Tuesday, January 28, 2014

ஒரே தொழில் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் கூலி கொடுப்பதா ஸ்ரீராமன் குஹன்




கங்கையை கடப்பதற்காக குஹனுடைய ஓடத்தில் ஏறிய ஸ்ரீராமன் , கரையை அடைந்ததும் , ஒடக்கூலி கொடுத்த போது , அதை வாங்க மறுத்து விட்டான் குஹன் : அதற்கான காரணத்தை அவர் ...ேட்டபோது , '' ஐயனே ...நாம் இருவரும் ஒரே தொழில் செய்து வருகிறோம் !......ஒரே தொழில் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் கூலி கொடுப்பதோ , வாங்கவோ கூடாது !'' என்றான் குஹன் :..
ஸ்ரீராமனுக்கு ஏதும் புரியவில்லை : '' என்ன ...ஒரே தொழிலா ? '' வியப்புடன் கேட்ட ஸ்ரீராமனுக்கு பணிவுடன் பதிலளித்தான் குஹன் : '' ஆம் ஐயனே !....நான் எனது ஓடத்தின் மூலமாக மனிதர்களை ஏற்றி கொண்டு , கங்கை ஆற்றை கடந்து சென்று அடியவர்களை கரை சேர்க்கிறேன் !....அது போல ' சம்சாரம் ' என்ற கடலில் அகப்பட்டு தத்தளித்து கொண்டிருக்கும் மனிதர்களை ' கருணை ' என்ற ஓடத்தில், ஏற்றி கொண்டு ' வீடுபேறு ' என்ற கரையில் சேர்க்கிறீர்கள் !...அதனால் நாமிருவரும் செய்யும் தொழில் ஒன்றே என்று கூறினேன் ஐயனே !'' அவனின் வார்த்தைகள் கேட்டு , புன்னகையுடன் அவனை ஆலிங்கனம் செய்து கொண்டார் ஸ்ரீராமன்

 

No comments:

Post a Comment