Thursday, May 29, 2014

ஜோதிட உண்மைகள்

மேஷம் மற்றும் விருச்சிக ராசியில்பிறந்தவர்கள் ஆழ்ந்த பாசத்துடன் இருப்பார்கள்.அதே சமயம் கடும் கோபத்துடன் இருப்பார்கள்.இவர்கள் யாரை நேசிக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமகோபத்தைக்காட்டுவார்கள்...
இவர்கள் நிறைய ஜோக் அடிப்பார்கள்.பேச்சில் இவர்களிடம் தோற்றுத்தான் போகவேண்டும்.இவர்களிடம் ரகசியம் சிறிதும் தங்காது.

ரிஷபம் மற்றும் துலாம் ராசியில்பிறந்தவர்கள் தன்னை அழகுபடுத்திக்கொள்வதிலும் தன்னலத்திலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.எப்போதும் ஜாலியாக இருப்பதை இவர்கள் விரும்புவார்கள்.
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் பிடிவாதகுணத்துடன் இருப்பார்கள்.இதில் புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு ஓரளவு நற்குணங்கள் இருக்கும்.
கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள்.இதில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் நாம் ஒவ்வொருவரும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.இவர்களுக்கு ரிஷபராசியின் குணங்கள் நிறைய இருக்கும்.
சிம்மராசியினர் அதிகாரம் செய்வதிலும்,சிறந்த நிர்வாகத்திறமையும் கொண்டவர்கள்.இவர்களுக்கு எப்போதும் மேஷ விருச்சிக கும்ப ராசியினர் பக்க பலமாக இருப்பார்கள்.
கன்னிராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் போல சுயநல சொரூபிகள் இந்த உலகத்திலேயே கிடையாது.மற்ற நட்சத்திரங்களான உத்திரம், சித்திரையில் பிறந்தவர்கள் ஆணெனில் பெண்ணாலும் பெணெனில் ஆணாலும் எப்போதும் நன்மை உண்டு.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கப்பிறந்தவர்கள்.மாநிறமாகவும் ஓரளவு குண்டாகவும் இருப்பார்கள்.சாமர்த்தியமாக பேசுவதில் திறமைசாலிகள்.
மகரம்,கும்பம் ராசியில் பிறந்தவர்கள் தர்மம் நீதி நியாயம் இவற்றிற்காக தன் குடும்பம் , வேலை, தொழில் என அனைத்தையும் இழக்கத்தயாராக இருப்பார்கள்.இவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தை அனுபவிக்கப்பிறந்துள்ளனர்.
உலகின் 100 கோடீஸ்வரர்களில் 80 பேர் மகரராசியில் பிறந்திருப்பர்.
கும்பராசி அகத்தியமகரிஷி பிறந்த ராசியாகும்.கோபுரகலசத்திற்குள் என்ன இருக்கும்? யாருக்கும் தெரியாது.அதுபோல இந்த ராசியினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.இவர்கள் மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.இவர்களுக்கு எங்கும் எப்போதும் புகழ் உண்டு.
மீனராசியில் பிறந்தவர்களும் புண்ணியாத்மாக்களே! இவர்களிடம் சிக்கனத்தை எதிர்பார்க்கக்கூடாது.
மேஷத்திற்கும் கன்னிக்கும் ஆகாது.
விருச்சிகத்துக்கும் கடகத்துக்கும் ஆகாது.
ரிஷபத்துக்கும் மேஷத்துக்கும் ஒரளவே சரிப்படும்.
கடகத்துக்கும் கன்னிக்கும் சூப்பராக ஒத்துப்போகும்

No comments:

Post a Comment