Sunday, March 30, 2014

முருகா என்றால் என்ன கிடைக்கும்?

முருகா என்றால் என்ன கிடைக்கும்?

“விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் - மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா” என்கிறார் அருணகிரிநாதர்

முருகா என்ற நாமங்கள் கூற அருணகிரிநாதர் என்ன சொல்கிறார்?
...
மு என்றால் முகுந்தன்

ரு என்றால் ருத்ரன்

கா என்றால் பிரம்மா

- இதனால் முருகா என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.

இது மட்டுமல்ல.

முகுந்தன் தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்.

ருத்ரன் எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்.

பிரம்மா தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.

இதனால் முருகா என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.

இதனால்தான் முருகா என்னும் நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.

No comments:

Post a Comment