Friday, May 30, 2014

ஆதி சேஷ ஆனந்த சயண! - இதன் உள்ளர்த்தம்

ஆதி சேஷ ஆனந்த சயண! -  இதன் உள்ளர்த்தம்

எலோருக்கும் எளிதில் விளங்க வேண்டும் என்ற நோக்கில்! சமயங்கள்! கொள்கைகள் கடந்த விளக்கம்!
ஆனந்தமாய் ஒருவன் இருக்க வேண்டும் என்றால்! அவனுடைய தேவைகள் அனைத்தும் சம்பூரணமாய் நிறைவேறி இருக்க வேண்டும். இந்த சம்பூர்ணத்தை உணர்வது எது? நம் மூலைதான்!இதை உணர்த்துகிறது. இந்நிலை தொடர! தொடர, அது சயனமாகி! சஹாசரத்தில், நிலையான ஆனந்த மயமாகி! சயனமாகிறது.
இந்நிலை பரிபூரணன் என்று அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண மூர்த்தி கொண்ட கோலத்தை குறிக்கும். பரிபூரணன் என்றல் என்ன? 72000 நாடிகளும் தன் வயப்பட்டு, 7 சக்ரங்கள் வழி! இடா, பிங்களா, சுஸ்மான நாடிகள் மூலம் சஹாசரத்தை அடைந்தது,
நிலையற்ற ஆனந்தத்துடன்! ஆயிரம் இதழ்கள் சுறந்த அமிர்தகடல்(பாற்கடல்)கமலத்தில்ஆனந்தமாய்! குண்டலினி பாம்பு (ஆதி சேஷன்) குடை பிடிக்க, தன் சக்தியாகிய மகா லெட்சுமி! நாதன் தாழ் பணிந்து பணி செய்ய ஆனந்தமாய் சயனம் செய்கின்றார்! ஸ்ரீ மந் நாராயணன்.
மனம் ஒடிங்கினால்! அனைத்தும் ஒடுங்கும். காரணங்களும்! அந்தகரணங்களும்! அடங்கி ஒடுங்குமிடம் நம் மூளை. மூளை சஹாசரத்தில்தான் இருக்கிறது. அது Cerebrospinal fluid (ஆயிரம் இதழ் கொண்ட பாற்கடல்) என்ற அமிர்தத்தில்தான் மிதக்கிறது. முடிவாக! நம் தேவைகள் மனதோடு பினைந்த்திருக்கின்றன! மனமோ, நம் மூலையோடு பினைந்திருக்கிறது. ஆகவே அடங்கி ஒடிங்கி ஆனந்த மாயமான மூலைக்கு! எந்நாளும் ஆனந்த சயனம்தான்! ஸ்ரீ மந் நாராயணனுடைய இந்த அற்புத சயனம் இதைதான் விளக்குகின்றதோ! 

No comments:

Post a Comment