Wednesday, April 9, 2014

அறிவுரை கூறுவது எளிது. ஆனால் நாம் முதலில் தகுதி பெற்றவராக இருக்கவேண்டும்.

ரமண மகானிடம் ஒரு அம்மா தன் மகனுடன் வந்தார். 
“அய்யா என் பையன் நிறையா இன்னிப்பு சாப்பிடுகிறான். நான் சொன்னா கேட்க மறுக்கிறான். நீங்க தான் அவனுக்கு புத்தி சொல்லணும்.” என்றார் அந்த அன்னை.

ரமணர் “நீங்கள் ஒரு வாரம் கழித்து வாருங்கள் “ என்றார். ஒரு வாரம் கழித்து வந்த அந்தச் சிறுவனை அழைத்து “இனிப்பு உடல்நலத்திற்குக் கேடு. அதிகம் உண்ணாதே” என ரமணர் எளிய அறிவுரைகளைக் கூறினார்.

சிறுவனின் அன்னை நன்றி கூறி “அய்யா, போன வாரமே தாங்கள் இந்த அறிவுரைகளைக் கூறியிருக்கலாமே?” என்றார்.

“அம்மா, போன வாரம் வரை நான் இனிப்பு நிறையா சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். எனவே அவனுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. இப்போது நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.” என்றார்.

அறிவுரை கூறுவது எளிது. ஆனால் நாம் முதலில் தகுதி பெற்றவராக இருக்கவேண்டும்.

குறள் 664: சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்.

http://www.ramanamam.com/facts.php
ரமண மகானிடம் ஒரு அம்மா தன் மகனுடன் வந்தார்.
“அய்யா என் பையன் நிறையா இன்னிப்பு சாப்பிடுகிறான். நான் சொன்னா கேட்க மறுக்கிறான். நீங்க தான் அவனுக்கு புத்தி சொல்லணு...ம்.” என்றார் அந்த அன்னை.
ரமணர் “நீங்கள் ஒரு வாரம் கழித்து வாருங்கள் “ என்றார். ஒரு வாரம் கழித்து வந்த அந்தச் சிறுவனை அழைத்து “இனிப்பு உடல்நலத்திற்குக் கேடு. அதிகம் உண்ணாதே” என ரமணர் எளிய அறிவுரைகளைக் கூறினார்.
சிறுவனின் அன்னை நன்றி கூறி “அய்யா, போன வாரமே தாங்கள் இந்த அறிவுரைகளைக் கூறியிருக்கலாமே?” என்றார்.
“அம்மா, போன வாரம் வரை நான் இனிப்பு நிறையா சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். எனவே அவனுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. இப்போது நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.” என்றார்.
அறிவுரை கூறுவது எளிது. ஆனால் நாம் முதலில் தகுதி பெற்றவராக இருக்கவேண்டும்.
குறள் 664: சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

No comments:

Post a Comment