Sunday, December 22, 2013

சிவாச்சாரியாரும் சுமார்த்தப் பிராமணரும்

சிவாச்சாரியாரும் சுமார்த்தப் பிராமணரும்

சிவாச்சாரியார் அல்லது சிவத்து விஜர் அல்லது ஆதிசைவர் என்போர் சுமார்த்தப் பிராமணர் அல்லர். அவர்கள் சிவப்பிராமணர் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதி சைவராகிய சிவப் பிராமணர்கள் அனாதி சைவர் என்று சொல்லப்பட்ட சிவபெருமா னுடைய அய்ந்து முகங்களிலிருந்து தோன்றி, சிவப்பிரானையே வழிபடு கிறவர் என்றும், சுமார்த்தப் பிராமணர் பிரம்மாவினுடைய நான்கு முகங்களி லிருந்து தோன்றி, பிரமத்தையே வழிபடுகிறவர்கள் என்றும் சிவ சிருஷ்டியின் பாற்பட்ட சிவப்பிராமணர்... அல்லாமல், பிரம சிருஷ்டியில் தோன் றிய சுமார்த்தப் பிராமணர் சிவாலயங் களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்றும் ஆகமங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே சிவால யங்களில் பரார்த்த பூசை ஆதி சைவர்களாகிய சிவாச்சாரியர் தவிர, இதர பிராமணர் செய்யக் கூடாது என ஆகமங்களில் கீழ்க்காணுமாறு விதிக் கப்பட்டுள்ளது.

சித்தாந்த சாத்திரம் உணர்ந்த ஆதி சைவர்கள், அரசர் ஊர் எஜமானர் இவர்களுடைய சேமத்தின் பொருட்டு, சிவலிங்கப் பிரதிட்டை செய்து பூசிக்க வேண்டியது. ஆதி சைவர் ஆன்மார்த்த, பரார்த்தங்களுக்கு அதிகாரமுடையவர். இல்லறத்திலுள்ள ஆதி சைவ பிராம்ம ணோத்தமர் சர்வ காரியங்களிலும் அதிகாரிகளாகச் செய்யலாம். ஆன் மார்த்த பரார்த்தங்களிலும் சிவயாகத் திலும் சிவத்துவிஜர்களாகிய ஆதி சைவர்களே அதிகாரமுடையவர். ஏனை யோர் ஆன்மார்த்தமே செய்யத்தக்கவர். அரசனுடைய உலோபத் தன்மையால் ஏனையோர் பரார்த்தமும் செய்வாரா யின், அரசனுக்கும் அவனால் காக்கப்படும் நாட்டிற்கும் உடனே கேடு சூழும் என்பதில் சந்தேகமில்லை (காமிகாகமம் தென்னிந்திய அர்ச்சகர் சங்க வெளியீடு, பக்கம் 31-32)

No comments:

Post a Comment