Thursday, October 31, 2013

கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று!

ஒரு ஞானியை மூன்று இளைஞர்கள் சந்தித்தனர்.
""சுவாமி! எங்களை உங்கள் சீடர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றனர்.
""சரி...நான் ஒரு செய்முறை தேர்வு வைக்கிறேன், இதற்கு பதில் சொல்ல ஒரு மாத அவகாசமும் தருகிறேன். தேர்வு பெறுபவர்கள் என் சீடர்கள் ஆகலாம்,'' என்றார். மூவரும் தயாராயினர்.
அவர் ஒரு பழத்தோட்டத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அங்கே கிடந்த அரிவாளை எடுத்தார், அழகிய பழமரங்களை வெட்டிச் சாய்த்தார். பழங்களை குத்திக் கிழித்தார். இளைஞர்கள் ஏதும் புரியாமல் விழித்த வேளையில்,""எனது இந்தச் செயல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மாதம் கழித்து பதிலுடன் வாருங்கள்,'' என சொல்லி அனுப்பி விட்டார்.
ஒருமாதம் கழித்து மூவரும் வந்தனர்.
முதலாமவன்,"" ஞானியே! எதெல்லாம் அழகாக இருக்கிறதோ, அதெல்லாம் சிறந்ததாக இருக்க முடியாது. அதனால் அவற்றை நீங்கள் வெட்டியதாக கருதுகிறேன்,'' என்றான்.
இரண்டாமவன்,""ஒரு மனிதன், தன்னை மற்றவர்களை விட <உயர்ந்தவர்களாகக் கருதக்கூடாது என்பது என் அபிப்ராயம்,'' என்றான்.
மூன்றாமவன்,""அறிவற்றவர்கள் அறிவாளிகளுக்கு துன்பம் விளைவிக்க முடியும் என்பது என் கருத்து,'' என்றான்.
ஞானியின் முகத்தில் மலர்ச்சி...""சபாஷ், நான் வைத்த தேர்வில் மூவருமே தேர்வு பெற்று விட்டீர்கள். இனி நீங்கள் என் சீடர்கள்,'' என்றார்.

No comments:

Post a Comment