Thursday, June 19, 2014

பிராஹ்மணன் யார்?


பிராஹ்மணீயம் - பிராஹ்மணன் யார்?

(சர்மா சாஸ்த்ரிகளின் "வேதமும் பன்பாடும்” புத்தகத்தில் இருந்து):
மஹாபாரதத்தில் 18 பர்வங்களில் ஆஸ்வமேதிக பர்வம் என்று ஒரு பர்வம். இதில் (96, 97வது அத்தியாயத்தில் யுதிஷ்டிரர்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நோக்கி “பிராஹ்மணீயத்தை” பற்றி சில கேள்விகளை கேட்கிறார்.:

யுதிஷ்டிரர்:

கேசவா, ஜனார்த்தனா,

பிராஹ்மணன் யார், அவனது தன்மை யாது?

பகவான்:

தர்மத்தை அனுஷ்டிப்பவருள் சிறந்தவரே, யுதிஷ்டிரரே, கேளும்:

* சிகையும், யஜ்னோபவீதமுள்ளவர்களும்,

* ஹோமம் செய்பவர்களும்,

* தன் மனைவியிடத்திலேயே ஆசையுள்ளவர்களும்

* நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேதம் ஓதுபவர்களும், 

*ஸந்த்யாவந்தனம் மூலம் காயத்ரியை உபாஸிப்
பவர்களும்,

* அதிதி தர்மத்தை அனுஷ்டிப்பவர்களும்,

* பித்ரு கார்யத்தில் சிரத்தையுடையவர்களையும் பிராஹ்மணன் என்று கூறலாம்.

-===

அரசரே, பாண்டவரே, மேலும் சில விஷயங்களை கூறுகின்றேன். கேளும்:

* பிராஹ்மண குலத்தில் பிறந்தும் மேதாவிகளாகயிருந்தும் தேவபூஜை செய்யாதவர்கள்,

* பேராசையுள்ளவர்கள்,

* தன் மனைவியிடத்தில் ஆசை வைக்காதவர்கள்,

* சமையலில் வேற்றுமை செய்பவர்கள்.

* தகப்பனாரையும், தாயாரையும், குருவையும் அவமதிப்பவர்கள்,

* ஸந்தியோபாஸ்தி செய்யாதவர்கள்.

* ஸ்வாஹையற்றவன்,

* ஸ்வதையற்றவன்,

* மாமனார், மாமியாரை அனுசரிக்காதவன்,

* வட்டியில் ஸம்பாதிப்பவன்,

*பொய் வேஷம் பூண்டவன்,

* ஆசாரமில்லாதவன்

இவர்களின் வாழ்க்கை வீணானவை என்று தெரிந்துகொள்ளும்.

No comments:

Post a Comment