

Post a Comment