Monday, June 16, 2014

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை

தமிழ் தெய்வமான முருகனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் பழமொழிகள் பல உண்டு.
* சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை.
* வடிவேல் அறிய வஞ்சகம் இல்லை.
* சிந்தை நொந்தவனுக்குக் கந்தனே துணை
* வழிக்குத் துணை வடிவேல்
* "கலிக்கும்(வறுமை) கிலிக்கும்(பயம்) கந்தனை எண்ணு
* கேளற்றவர்க்கு வேள்'(கேட்பாரற்றவனுக்கு கந்தனே துணை)
* காக்க காக்க கனகவேல் காக்க இந்தப் பழமொழிகளின் அடிப்படையில் தான், நக்கீரர்,
""நாளென் செயும் வினை தான் என் செயும்?
எனை நாடி வந்த கோள் என் செயும்
கொடுங்கூற்று என் செயும்- குமரேசர்
இருதாளும் தப்பாமல் சார்வார் தமக்கே!
என நவக்கிரகங்கள், எமன், முன்வினை என எதனாலும் தன்னை நெருங்க முடியாது என சவால் விடுகிறார்.

No comments:

Post a Comment