Thursday, May 29, 2014

அட்சய திருதியை எனும் அற்புத பொன்னாள்

அட்சய திருதியை என்று நாம் செய்கின்ற எந்த வொரு நற்காரியமும், செயலும பன்மடங்கு பெருகி நம் வாழ்வில் வனம் சேர்க்கும் என்பதே உண்மை. அட்சயம் என்றால் என்றென்றும் வளர்வது, பூரணமானது குறையாதது, அழியா பலன் தருவது என்று பொருள்.

சித்திரை மாதம் அமாவாசை அடுத்த வரும் மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை தான் அட்சய திருதியை நன்னாள் என்றழைக்கிறோம். இந்த நன்னாளில் நான் கிருதயுகத்தை பிரம்மன் படைத்ததாக பவிஷ்ய புராணம் சொல்கிறது. அட்சய திருதியை நன்னாளில் தான் ஐஸ்வர்ய லஷ்மி மற்றும் தான்ய லட்சுமி தோன்றினார்கள்.

மாலவனோடு திரு சேர்ந்து திரு மால் ஆன தினம் அட்சய திருதியை திதி. இது பொதுவாகவே லட்சுமி கடாச்சம் நிறைந்த நன்னாள். பரசு ராம் அவதாரம் நிகழ்ந்தது அட்சய திருதியை நாளில் தான். மஹாபாரதத்தில் திரவுபதி மானம் காக்க குறைவிலா சேலை வழங்கி கிருஷ்ய பரமாத்மா பாதுகாத்த அட்சய திருதியை நாளில் தான்.

பாற்கடல் கடைந்த போது அமிர்தத்துடன் அவதரித்த திருமால், அகலுமில்லேன் என மாலவன் மார்பில் நிலையான இடம் பிடித்தது திருதியை திதி நாளில் தான்.சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் காசியில் உள்ள அன்ன பூரணியிடம் தங்க அட்சய பாத்திரத்தில் ஸ்வர்ண கரண்டியில் பிச்சை பெற்றது திருதியை நாளில் தான்.

ராவணனால் விரட்டப்பட்ட குபேரன் வறுமையில் வாடியபோது பெரும் தவம் புரிந்து ஈஸ்வரன் அருளாசிப்படி திருமகளை வழிபட்டு சங்கநிதி, பதுமாநிதி என்ற ஐஸ்வர்ய கலசங்களை பெற்றது அட்சய திருதியை நன்னாலி தான்.

வனவாசகத்தின் போது தருமருக்கு சூரிய பகவான் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் வழங்கியது அட்சயதிருதியை அன்று தான். ஏழ்மையில் குறுகி கிடைந்த குசேலரை, கண்ணன் கூறிய அட்சயம் என்ற சொய்ல குபேர வாழ்வு வழங்கியது அட்சய திருதியையில் தான்.

இத்தனை அற்புதங்கள் நிகழ்ந்த அட்சய திருதியை நாளில் நாம் விரதமிருந்து மஹாலட்சுமி மற்றும் குபேரனை வணங்கி நம் வீட்டிற்கு தேவையான செல்வங்களை வாங்கி கொள்ளலாம். இயலாதவர்களுக்கு நம்மால் இயன்றதை தானம் செய்வதும் திகவும் நன்மை அளிக்கும்.

அட்சய திருதியை வழிபாடும் தானமும் :

அட்சய திருதியை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜையறையில் கோலமிட்டு மகாலட்சுமி, மஹா விஷ்ணு இருவர்  இணைந்த படத்தின் மீது மாலையிட்டு விளக்கேற்றி பால், பாயாசம், பழம் போன்றவற்றை நிவேதனம் செய்து தூப, தீபம் காட்டி வழிபட வேண்டும்.

அட்சய திருதியை தினத்தன்று நாம் வாங்கும் பொருள்களை விட தானம் செய்வதன் மூலமே நம் செல்வம் பன்மடங்கு பெருகும். அன்னதானம், கோதானம் போன்றவற்றுடன் நம்மால் இயன்ற நீர் மோர் கூட தானம் செய்யலாம்.

அட்சய திருதியை என்பது பல அற்புதங்கள் நடந்தேறிய நன்மை நிறைந்த பொன்னாள் என்பதால் நிறைய பேர் தங்கம் வாங்குகின்றனர். உப்பு, வாங்கி வீட்டில் வைக்கலாம். கைகுத்தல் அரிசி வாங்கி கொஞ்சம் துணியில் கட்டி நமது பொக்கிஷ அலமாரியில் வைக்கலாம்.

மஞ்சள் வாங்கலாம். அதிலும் கஸ்தூரி மஞ்சர் வாங்குவது மிக சிறந்தது. கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கலாம். அட்சய திருதியை அன்று பூஜை செய்யும் போது மகாலட்சுமியின் முன்பு கனகதாரா ஸ்தோத்திரம் பாடி வேண்டினால் இல்லத்தில் செல்வம் குறையாது வளம் பெருகும்.

அட்சய திருதியை நன்னாளில் தாங்கள் செய்வதுடன் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, புதிய பாடங்கள் படிப்பது, கலைகளில் இணைவது போன்ற புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். வாழ்க்கைக்கு உகந்த எல்லா செல்வங்களையும் வாரிவழங்கும் அட்சய திருதியை ஓர் அற்புத பொன்னாள்.

No comments:

Post a Comment