Sunday, March 30, 2014

தனக்கு அளிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஏற்க மறுத்தால் அது கடைசியில் யாரைச் சென்றடையும்?“

ஒரு சமயம் ஞானி ஒருவர் ஒரு மரத்தடியில் அமர்ந்து மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவனுக்கு அவரது உபதேசங்கள் எரிச்சலைக் கொடுத்தன. உடனே அவன் எழுந்து அந்த ஞானியைக் கடுஞ்சொற்களால் திட்டினான்.
அவன் திட்டி முடிக்கும் வரை பொறுமையாய் இருந்த ஞானி, அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“மகனே! இப்பொழுது நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்வாயா?“ என்று கேட்டார்.
“என்ன கேள்வி?“ என்று அவன் கேட்டான்....
“தனக்கு அளிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஏற்க மறுத்தால் அது கடைசியில் யாரைச் சென்றடையும்?“ என்று கேட்டார் ஞானி.
“இதென்ன கேள்வி? அந்தப் பொருளை யார் கொடுத்தாரோ அவரைத்தான் சென்று சேரும்“ என்றான் அவன்.

அதற்கு ஞானி, “நீ என்னை வாய்க்கு வந்தபடியெல்லாம் கன்னாபின்னாவென்று திட்டினாய். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால், இப்பொழுது அந்தத் திட்டுக்கள் யாவும் உன்னிடம் தானே வந்து சேரும்!“ என்றார் அமைதியுடன்.
திட்டியவன் தலை கவிழ்ந்தான்

No comments:

Post a Comment