Thursday, November 28, 2013

யாகங்கள் என்பது நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றும் ஒரு அர்த்தமற்ற சடங்கு அல்ல

யாகங்கள்...!

ஆதிகால மக்களும் சரி மன்னர்களும் சரி தங்களது கோரிக்கைகளை வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்ள மிகபெரிய யாகங்களை நடத்தி இருக்கிறார்கள். நம் நாட்டில் உள்ள புராண குறிப்புகளும் சரித்திர ஆதாரங்களும் பல யாகங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்ற செய்யப்பட்டதாக தகவல்கள் தருகின்றன.

யாகங்கள் என்பது நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றும் ஒரு அர்த்தமற்ற சடங்கு அல்ல சில குறிப்பிட்ட கணித அளவுகள் படி யாக குண்டங்களை வடிவமைத்து நமது கோரிக்கைகளுக்கான நிவாரண மந்திரங்களை முறைப்படி சொல்லி சில மூலிகை பொருள்களை அக்னியில் ஆகுதி செய்வதனால் மந்திரங்களால் எடுத்து சொல்லப்படும் நமது வேண்டுதல்கள் குறிப்பிட்ட தேவதைகளிடம் சென்றடைகிறது. முறைப்படி செய்யப்படும் எந்த யாகமும் தோற்று போனதாக சரித்திரம் இல்லை....

இன்று பொதுவாக செய்ய படுகின்ற பல யாகங்கள் வேதங்களில் உள்ள கர்ம காண்டத்தை பின்பற்றியே நடத்த படுகிறது. வேதங்களில் உள்ள கர்ம காண்ட வழிகாட்டுதலின் படி செய்ய படுகின்ற யாகத்தின் பயனை மிக விரைவாக அடைய சித்தர்கள் என்ற மகரிஷிகள் பலர் பல ரகசிய வழிகளை ரகசிய பொருள்களை கூறி இருக்கிறார்கள். அவைகளை பற்றி பல ஆச்சாரிய பெருமக்களுக்கு சரிவர தெரியாது.

காரணம் அவர்கள் வேதங்களை மட்டும் முறைப்படி கற்றவர்களே தவிர சித்தர்களின் மூலிகை ரகசியங்கள் தாந்திரீக வழிபாட்டு சூட்சமங்கள் போன்றவற்றை அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லை ஒருசில ஆச்சாரியார்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து முறைப்படி யாகங்களை நடத்துவோமானால் பண்டைய கால அரசர்கள் போன்று பலாபலனை உடனடியாக பெற்றது போல நாமும் பெறலாம்.

No comments:

Post a Comment