Thursday, May 29, 2014

ஆஞ்சநேயர் வழிபாட்டினால் ஒருவருக்கு என்னென்ன பலன் கிடைக்கும்

வால்மீகி ராமாயணத்தை படிக்கும் போது, ஆஞ்சநேயருக்காகச் சொல்லும் புகழ்மிக்க ஸ்லோகம் ஒன்றுண்டு.
""புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக் படுத்வம் கீச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!!
ஆஞ்சநேயர் வழிபாட்டினால் ஒருவருக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த ஸ்லோகம் பட்டியல் இடுகிறது. நல்ல புத்தி, தேகபலம், புகழ், சாந்தகுணம், யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, ஆரோக்கியம், உற்சாகம், வாக்குவன்மை ஆகிய எட்டும் ஆஞ்சநேயரை தியானிப்பதால் உண்டாகும். இந்த எட்டையும் எட்டுவதற்கு ஆஞ்சநேயரை வணங்குங்கள்.

No comments:

Post a Comment