Thursday, January 30, 2014

மனைவியின் பெயரை கணவன் சொல்லக்கூடாது

அட! என்னைய்யா அநியாயம் இது!
அநியாயமா இருக்கு! அது "ஒண்ணை' மட்டும் தான் சொல்றதுக்கு எங்க வீட்டிலே அதிகாரமே இருந்துச்சு! அதுக்கும் வேட்டு வைச்சுட்டீரே!
நீர் நல்லாயிருப்பீரா!'' என்று தலைப்பைப் படித்தவர்கள், திட்ட ஆரம்பித்திருப்பீர்கள்.
கொஞ்சம் பொறுங்க! இதை நாங்க சொல்லலே! நம்ம மரபு சொல்லுது!
அந்தக் காலத்திலே, மனைவியை கணவன் ""தேவி'' என கசிவார். அந்த அம்மையார் "நாதா' என உருகுவார். இதெல்லாம் சும்மா இல்லே! சாஸ்திரப்படி தான், அப்படி சொன்னாங்க.
பொதுவாக, வயது அதிகமானவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்பது மரபு. உறவுமுறை சொல்லி தான் அழைக்க வேண்டும். அதன்படி, கணவனின் பெயரை மனைவி சொல்லக்கூடாது. சரி...அவரை எப்படி அழைப்பதாம்! மாமா, அத்தான் என்று உறவு முறை சொல்லி அழைக்கலாம். அப்படி சொல்லும் வழக்கமில்லை என்றால், தங்கள் குழந்தைகளின் பெயரால், வரதப்பா, கிருஷ்ணப்பா, சாந்தி அப்பா என்று சொல்லலாம்.
ஆனால், மனைவியின் பெயரை கணவன் சொல்லக்கூடாது என்று சாஸ்திரமே சொல்கிறது.
இவர்களுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, ராதா என்று பெண் தெய்வங்கள் ஒன்றின் பெயரைச் சொல்லி தான் அழைக்க வேண்டுமாம்!
சாஸ்திரம் சொல்றதை நாங்க சொல்லிட்டோம்! இனிமே உங்க இஷ்டம்!

No comments:

Post a Comment