Friday, June 20, 2014

ஆபத்துகளை வரமாகக் கேட்ட பக்தை!

ஆபத்துகளை வரமாகக் கேட்ட பக்தை!

நாம் கடவுளை வேண்டும்போது, பொன் - பொருள் வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் எனப் போன்ற வேண்டுதல்களைத்தானே முன்வைப்போம்? ஆனால் ஒரு பக்தை, தனக்கு நிறைய ஆபத்துகள் வர வேண்டும் எனப் பிரார்த்தித்தாளாம்!

ஏன் அப்படி? பேராபத்துகள் சூழும்போது, தன்னிடம் பிரியமுள்ள பகவான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டார்; தன்னை ரட்சிக்க நேரில் வருவார். அப்போது அவரைத் தரிசிக்கும் பெரும்பாக்கியம் கிடைக்கும் என்பதாலேயே அப்படி வரம் கேட்டாளாம் அந்த பக்தை.

அவள் யார் தெரியுமா? பாண்டவர்களின் அன்னையான குந்திதேவி. அவள்தான் கண்ணபரமாத்மாவிடம் இப்படியரு பிரார்த்தனையை முன்வைத்தாள் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். இந்த ஞானநூலின் முதல் ஸ்கந்தம், 8-வது அத்தியாயத்தில், குந்திதேவி செய்த ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திரம் உள்ளது. அற்புதமான அந்த ஸ்தோத்திரத்தில் ஒன்று இங்கே உங்களுக்காக...

நமஸ்யே புருஷம் த்வாத்யமீஸ்வரம் ப்ரக்ருதே: பரம்
அலக்ஷ்யம் ஸர்வபூதானாமந்தர்பஹிரவஸ்திதம்

கருத்து: ஆதிபுருஷனும் ஈச்வரனும் மாயையை விட்டு விலகினவரும் எல்லா ஜீவன்களுக்கும் உள்ளும் புறமும் இருக்கிறவரும்... அப்படி வியாபித்திருந்தாலும் கண்டறிய முடியாதவருமான உம்மை நமஸ்கரிக்கிறேன்.

இதைப் படித்து ஸ்ரீகிருஷ்ணனை வழிபட, சர்வ மங்கலங்களும் உண்டாகும்

No comments:

Post a Comment