Sunday, March 9, 2014

ராம ராம' என்று ஜெபித்துக் கொண்டிருந்தால்போதும். வேறு எந்த பூசையோ, சந்தி, ஜெப தபங்களோ செய்ய வேண்டியதில்லை.

ராம, ராம, ராம, ராம, ராம,ராம
ராம ராம' என்று ஜெபித்துக் கொண்டிருந்தால்போதும். வேறு எந்த பூசையோ, சந்தி, ஜெப தபங்களோ செய்ய வேண்டியதில்லை. எல்லா நன்மைகளும், கிடைக்க வேண்டிய எல்லாப் பலன்களும் ராம நாம உச்சரிப்பில் கிடைத்து விடும் என்கிறார் சித்தர் சிவவாக்கியர்.
அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்...
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே

- என்ற பாடலின் மூலம் ராம நாமத்தின் பெருமையைச் சொல்கிறார் சித்தர் சிவவாக்கியர்.
அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் ராம நாம உச்சரிப்பில் கிடைக்கும். சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், ராம நாம உச்சரிப்பில் கிடைக்கும். உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் ராம நாமத்தால் நன்கு வளர்ச்சியடையும் என்று ராம நாமப் பெருமையை எடுத்துரைக்கின்றார் சித்தர் சிவவாக்கியர்.

No comments:

Post a Comment