Thursday, January 30, 2014

* சுவாமி இருக்கும் அறையை கருவறை என்பது ஏன்?

* சுவாமி இருக்கும் அறையை கருவறை என்பது ஏன்?
நமக்கு அருள்புரிவதற்காக சிலையில் எழுந்தருளும் சுவாமியை அதாவது, தெய்வ சக்தியை முறையான பூஜை, ஜபம் இவற்றினால் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முறையான மருத்துவம் இல்லையென்றால், கருச்சிதைவு ஏற்படுவது போல முறையான பூஜையில்லா விட்டால், தெய்வசக்தி குறைந்து விடும். குழந்தையும், தெய்வமும் ஒன்று என்ற பழமொழியின் அடித்தளமே இது தான். பத்து மாதத்தில் குழந்தையானது கருப்பையில் இருந்து வெளிவந்து விடுகிறது. நமக்காக நாம் அழைத்ததன் பேரில், சிலையில் ஒளிவிடும் தெய்வ சக்தியானது எத்தனை ஆண்டுகள் ஆனாலும், வெளிப்பட்டு விடாமல் இருக்க நித்யபூஜை, உற்சவம், கும்பாபிஷேகம் போன்றவற்றினால், கருவைப் போல பாதுகாத்துக் கொண்டே இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் நமக்காக இத்தனை காலம் இப்படித்தான் செய்து வந்திருக்கிறார்கள். நாமும் வருங்கால சந்ததியினருக்காக இதை பாதுகாக்க வேண்டும். கருப்பையும், கருவறையும் ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ஒன்று தான். கோயிலில் பூஜைகள்
சரிவர நடக்காவிட்டால், நாட்டில் என்னென்ன தீங்குகள் விளையும் என திருமூலர் திருமந்திரத்தில் பட்டியல் இடுகிறார். அதனால், பூஜை விஷயத்தில் அலட்சியம் செய்வது கூடாது.

No comments:

Post a Comment